Wednesday, May 5, 2010

பனி


வசந்தம் முழுதும் விழித்திருக்க
பனி முடியும்வரை
தூங்கிக்
கொண்டிருந்தேன்

வசந்தத்தின் துவக்கத்தை
அதிகாலைப் பறவை
அறிவித்துச்
சென்ற பின்புதாம்
கருணை மரங்கள்
கடைசியாய் பனியுதிர்த்திருக்க
வேண்டும்

மொத்தமாய் சுருட்டிக் கொண்டு
பூட்டியிருந்த
மரக்கதவிடுக்கின்வழி
நுழைந்த பனி
கடந்தேயாக வேண்டியதற்காக
என் முன் அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்

12 comments:

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by the author.
chandru / RVC said...

எப்ப கேட்டதுக்கு கவிதை எப்ப வருது? :-)
ஜோக்ஸ் அபார்ட், கவிதை - வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும் - நல்லாயிருக்கு!

நர்சிம் said...

இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொழுது என் பிளாக்க இழுத்து மூடிடலாம்னு தோணுதுங்க.. அற்புதப் படைப்பு.

உயிரோடை said...

//என் முன் அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்//

அட‌ அட‌ க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ அய்ய‌னார்

anujanya said...

நல்லா இருக்கு அய்ஸ்.

//அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்//

பனி பற்றிய இந்த வரிகளைப் படிக்கையில், வெகுநாட்கள் முன் தமிழ்நதி எழுதிய

//இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்! //
என்ற வரிகளுடன் முடியும் கவிதையும் ஞாபகம் வந்தது.

'உறைந்திருந்த கொடும்பனியும்
திரிந்தலைந்த சுடு வெயிலும்'
என்று துவங்கி யாரேனும் கவிதை எழுதக் கூடும் :)

அனுஜன்யா

MSK / Saravana said...

ரொம்ப சில்லுனு இருக்கு தல.. ரொம்பவே நல்லா இருக்கு.. :)

MSK / Saravana said...

http://www.ayyanaarv.com/
இது எப்போ?? கலக்கல். வாழ்த்துக்கள்.
நிறைய நிறைய எழுதுங்க. முக்கியமா நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

பனித்துளி சங்கர் said...

வாழ்வயும் , சாவையும் பனிக்குள் அடக்கிய விதம் மிகவும் அழகு . பகிர்வுக்கு நன்றி !

ஸ்ரீவி சிவா said...

நல்லாயிருக்கு அய்யனார்.
படித்து முடித்ததும் விவரிக்க முடியா உணர்வு.

@நர்சிம்
கமெண்டை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

ய‌சோத‌ர‌ன் said...

//அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்//

சில‌ நொடிக‌ள் அமைதியாக‌ இருக்க‌ வைத்த‌ வ‌ரிக‌ள், இதுவே இக் க‌விதையின் வெற்றியும்கூட‌

Unknown said...

Very Nice Poem Ayyanar after your book release..keep writing.

அது சரி(18185106603874041862) said...

//
நர்சிம் said...
இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொழுது என் பிளாக்க இழுத்து மூடிடலாம்னு தோணுதுங்க.. அற்புதப் படைப்பு.
Wednesday, May 5, 2010 10:45:00 AM GMT+04:00
//

எனக்கும் நர்சிம் போலவே தோன்றுகிறது அய்யனார்...உஙக்ளைப் போல சிலர் கூடையை பூக்களால் நிரப்பும் போது நான் குப்பையால் நிறைக்கிறேனோ என்றே ஐயமாக இருக்கிறது...

Featured Post

test

 test