Saturday, November 6, 2010

அத்தியாயம் 5. தாண்டவம்

சீராளனை முத்தமிட்டதைப் பார்த்து குணாவும் தாமசும் சிரிக்க ஆரம்பித்தனர். “தாமஸ் சரக்கு போடு” என்றேன் சப்தமாக. இதோ என ஐந்தாவது ரவுண்டை ஊற்றத் துவங்கினான். தள்ளாடியபடியே அந்த டம்ளரை எடுத்து ஒரே மூச்சில் குடித்தேன். “டீசண்ட் குடி எங்கபா காணாம பூடுச்சி?” என நிதானமாய் கேட்டான் குணா. எனக்கு இப்போது சந்தேகம் வந்தது. குடி எப்போது நம்மை முழுமையாய் வெளிப்படுத்துகிறது?.. குடித்த பின்னரா? அல்லது குடித்துக் கொண்டிக்கும்போதா? நிதானம் இருக்கும்போதா? அல்லது நிதானம் தவறியபோதா? எது உண்மையான நான்? போதையற்ற நானா? போதையுள்ள நானா? இன்று ஏன் இவர்கள் பேசும் எல்லா வார்த்தையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது? கேள்விகள்.. கேள்விகள் ஏகப்பட்ட கேள்விகள்.. அழுத்தம் தாங்காது தலையை உதறியபடி சீராளனின் சட்டையைக் கெத்தாய் பிடித்தேன். “சீராளா இப்ப, இந்த இருட்ல, தண்ணி ஓடுர கால்வாய்ல, வுழுந்து பொரளனும்... பொண்ணு, கிளவி எவளா இருந்தாலும் பரவால்ல... ஆனா இப்ப.. இந்த நிமிஷம் வேணும்” என்றேன்.

தாமஸ் எழுந்து வந்தான். “வா சாப்டலாம்” எனக் கூப்பிட்டான். “நோ சாப்பாடு ஒன்லி வுமன்” எனக் குழறலாய் கத்தினேன். “யெஸ் யூ வில் கெட் இட் ஃபர்ஸ்ட் ஈட்”
நான் கோணலாய் மடங்கி உட்கார்ந்தேன். குணா ஒரு தட்டில் சாதம் போட்டு மீன் குழம்பு ஊற்றினான். மீன் துண்டுகளை முள் எடுத்து தனியே தட்டில் வைத்தான் சீராளன். நான் மிகுந்த பசியோடும் துவளும் போதையோடும் சாப்பிட ஆரம்பித்தேன். மற்றவர்களும் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தனர். குணா டம்ளரை தாமஸ் பக்கமாக நகர்த்தினான். தாமசும் குணாவும் ஆறாவது ரவுண்டை மிக நிதானமாக ஆரம்பித்து வேகமாக முடித்தனர். சீராளன் ஏழாவது ரவுண்டில் தன் டம்ளரையும் சேர்த்து நகர்த்தினான். நான் சாப்பிட்டு முடித்தேன். மேலும் சாதம் வைத்தபோது போதும் என்றேன். தண்ணீர் குடித்ததும் லேசாய் போதை நிலை கொண்டது. “எதுவும் சாப்டல… டயர்ட் வேர.. அதான் தூக்கிருச்சி” என்றேன். மூவரும் லேசாய் புன்னகைத்தபடி சாப்பிட்டனர். “தூக்குறதுக்கு தான குடிக்கிறோம் இல்லனா எதுக்கு இந்த கருமத்த குடிச்சிகிட்டு” என்றான் குணா. நிலா மிகப் பிரகாசமாய் இருந்தது. நான் சற்றுத் தள்ளிப் போய் நின்று சிகெரெட் பற்ற வைத்துக் கொண்டேன். இந்த இரவும் போதையும் எப்போதும் அனுபவித்திராத ஒன்றாக இருந்தது. விஜியுடனான கடற்கரை இரவு நினைவில் வந்து போனது. சிகரெட்டை முடித்து காலில் நசுக்கியபோது அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர்.

