நதியின் விரிவுகளை
குளுமைகளை
சலனமில்லா அடி மணற் தணிவுகளை
கரையோர சலசலப்புகளை
எங்கிருந்து வருகிறது
எங்கு முடிகிறது
எனும் புதிர்களுக்கான துவக்கங்களை
ஒருபோதும் எதிர்கொண்டதில்லை
கண்ணுக்கெதிரில் மண் குழம்பலாய்
நுரைப்படலமாய்
இரு கரைகளையும் தொட்டபடி
சுழியிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு...
......... 0 ..............
நதிகள் வற்றாதாமே
அப்படியா?
நதிகள் பிரம்மாண்டமானவையாமே
அப்படியா?
நதியோர கரைகளில்
உயரமான மரங்கள்
மிக அழகாய் பூத்திருக்குமாமே
அப்படியா?
..............
எப்போதும் இருக்கிறது
நதிகளுக்கான ஏக்கம்...
......... 0 ..............
செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி
......... 0 ..............
நதிகள் வற்றுவதில்லை
ஆனால் சாக்கடை கலந்த நதியுண்டு
பூக்கள் மிதக்கும் நதி மிகவும் அழகானது
ஆனால் பிணங்களும் இப்போது நதியில்தான்
மிதக்கின்றன..
......... 0 ..............
நதிகளோடு புதிர்களும்
புதிரின் பின்னால் அலைவுகளும்
அலைவின் பின்னால் சோர்வுகளும்
சோர்வின் பின்னால் வெறுமைகளும்
வெறுமைக்குப் பின்
போடா ங்கோத்தா தான்!
......... 0 ..............
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
-
மக்கா இந்த அய்யனார்ங்கிற பேர் எப்பவுமே எனக்கு ஆவுறது இல்ல நாலு பேர் இருக்கச்ச சொல்ல முடியுதான்னு எனக்கு பேர் வச்ச பாட்டிய திட்டிட்டு இருப்பே...
-
எந்த ஒரு திரைப்படத்தை பார்க்க நேரிட்டாலும் முதலில் தெரிந்து கொள்ள விழைவது அதன் இயக்குனர் யார் என்பதுதான்.நடிகர் நடிகைகளை காட்டிலும் என்னை அத...
3 comments:
இது கவிதையில்ல! முடியத்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கவுஜ! :)
ம்ம்ம்...நல்லாயிருக்கு.
//செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி//
''கொண்டாடுகிறேன்''
Post a Comment