Thursday, October 11, 2007
பொதுப்படுத்தி மகிழ்தல்
கொன்றை மரங்களைப் போலில்லை
இப் பேரீச்சைகள்
மஞ்சணத்திப் பூச்செடிகளையோ
அடர்வாய் பூக்கும்
ஆவாரம் பூச்செடிகளையோ போலில்லை
இந்த தொட்டிப் பூச்செடிகள்
இருப்பினும்
இவற்றைப் பார்க்கும்போது
அவற்றை நினைக்காமல் இருக்க முடிவதில்லை
அவையாய் இல்லாமலே
அவற்றை நினைவுபடுத்துவது
இவற்றின் சிறப்பா? அல்லது
நினைவு கொள்ளும் நினைவின் சிறப்பா?
எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதை...
3 comments:
நன்றாக இருக்கிறது.
//எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை...//
உங்கள் கவிதைகளை போல என்று சொல்லலாம்தான்.
http://aadumaadu.blogspot.com
//எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....//
என்றென்றும் :)
அந்த படத்தில் இருப்பது ஆவாரம்பூ தானே
Post a Comment