குணாவும் தாமசும் உள்ளே படுக்கப் போனார்கள். சீராளன் செல் போனில் யாரையோ அழைத்தான்.
நாந்தான்
…….
நம்ம பிரண்டு ஊர்ல இருந்து வந்திருக்காப்ல. ஆசப்படுராரு.
……..
மீனாட்சி?
…….
அப்புறம் என்ன கூட்டிகிட்டு வந்து சேரு
…….
“நீ எதுக்கா? சாயந்திரம் பண்ணது போதைக்கு முன்ன… இப்ப பின்ன… பின்ன்ன..” என அழுத்திச் சொல்லியபடியே விக்கி விக்கி சிரித்தான் சீராளன்.

சற்று நேரத்தில் இரண்டு பெண்னுருவங்கள் தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்தன. நாங்கள் இருவரும் வலது புறமாய் இருந்த கிணற்றடிக்கு நகர்ந்தோம். நிலா வெளிச்சத்தில் கிழவி என சொல்லப்பட்ட பேரிளம் பெண் ஒளிர்ந்தாள். இவளயா கிளவி என்றார்கள்! பாவிகள். சீராளன் ஆசையாய் போய் கட்டிக் கொண்டான். அவள் கூச்சத்தில் உதறினாள். “என்னம்ல நீ” என்றாள் லேசாய் கிறங்கியபடி. மீனாட்சி ஆசையும் கூச்சமுமாக என்னைப் பார்த்தாள். நல்ல திடமான உடல். குண்டு முகம். முப்பத்தைந்து வயதிருக்கலாம். நான் அவள் கையைப் பிடித்தேன்
“பேர் என்ன”
“பேர் எதுக்கு”
“சும்மாதான் தெரிஞ்சிக்க” என்றபடியே அவளின் தோளில் கை போட்டேன். அவள் என் கையை விலக்கியபடியே “அங்கிட்டு போய்டலாம்” என இருளுக்காய் கை காண்பித்தபடி சிணுங்கினாள். சீராளனும் அவளும் “நாங்க எங்க எடத்துக்கு போறோம்” என சிரித்தபடியே இருளில் எங்கோ மறைந்தார்கள். நான் இவளைக் கூட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினேன். நிலா கிணற்று நீரில் தளும்பிக் கொண்டிருந்தது. “கெணத்துக் குள்ளயா?” என்றாள் “ஆமா” “அய்யோ குளிரும்” என வர மறுத்தாள். ”குளிராது” என்றபடியே அவளின் உதடுகளைக் கவ்விக் கொண்டேன். கிணற்றின் உள்ளே சதுரமாய் சுற்றிலும் சிமெண்ட் திட்டு கட்டப்பட்டிருந்தது. சிமெண்ட் திட்டுக்களில் பாதம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருந்தது. அத் திட்டுக்களிலிருந்து மேலே வர படிக் கற்கள் சுற்றுச் சுவரில் பதிக்கப்பட்டிருந்தன. மிக வசதியான நேர்த்தியான கிணறு,

