Thursday, July 5, 2007

பவுத்த அய்யனார் குடுமி அய்யனார் - யார்யா நீங்க எல்லாம்?

மக்கா இந்த அய்யனார்ங்கிற பேர் எப்பவுமே எனக்கு ஆவுறது இல்ல நாலு பேர் இருக்கச்ச சொல்ல முடியுதான்னு எனக்கு பேர் வச்ச பாட்டிய திட்டிட்டு இருப்பேன்.வலைக்கு வந்த உடன் இந்த பேர் நல்லா இருக்குன்னு பெரிய பெரிய அறிவு ஜீவிங்கலாம் சொன்னாங்கன்னு ஒரேயடியா சந்தோசப்பட்டேன்.ஆனா இப்ப என்ன ஆச்சின்னா சுரா பத்தி பேசுனதும் சிலருக்கு சந்தேகம் வந்திடுச்சி ஆரம்பத்தில என் தோழர் நீ காலச்சுவடு அய்யனாரா ன்னு கேட்டிருந்தார்.இல்லைன்னு பதில் அனுப்பினேன் ஆனா சில அனானிகளுக்கெல்லாம் என் திரு உருவம் தேவைப்படுதாம் அதுவுமில்லாம அசுரன் ஐயா சில கேள்விகள் எழுப்பியிருக்கார். அதுனால இந்த சுய விளம்பரம் :)


நானும் கைவசம் இருக்கும் சில புத்தகங்களும்






இபன் பதூத்தா மால் புராதண கடிகாரம் முன்பு





இது ஆபிசுல


இதுல தெளிவா தெரியுறேனா

60 comments:

Anonymous said...

அய்ஸ் இப்போ இந்த படம் எல்லாம்?அதுவும் பெருசா போஸ் வேற...இதுக்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கு...மக்களே உங்களுக்காக இந்த படத்தில் உள்ள சில உண்மைகளை இங்கே சொல்கின்றேன் :P

//நானும் கைவசம் இருக்கும் சில புத்தகங்களும்//

புத்தகம் கையில் வைச்சு படிப்பாங்க.நீங்க என்ன மேன் புத்தகத்தோடு நீங்களும் படுத்துடீங்க.எல்லாம் போஸ்க்கு மட்டும்தானே.புத்தகத்தைத் தொட்டலே தூக்கம் உங்கள் கண்களை தழுவுமே.அதுனால்தானே இத்தனை புத்தகம்.


//இபன் பதூத்தா மால் புராதண கடிகாரம் முன்பு//

இதுல உங்க மூஞ்சே தெரியவில்லை.இந்த படத்தை ஏன் போட்டீங்க.அந்த பொம்மைகளை எல்லாம் நாங்க பார்கவா?

//இது ஆபிசுல//

extra fitting எல்லாம் யாரு கேட்டா?அதுவும் இந்த இருட்டில் உங்க மூஞ்சே காணோம்

//இதுல தெளிவா தெரியுறேனா//

இதுல நீங்க ரொம்ப "தெளிவா" இல்லைன்னு தெளிவா தெரியுது :D

//ஆனா சில அனானிகளுக்கெல்லாம் என் திரு உருவம் தேவைப்படுதாம் //

யார் இது?சத்தியமா யாருமே கேட்டு இருக்க மாட்டாங்க.தமிழ் மணத்தில் உங்க முகத்தைக் காட்ட இது எல்லாம் ஒரு காரணம்.திரு உருவமா?இந்த கொடுமை கேட்க யாருமே இல்லையா??

முத்துகுமரன் said...

தெரிந்த புத்தகங்கள்சில இருக்கிறது போல
அபி கவிதைகள், காமக் கடும்புனல்-மகுடேஸ்வரன், அன்னா அக்மதேவா கவிதைகள்...

சரியா அய்யனார் :-)

கதிர் said...

இந்த பதிவை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.

கதிர் said...

நன்றி அய்ஸ்! போட்டோல்லாம் போட்டா அந்த ரெண்டு அய்யனாரும் நீங்க இல்லன்னு ஆகிடுமா?

உண்மைத்தமிழன் said...

ஒத்துக்குறோம்..

நீங்கள் 'மேன்ஷன் கவிதைகள்' எழுதிய பெளத்த அய்யனார் இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

பாருங்க, எல்லாரும் பக்கம் பக்கமா எழுதி விளக்கம் போடுவாங்க.. உங்களுக்கு போட்டோ போட்டு காட்டி விளக்கம் சொல்ல வேண்டியிருக்கு.. ))))))))

Anonymous said...