மீனாட்சியின் பேரழகைப் பார்த்தபின்பு என் போதை விலகி மறைந்து மூளை பரபரவென விழித்துக் கொண்டது. அவளை படிக்கட்டுகளின் வழி கீழிறக்கி சிமெண்ட் திட்டில் நிற்க வைத்து அணைத்துக் கொண்டேன். முத்தமிட்ட படியே ஆடைகளை கழற்றினேன். அவள் அத்தனை கூச்சம் இல்லாதவளாகத்தான் இருந்தாள். ஆடைகளை கழற்றி எறிந்த அவளுடல் வெகு திண்மமாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் அவளொரு சிலையைப் போல் ஒயிலாக நின்று கொண்டிருந்தாள். அத்தனை கனமான முலைகளை நான் அதற்கு முன்பு பார்த்ததில்லை. அகன்ற இடுப்பும் மிகப் பெரும் தொடைகளையும் கொண்ட வாளிப்பான உடல். என்னால் அவ்வுடலை வெற்றி கொள்ள முடியாதோ என அடிவயிற்றில் பயம் லேசாய் எட்டிப் பார்த்தது. நான் அவளின் மீது ஒரு வேட்டை நாயைப் போலப் பாய்ந்தேன். பாதம் மூழ்கும் நீரில் அவளுடலைக் கிடத்தினேன். நீர் விலகியது. அவளின் பருத்த ஆகிருதியில் என்னை நுழைத்தேன். வேகம்.. வேகம்.. …நிதானம். வேகம் நிதானம். அவள் ஒரு கட்டத்தில் பைத்தியமானாள். என்னை அப்படியே அள்ளி அவளின் துவாரங்களுக்குள் நுழைக்க முயன்று தோற்றாள். பின்பு என்னை நீரில் கிடத்தி மேலே அழுத்தமாய் பரவி மெதுவாய் விழுங்க ஆரம்பித்தாள். நானும் பைத்தியமானேன்.

அப்படியே இருவரும் மயங்கிக் கிடந்தோம். ஏதோ அரவம் கேட்டு விழிக்கையில் சீராளனும், அந்த ஒளிரும் பேரிளம் அழகியும் ஆடைகளில்லாமல் படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்பேரிளம் ஒளிரழகி என்னருகில் வந்து தன் இரு கைகளினால் நீரில் மிதந்து கொண்டிருந்த என்னுடலை ஏந்திக் கொண்டாள். சீராளன் கால்கள் விரித்துப் படுத்துக் கிடந்த மீனாட்சியின் யோனித் துவாரத்தினுள் தலை வழியாய் உள்ளே நுழைய ஆரம்பித்தான். அப்பேரிளம் அழகி என்னை கையில் ஏந்திக் கொண்டு நீரில் குதித்தாள். நாங்கள் ஆழ, ஆழ போய் கொண்டிருந்தோம். சுவாசம் சீராய் இருந்தது. மூச்சுத் திணறல் இல்லை. நீரின் அடியாழத்தினுள் இதே போன்றதொரு சிமெண்ட் தரை இருந்தது. அதில் என்னை மிக மெதுவாய் கிடத்தினாள். என்னுடைய கால்கள் இரண்டும் மறைய ஆரம்பித்திருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. பாதங்கள் மெல்ல மீன் வாலாக மாறத் துவங்கியிருதன. அவள் அவசரமாய் என் குறியை சுவைக்க ஆரம்பித்தாள். சீக்கிரம் அது காணாமல் போய்விடும் என்கிற பதட்டம் அந்த சுவைப்பில் இருந்ததை உணர முடிந்தது. எனக்கும் பயம் துவங்கியது. அப்பேரிளம் அழகியை மல்லாக்கத் தள்ளி கால்களை விரித்து தலையை அவளின் யோனியினுள் திணிக்க ஆரம்பித்தேன். அவள் அலறினாள். என் முகம் முழுவதும் வழுவழுப்பாய் உள்ளே போனது. அவள் யோனிக்குள் ஒரே நிசப்தம். கடலின் ஆழ அமைதி. காற்றே இல்லாத மெளன வெளி. எனக்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. தாகத்தில் நாக்கு வறண்டது. கழுத்து அவளின் பிளவுகளில் சிக்கிக் கொண்டிருக்க கூடும். தலையை அசைக்க முடியவில்லை. நான் மூச்சுக்காய் அலைந்தேன். சாகும் நொடியின் வாலைத் தொட்டேன். திடீரென சுவாசம் கிட்டியது. நுரையீரல் வாய் பிளந்து காற்றை ஏற்றுக் கொண்டது. என்னருகில் பொத் தென ஒரு உடல் நீரில் விழும் சப்தம் கேட்டது. கண் விழித்துப் பார்த்தேன் சீராளன் கையில் ஒரு தடியினை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். யாரோ ஒரு தடித்த ஆண் கிணற்று நீரில் விழுந்திருந்தான். பின் மெல்ல நீந்தி கரையேறிக் கத்தினான்.