யேய் ஆர்ம்ஸ் காட்டறாருடி.

கதிர் said...

இது எல்லாமே பழைய புகைப்படங்கள். தைரியமிருந்தால் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவாரா இந்த பொய்யனார்?

வெளியிடமாட்டார்!

ஏன் என்றால்...

அதை அவர்கிட்டவே கேளுங்க.

நந்தா said...

//இதுல தெளிவா தெரியுறேனா//

இதுல நீங்க ரொம்ப "தெளிவா" இல்லைன்னு தெளிவா தெரியுது :D//

ரிப்பீட்டேய்

அந்த கண்ணு சிகப்பாயிருப்பதன் காரணம் என்னவோ.

கதிர் said...

பருப்பு முதலான எந்த மளிகைச்சாமானுக்கு இங்கு இடமில்லை.

நந்தா said...

அய்யனார் இத்தனை புக்ஸை பார்க்கிறப்போ பொறாமையா இருக்கு.

Anonymous said...

//இது எல்லாமே பழைய புகைப்படங்கள். தைரியமிருந்தால் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவாரா இந்த பொய்யனார்?
//

ஏன் ஏன் ஏன்?

Anonymous said...

/இந்த பதிவை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். //

இதை முதலிலேயே சொல்ல கூடாது :(
ரொம்ப பயந்து போய் இருக்கேன்...

Anonymous said...

//நன்றி அய்ஸ்! போட்டோல்லாம் போட்டா அந்த ரெண்டு அய்யனாரும் நீங்க இல்லன்னு ஆகிடுமா? //

அதானே...இவர் அதற்காக போட்டோ போடலை கதிர்.அது உங்களுக்கு புரியவில்லையா?

கதிர் said...

இவர் அறைக்கு சென்ற போது கடைசி டைனோசர் என்ற கவிதை தொகுப்பை எனக்கு பரிசளித்தார். தேவதச்சன் எழுதியது. (மண்டையில ஓங்கி ரெண்டு அடி அடிச்சிருக்கலாம்).

அந்த கவிதைகள படிச்சவுடனே ஏக்காவ்மே ஏக்கிசான் ரகுதாத்தா இந்தி பண்டிட்டுக்கு வர்ற மாதிரி கோவம்தான் வந்தது. ஏன் ஏன்றால் ஒரு கவிதை கூட புரியவில்லை. கடும்முயற்சிகளுக்கு பின் ஓரளவுக்கு ஒன்றிரண்டு புரிந்தது.

எவன்யா வாங்கி படிக்கறான் இதெல்லாம்?

Anonymous said...

//அய்யனார் இத்தனை புக்ஸை பார்க்கிறப்போ பொறாமையா இருக்கு. //

அவர் புக்கு படிச்சு(பார்த்து) நல்ல தூங்குறது உங்களுக்கு ஏன் பொறமை.இது நல்லது இல்லை

கதிர் said...

படத்திலிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் நான் படித்துவிட்டேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

கதிர் said...

//இதை முதலிலேயே சொல்ல கூடாது :(
ரொம்ப பயந்து போய் இருக்கேன்...//

யெம்மாடி நீ ஏம்மா பயந்தாய்? நான் சொன்னது குழந்தைகளுக்கு! :))

லக்கிலுக் said...

ஆளு சூப்பரா இருக்கீங்களே? நீங்க ஏன் தெலுங்கு படத்துலேயோ, கன்னட படத்துலேயோ ஹீரோவா நடிக்க கூடாது?

நந்தா said...

ஏற்கனவே பல பேரு உங்க கவிதையை படிச்சுட்டு கொலை வெறியில இருக்காங்க. இப்படியா வலிய வந்து சிக்கறது.

Rajasekar said...

Nee kudumi ayyanar illainna...pinnanthalaiya photo eduthu podavendiyathu thaane...???
Ethukku intha vilambaram...??

கதிர் said...

//ஆளு சூப்பரா இருக்கீங்களே? நீங்க ஏன் தெலுங்கு படத்துலேயோ, கன்னட படத்துலேயோ ஹீரோவா நடிக்க கூடாது? //

செம கலக்கல்!

ஜி said...