“தேவுடியா பசங்களா எங்க வீட்டு பொம்பளங்கள கூட்டி வந்து எங்க வீட்டு தோப்புலயே நட்ட நடு ராத்திரில ஜல்சாவாட பன்றீங்க”
அப்போதுதான் எனக்கு உறைத்தது அவன் என் கழுத்தில் கால் வைத்து அழுத்திக் கொல்ல முயன்றிருக்க கூடும். சரியான நேரத்தில் சீராளன் காப்பாற்றி இருக்கிறான். அருகில் மீனாட்சி மண்டை பிளந்து கிடந்தாள். சற்று நன்றாய் உற்றுப் பார்க்கையில் நீர் முழுக்க இரத்தமாகியிருந்தது.

“இப்படி எவன் எவன் கூடவோ கால விரிச்சி கெடந்திருக்கியேடி” என மீனாட்சியின் உடலைப் பார்த்தபடி கரையில் உட்கார்ந்து அழுதான்.

சீராளன் தடியை கையில் வைத்தபடி, என்னை எழுந்திரிக்க சொன்னான். நான் எழுந்து அவன் பக்கமாய் போய் நின்றேன். அவன் அணிந்திருந்த லுங்கி முழுக்க இரத்தமாகி இருந்தது. “இந்த தாயோலி ஓனரம்மாவையும் கொன்னுட்டான்” என்றபோது சீராளனின் உடல் நடுங்கியது. சிமெண்ட் திட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தவன்
“இந்த ரெண்டு தேவடியாளுங்கள மட்டுமில்லடா, உங்களையும்தான்” என்றபடியே என் மீது பாய்ந்தான்.

சீராளன் வைத்திருந்த தடி மீண்டும் அவன் தலையைத் தாக்கியது. அவன் சமாளித்து எழுந்தான். நான் சுதாரித்து அவனின் அடிவயிற்றில் தலையைக் கொண்டு மோதினேன். ஹம்மா வென அடிவயிற்றிலிருந்து அலறியபடி மீனாட்சியின் உடல் மீது விழுந்தான். இரண்டு உடலும் புரண்டு நீரில் விழுந்தன. சீராளன் ஓடிப்போய் மீனாட்சி உடலின் காலைப் பிடித்துக் கொண்டான். நான் நீரில் விழுந்தவனின் தலை முடியைப் பிடித்திழுத்து வேகமாய் சிமெண்ட் திட்டில் மோதினேன். இரத்தம் கொப்பளித்து. நீரின் கருப்பு வண்ணம் மெல்ல சிவப்பு வண்ணத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. அவன் அப்போதும் உடலை அசைத்தான். சுவாசத்தினுக்காய் தலையை நீர்ப்பாம்பு போல வெளியில் நீட்டினான். நான் அவன் தலையை நீருக்குள் அழுத்தி வலுவாய் அவன் திமிறல்களை அட்க்கினேன். சற்று நேரத்தில் அவன் உடல் துவண்டது.

சுவாசத்தை சோதித்து விட்டு அவனைத் தூக்கி சிமெண்ட் திட்டில் கிடத்தினேன். சீராளன் மீனாட்சியின் உடலை தூக்கி திட்டில் போட்டிருந்தான். இருவரும் களைத்துப் போயிருந்தோம்.

“இது இப்படி ஆகும்னு நெனக்கல பாஸ் சாரி” என்றான்.
“பரவால்ல நீ போய் இன்னொரு பாடிய தூக்கிட்டு வா. மூணுதையும் சேர்த்து கட்டி இதுல போட்டுட்டு போய்டலாம்” என்றேன்.