//தம்பி said...
இந்த பதிவை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கிறேன்.//

//யெம்மாடி நீ ஏம்மா பயந்தாய்? நான் சொன்னது குழந்தைகளுக்கு! :)) //

சரியான வி.வி.சி (ROTFL)

நாகை சிவா said...

அப்படியே கொஞ்சம் வேப்பிலையும் கொடுத்துடு...

முடியல.....

நாகை சிவா said...

//படத்திலிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் நான் படித்துவிட்டேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். //

என்னத்த தலைப்பையா?

Anonymous said...

மணல் மனிதனை காணூம்... :(

Ayyanar Viswanath said...

துர்க்கா நல்லா தூக்கம் வருமா இன்னிக்கி

ஆமாம் முத்து நேரமிருந்தா ரூம் பக்கம் வாங்க இன்னும் சில புத்தகங்கள் கோபி வாங்கி வந்திருக்கான் :)

நாகை சிவா said...

//அந்த கவிதைகள படிச்சவுடனே ஏக்காவ்மே ஏக்கிசான் ரகுதாத்தா இந்தி பண்டிட்டுக்கு வர்ற மாதிரி கோவம்தான் வந்தது. ஏன் ஏன்றால் ஒரு கவிதை கூட புரியவில்லை. கடும்முயற்சிகளுக்கு பின் ஓரளவுக்கு ஒன்றிரண்டு புரிந்தது.///

ஏன் இந்த விளம்பரம் உனக்கு!

ஒரளவுக்கு ஒன்றிரண்டு புரிந்தது என பொய் சொன்ன உன்ன இலக்கியவியாதினு ஒத்துப்பாங்களா....

கதிரவன் said...

//அதுவுமில்லாம அசுரன் ஐயா சில கேள்விகள் எழுப்பியிருக்கார்//

அப்படி என்ன கேட்டார் அசுரன் ?

// தம்பி said... இது எல்லாமே பழைய புகைப்படங்கள். தைரியமிருந்தால் சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிடுவாரா இந்த பொய்யனார்?

வெளியிடமாட்டார்!

ஏன் என்றால்...//

அது அடர்கானப் புலியோட எடுத்த ஃபோட்டோவா ? அதையும் வெளியிடலாமே, அய்யனார் :)

நாகை சிவா said...

//ஆமாம் முத்து நேரமிருந்தா ரூம் பக்கம் வாங்க இன்னும் சில புத்தகங்கள் கோபி வாங்கி வந்திருக்கான் :) //

முத்து, இந்த ஆள் ரூம்க்கு போவதும் கல்ல கட்டி கடலில் குதிப்பது ஒன்னு என் தம்பி கதறுவது உங்களுக்கு கேட்கலையா?

Anonymous said...

தம்மி உன் புகைபடத்தை என் உதவியாளன் மூலம் கிடைக்க பெற்றேன், என் அடுத்த படத்தில் நடிக்க முடியுமா?

படம் டைட்டில் :

விளாங்கதவன் (The confusion)

நாகை சிவா said...

////இதை முதலிலேயே சொல்ல கூடாது :(
ரொம்ப பயந்து போய் இருக்கேன்...//

யெம்மாடி நீ ஏம்மா பயந்தாய்? நான் சொன்னது குழந்தைகளுக்கு! :)) //

அடிச்சான் பாருய்யா சிக்ஸர்....

நாகை சிவா said...

//ஆளு சூப்பரா இருக்கீங்களே? நீங்க ஏன் தெலுங்கு படத்துலேயோ, கன்னட படத்துலேயோ ஹீரோவா நடிக்க கூடாது? //

ஆமாம் ஆமாம்....

கதிர் said...

அய்யய்ய்யோ
நம்ம வலையுலக மக்களின் கிராபிக்ஸ் கிரியேட்டிவிட்டி தெரியாம ஒரிஜினல் புகைப்படங்கள போட்டுட்டாரே!

இந்த புகைப்படங்கள வச்சி என்னென்ன கிராபிக்ஸ் பண்ண போறாங்களோ தெரியல!

யாரும் பண்ணாதிங்கைய்யா, முக்கியமா குசும்பா உன்னை மன்றாடி கேட்டுக்கறேன் இந்த போட்டோக்களை வைத்து காமெடி செய்யாதே! :)

ALIF AHAMED said...

உண்மைய சொல்லுங்க இது யாருடைய போட்டோ...?