சீராளன் தலயைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தான். “அது சரிப்படாது.. ஓனரம்மா புருசன் காலைல எழுந்து மூணு பேரயும் தேட ஆரம்பிப்பான்.. போலிசு வரும்… இங்க தங்கியிருக்க நம்மள கேள்வி கேட்கும்…”
“நீங்க எவ்ளோ நாளா இங்க இருக்கிங்க?”
“ரெண்டு மாசமா”
“நீங்க மூணு பேர் இங்க இருக்கிறது எவ்ளோ பேருக்கு தெரியும்?”
“இந்த ஓனரம்மா அவ புருசன் அப்புறம் இந்த மீனாட்சி அவ புருசன்”
“ஆக நாலு பேருக்குதான் தெரியும்”
“ஆமா”
“தோப்புக்கு வேலைக்கு வர்ரவங்க?”
“பகல்ல நாங்க யாரும் இங்க இருக்கிறதில்ல யார் மூஞ்சும் யாருக்கும் தெரியாது”
“நல்லதா போச்சு”.
“இப்ப ஓனரையும் போட்டுர்லாம். எல்லா பாடியயும் ஒரே வீட்ல வச்சி நெருப்பு வச்சிடலாம். நாம விடியறதுக்குள்ள கெளம்பிடுவோம்”
“சரி நான் போய் தாமசயும் குணாவயும் கூட்டி வர்ரேன்.. நீ மெல்ல இந்த ரெண்டு பாடியயும் மேல தூக்கி போடு” என சீராளன் கிளம்பி சென்றான்.

எனக்கு தலை வலித்தது. அப்போதுதான் உடலில் துணிகள் இல்லாமல் இருப்பது உறைத்தது. எழுந்து போய் ஆடைகளை அணிந்து கொண்டேன். பாக்கெட்டில் சிகெரெட்டும் தீப் பெட்டியும் இருந்தது. மிகுந்த தவிப்புடன் சிகரெட்டைப் பற்ற வைத்தேன்.

தீயொளியில் மீனாட்சியின் சிதைந்த தலை கோரமாய் இருந்தது. கல்லைத் தூக்கி வந்து தலையில் போட்டுக் கொன்றிருக்கிறான் அது கூட தெரியாது ஏதோ கனவில் திளைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். என் மீது எனக்கே கோபமாய் வந்தது. மீனாட்சியின் சிதைந்த உடலைப் பார்க்க மனம் மீண்டும் விரும்பியது தீக்குச்சியினைப் பற்ற வைத்தேன். இரு கால்கள் அகற்றி, தலை நசுங்கி, முகம் சிதைந்து, உடல் முறுக்கிக் கிடந்தது. சற்று நேரத்திற்கு முன்பு வரை சிலையைப் போலிருந்த உடலிது. வெற்றி கொள்ள பயப்பட்ட பேருடல். நான் தாங்கமாட்டாது கத்தினேன். அப்படியே மடங்கி உட்கார்ந்து விம்ம ஆரம்பித்தேன்.

தாமஸ் படியில் இறங்கி வந்தான். ”அழாத. இது என்ன.. இன்னும் பாக்க வேண்டியது எவ்ளோ இருக்கு… எழுந்திரு” என்றான். நான் எழுந்து நின்றேன். மீனாட்சியின் உடலைத் தூக்கினேன். தாமஸ் அவள் கணவனின் உடலைத் தூக்கினான். மெல்ல படிகளை ஏற ஆரம்பித்தோம்.

கரைக்கு வந்ததும் இரண்டு உடல்களையும் தரையில் போட்டோம். மூச்சு வாங்கியது. மீனாட்சியின் உடல் எப்படியும் எண்பது கிலோவிற்கு மேலிருக்கும். அவனோ நூறு கிலோ இருப்பான். சற்று மூச்சு வாங்கலிற்கு பிறகு இருவரும் கால்களைப் பிடித்துக் கொண்டு அவ்வுடல்களை இழுத்துக் கொண்டு தோப்பின் நடுவிலிருக்கும் ஓனர் வீட்டுக்காய் போனோம்.

நாங்கள் மூச்சு வாங்கியபடி அங்கு போகையில் குணா ஏற்கனவே ஓனரின் கழுத்தை அறுத்திருந்தான். அறுபது வயது மதிக்கத் தக்க உடல். மிகவும் நைந்து போயிருந்தார். ஓனரம்மாவின் துக்கம் நியாயமானதுதான் எனத் தோன்றியது. சீராளன் ஓனரம்மாவின் உடலைத் தூக்கி வந்தான். நான்கு உடல்களையும் வீட்டின் கூடத்தில் கிடத்தினோம். பெண்கள் உடலுக்கு உள்ளே இருந்து சேலையை கொண்டு வந்து சுற்றினோம். குணா உள்ளறைக்கு சென்று பீரோவைக் குடாய்ந்தான். பணக்கட்டுகளையும், நகைகளையும் ஒரு தோல் பையினுள் போட்டுக் கொண்டு வெளியில் வந்தான்.“எதுக்கு வீணா தீயில எரியனும்னுதான்” என்றான். தாமஸ் மற்ற அறையில் புகுந்து அலசினான். விலை உயர்ந்த பொருள் என்றெல்லாம் ஒன்றும் அவ் வீட்டில் இல்லை. மேலும் சில பணக் கட்டுகளை அரிசிப் பானையிலிருந்து குணா கொண்டு வந்தான். வீட்டை மேலும் தீவிரமாய் அலசியதில் இன்னும் சில ஆயிரம் ரூபாய் கட்டுக்கள் கிடைத்தன. போதுமென தோன்றியது.
தாமஸ் கட்டளைகளை பிரப்பிக்கத் துவங்கினான்.

“குணா நீ போய் பம்பு செட்ட போடு கிணத்துல இரத்தம் போகனும்..”
”சீராளா நீ நாம தங்கி இருந்த வீட்டுக்கு போ.. பாத்திரம், துணி எல்லாத்தயும் மூட்ட கட்டி கார் டிக்கில போடு... அங்க யாரும் இருந்ததுக்கான அடையாளம் இருக்க கூடாது.. கதவ பூட்டிட்டு இங்க வா..”
தாமஸ் என்னைப் பார்த்து ”தண்ணி வர்ர காவாய இந்த வழிக்கா வெட்டி விடு தண்ணி தோப்பு முழுக்க பாயட்டும். ரெண்டு பாடிய கெணத்தடில இருந்து இழுத்துட்டு வந்திருக்கோம் இரத்தம் ஒழுகி இருக்கலாம்” என்றான் எல்லாரும் விலகினோம்.
எல்லாவற்றையும் முடித்து விட்டு பத்தே நிமிடத்தில் திரும்பி வந்தோம்.
தாமஸ் வாயில் சிகெட்டை வைத்தபடி பேசினான்