Ayyanar Viswanath said...

தம்பி உன் அடுத்த பதிவில் சகிலாக்களின் கொலவெறி தாண்டவம் அதிகமாயிருக்கும் என எச்சரிக்கிறேன்

கதிர் said...

//தம்மி உன் புகைபடத்தை என் உதவியாளன் மூலம் கிடைக்க பெற்றேன், என் அடுத்த படத்தில் நடிக்க முடியுமா?//

நீ இன்னும் படம் எடுக்கறத நிறுத்தலயா?

ALIF AHAMED said...

அய்யனார் said...
தம்பி உன் அடுத்த பதிவில் சகிலாக்களின் கொலவெறி தாண்டவம் அதிகமாயிருக்கும் என எச்சரிக்கிறேன்
///
இந்த அடர்கானக புலியின் சலசப்புக்கெல்லாம் அஞ்சாது சிங்கம் தாண்டவம் ஆடீபாரூங்க நடக்குறதே வேற.... :)

கதிர் said...

//தம்பி உன் அடுத்த பதிவில் சகிலாக்களின் கொலவெறி தாண்டவம் அதிகமாயிருக்கும் என எச்சரிக்கிறேன்//

பாருங்க மக்களே இந்த மாதிரி மிரட்டை தரும் இவரின் குணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். :))

உண்மைய சொன்னா சகிலாவ விட்டு மிரட்டுவிங்களா?

புலி என்னான்னு கேளுய்யா!

நாகை சிவா said...

//தம்பி உன் அடுத்த பதிவில் சகிலாக்களின் கொலவெறி தாண்டவம் அதிகமாயிருக்கும் என எச்சரிக்கிறேன் //

தனிப்பட்ட முறையில் கொலை மிரட்டல் விடும் அய்யனாரை கன்னா பின்னாவே கண்டிக்குகிறேன்

ப்ரியன் said...

ஸ்ரேயாவை ஹீரோயினா வைச்சு படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்,ஹீரோவா உங்க கால்சீட் கிடைக்குமா?

நாகை சிவா said...

//புலி என்னான்னு கேளுய்யா! //

தம்பி என் தங்கமே, நீ சொல்லுவதற்கு முன்பே கேட்டுடேன் ராசா.

நாகை சிவா said...

//ஸ்ரேயாவை ஹீரோயினா வைச்சு படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன்,ஹீரோவா உங்க கால்சீட் கிடைக்குமா? //

பாருடா... பாருடா....

காயத்ரி சித்தார்த் said...

ச்சே!! சூப்பர் அய்யனார்..

புக்ஸும், இபன் பதூத்தா மாலும்!!!

:))

கோபிநாத் said...

\\எவன்யா வாங்கி படிக்கறான் இதெல்லாம்? \\

அய்யனார்;)

காயத்ரி சித்தார்த் said...

//எவன்யா வாங்கி படிக்கறான் இதெல்லாம்? //

என்னங்க இது? என்னதான் கோபம்னாலும் இப்டியா பொதுவுல வந்து அவன் இவன்னு பேசறது?!!!

:)))

கோபிநாத் said...

\ தம்பி said...
படத்திலிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் நான் படித்துவிட்டேன் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். \\

எல...பார்த்துவிட்டேன்னு சொல்லு....படித்துவிட்டேன்னு எதுக்கு பொய் சொல்லற..

காயத்ரி சித்தார்த் said...

//ஒரளவுக்கு ஒன்றிரண்டு புரிந்தது என பொய் சொன்ன உன்ன இலக்கியவியாதினு ஒத்துப்பாங்களா...//

:))))

//யாரும் பண்ணாதிங்கைய்யா, முக்கியமா குசும்பா உன்னை மன்றாடி கேட்டுக்கறேன் இந்த போட்டோக்களை வைத்து காமெடி செய்யாதே! :) //

ஆமா!! ஆமா!! வேண்டாம் ப்ளீஸ்ஸ்..

கோபிநாத் said...

\\அய்யனார் said...
துர்க்கா நல்லா தூக்கம் வருமா இன்னிக்கி

ஆமாம் முத்து நேரமிருந்தா ரூம் பக்கம் வாங்க இன்னும் சில புத்தகங்கள் கோபி வாங்கி வந்திருக்கான் :) \\

அய்யோ...இன்னுமா என்னை நம்பிக்கிட்டு இருக்கீங்க...உங்கக்கிட்ட ஒரே காமெடி தான் அய்ஸ் ;))

முபாரக் said...

//ஆளு சூப்பரா இருக்கீங்களே? நீங்க ஏன் தெலுங்கு படத்துலேயோ, கன்னட படத்துலேயோ ஹீரோவா நடிக்க கூடாது?//

தல லக்கி,
இதுல ஏதும் உள்குத்து இல்லியே?

தமிழ் படத்துல நடிச்சா ஆகாதா :)

எப்டியோ வெளியே மிதக்கும் அய்யா புண்ணியத்துல அய்யனார தரிசிக்க முடிஞ்சிது.

அபி அப்பா said...

2 வது போட்டோவில ஏன்யா உக்காந்து எடுத்து இருக்கே நின்னுகிட்டு எடுத்தா என்னா?

அபி அப்பா said...

//புலி என்னான்னு கேளுய்யா!//

நான் கேக்குறேன்! "என்னா?"

கோபிநாத் said...

\ அபி அப்பா said...
2 வது போட்டோவில ஏன்யா உக்காந்து எடுத்து இருக்கே நின்னுகிட்டு எடுத்தா என்னா?\\

தலைவா பதிவை பார்த்திங்களா? இல்லையா?

அய்யனார் said...

அண்ணா, என்னோட பக்கத்துல உங்க போட்டோ சரியா இருக்குதா என்று பார்த்து சொல்லவும்.

Anonymous said...

@கதிர்,ஜி,நாகை சிவா
எனக்கு குழந்தை மனசுன்னு சொல்ல வந்தேன் கதிர்.

ஜி கதிர் என்னை நக்கல் செய்தால் என்ன சந்தோசம் உங்களுக்கு.
சிவா உங்களுக்கும் என் மேல கொல வெறியா?எல்லாரும் நல்ல இருங்க

Anonymous said...

///துர்க்கா நல்லா தூக்கம் வருமா இன்னிக்கி//

ஹிஹி.என்ன அய்ஸ் நீங்க.நான் தான் நல்ல தூங்கிட்டுதானே இருக்கேன்.உங்களுக்குதான் இன்னைக்கு தூக்கம் கெட போகுது.உங்களை ஹீரோ ரேஞ்சுக்கு உசுப்பேத்தி விட்டாச்சு...என்ன நடக்க போகுதோ.

Jazeela said...

அய்யனார் இந்த பின்னூட்டம் போடறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. பயர் பாக்ஸ்ல உங்களுடைய இந்த பதிவு திறக்கமாட்டிங்குது. இப்ப IE வந்து எழுதுறேன். அப்படி என்ன அவசரமென்றால் முக்கியமான உண்மையை எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டாம் 'சட்டியில் இல்லாததெல்லாம் அகப்பையில் வந்திருக்கு' ;-)
பின்னூட்டங்கள் அருமை. ;-)அதெப்படிப்பா இரண்டு வரி பதிவு போட்டாலும் அனானிகள் குவிஞ்சிடுறாங்க உங்க பதிவுல மட்டும்?

தமிழ்நதி said...

ரொம்ப நல்லா 'படம்'காட்டியிருக்கீங்க அய்யனார்... இனியாவது சிக்கலில்லாம சிக்குதா பார்க்கலாம் :)

அய்யனார் said...

எங்கள் பழைய பின்னூட்டங்கள் எங்கே?
வெளியிடுங்கள். ரசிகர்களுக்கு மதிப்பளிக்காவிட்டால்.. நான் ஊர் முழுக்க போக வேண்டியதிருக்கும்.

லொடுக்கு said...

யோவ்,
பார்க்க சாந்த சொரூபியாத்தானய்யா இருக்க. கவிதையில மட்டும் ஏன் இந்த வெறி?

நண்பர் முத்துகுமரன் சொன்னது உண்மையா? ;)


தம்பியின் பின்னூட்டங்கள் அருமையிலும் அருமை.

குட்டிபிசாசு said...

// "பவுத்த அய்யனார் குடுமி அய்யனார் - யார்யா நீங்க எல்லாம்?"//

ஐய்யோ!! இவரு பவுத்தமும் இல்ல. குடுமியும் இல்ல. எங்க ஊருகாரு. யாரும் கலாய்க்காதீங்க!

Featured Post

test

 test