“குணா நீ முன்ன போய் வண்டிய கிளப்பு. கார் தடம் தெரியுமா ?”
“இல்ல தெரியாது.. காஞ்ச திடமான மண்தான்”
“சரி தயாரா வச்சிக்க போ”
“உள்ள போய் கேஸ தொறந்து விடு சீராளா”
“வா வெளில போய்டலாம்” என்றபடியே என் கையைப் பிடித்துக்கொண்டான். வீட்டை விட்டு வெளியேறினோம்.
சீராளன் சமையலறைக்குப் போய் கேஸைத் திறந்து விட்டான். உள் கதவைப் பூட்டி விட்டு கம்பியில்லாத சன்னலின் வழியே வெளியே குதித்தான். சன்னல் கதவைத் திரும்ப மூடினான். மூவரும் மெளனமாக அகன்றோம். சற்றுத் தொலைவிலிருந்து தாமஸ் தீக்குச்சியின் மருந்து முனையை தீப்பெட்டியில் 90 டிகிரியில் நிறுத்தி நடு விரலால் சுண்டி விட்டான். அது தீயுடன் விரைந்து கதவருகில் விழுந்து சற்று நொடி கண்ணிமைத்து குபீரெனப் பற்றியது. நாங்கள் விலகிச், சிதறி ஓடினோம். அந்த வீட்டின் மின்சார ஒயர்கள் பற்றிக் கொண்டு வெடித்தன. வீட்டின் ஓடுகள் சிதற ஒரு பெரும் சப்தம் கேட்டது. தீ ஒரு விலங்கென ஆங்காரமாய் மேலெழுந்தது. தென்னை மரத் தோப்பு நிலவைத் துரத்திவிட்டு தீயில் ஒளிர்ந்தது. நாங்கள் வண்டியில் பாய்ந்து ஏறி, விரைந்து, வெளியேறினோம்.

நான் தலையைப் பிடித்துக் கொண்டபடிக் கத்தினேன் “நாளைக்கு காலை நமக்கு கொல்லி மலைல விடியனும்” குணா இரண்டே நிமிடத்தில் திருச்சி சாலையைத் தொட்டான். வண்டி ஒரு ராட்சத மிருகத்தைப் போல சாலையில் பாய்ந்தது.

- மேலும்

11 comments:

Anonymous said...

kaathaala kollimalai poyirum...sema speed :)

Anonymous said...

ஐந்து பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சாச்சு... செம ஸ்பீட்... கலக்குங்க..

அன்புடன்,
சுபைர்

Anonymous said...

நாகராஜனுக்கு என்னா ஆச்சு?? விஜிக்கு என்ன ஆச்சு??

ராத்திரி தூக்கம் வரல சாமி :)

அன்புடன்,
சுபைர்

Cable சங்கர் said...

எல்லா அத்யாயங்களையும் படித்துவிட்டேன்.. சும்மா பரபரன்னு ஓடுது.. அடுத்த அத்யாயத்துக்கான ஆர்வத்துடன்..

அருண் said...

கேபிள் அண்ணனின் வலைப்பூவில் பார்த்து விட்டு ஒரே மூச்சில் படித்தது,விபரிக்க வார்த்தைகள் இல்லை.அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Anonymous said...

Really very fast story writing. Please keep it up. Do not worry about comments. As i know, this story might reached more than 1000 persons. But no body wants to comment only because of your porn type story. Do not worry about anything, this may rock in future.

Surya.
surya3180@yahoo.com

Ramprasad said...

Super Sir...Pattaya kelapthu kathai.. waiting for the next episode.

madu said...

மிக அருமையான நடை. பல அற்புதமான அவதானிப்புகள், வர்ணனைகள்.
கதைகள் ஒன்றும் "U" ரேடிங் உடன் எழுத படுவதில்லை. காமத்தின் தேவையை கதையும் களமும்தான் தீர்மானிக்கின்றன. என் பார்வையில் அவை இங்கு திணிக்கபடவில்லை. கதையின் நடையை, போக்கை எழுத்தாளரின் அகபோக்காக கொள்வது ஒரு முதிர்ச்சியற்ற வாசிப்பனுபவத்தைதான் காட்டுகிறது. அத்தகைய எதிர் விமர்சனங்களை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

இதை அறிமுகபடுத்தியமைக்கு கேபிள் சங்கர் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

Came to know about your story from Cable Sankar site. Excellent one. All Dialogs superb :)

Intha maadhiri kadhai yellam ore moochula padikira maadiri unga blogla poda koodadha? adutha part eppa varum....

:)

Unknown said...

Nice Gr8 Job. all the best

Unknown said...

Nice job. All the best

Featured Post

test

 test