Friday, January 11, 2008

வாசித்தவற்றைப் பகிர்தல்


1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன்

சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை மிக நெருக்கமாய் உணர்கிறேன்.உண்மையின் மீதிருக்கும் தணியாத தாகம் இவரது எழுத்துக்களைத் தேடிப் பிடித்து படிக்க வைக்கிறது.முலாம், பூச்சு, அழகியல், நடிப்பென எவ்வித அலங்காரங்களுமில்லாத மனித வாழ்வின் நேரடியான நெருக்கடிகளை, மனதின் விநோத நிலைப்பாடுகளை இவரது எழுத்தில் காணலாம்.படைப்போடு பொருத்தி பார்த்து மகிழும்/படைப்பில் சிலாகித்துப்போய் அதைப் பற்ற வழுவும் சாமான்ய மனதோடோ அல்லது நுண்ணரசியலைத் தடம் பிடிக்கத் துணியும் ஆராய்ச்சி மனதோடோ இவரை அணுகினாலும் கிடைப்பது ஒரே சுவையாகத்தான் இருக்கமுடியும் அது உண்மைத்தன்மை அல்லது எழுத்து நேர்மை.இடாகினிப் பேய்கள்... எனும் குறுநாவலின் வடிவம் தமிழில் இதற்கு முன்பு நான் படித்திராதது ரமேஷ் ப்ரேமின் எழுத்துக்களுக்கும் சப்-டெக்ஸ்ட் (sub-text)கொடுக்கப்படுமென்றாலும் அவர்கள் இயங்கும் தளம் வேறு.சம தளத்திலிருந்தபடி புனைவு சார்ந்தோ/சாராமலோ (இவரது பெரும்பாலான கதைகளை ஒட்டியபடியேதான் இவரது வாழ்வும் இருந்ததாய் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டதன் விளைவுதான் சார்ந்தோ/சாராமலோ)எழுதப்பட்ட ஒரு குறுநாவல்/நாவல் மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது.ஒரு குறு நாவலில் இடையிடையே பயன்படுத்தப்பட்ட வாசகங்களுக்கு ஒவ்வொரு தனிக்கதை இருக்கிறது.குறுநாவல் முடிந்த பின் ஒன்பது இணைப்புச் சிறுகதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.குறுநாவலை வாசிக்கும்போதோ அல்லது வாசித்து முடித்த பின்போ அந்தச் சிறுகதைகளை நாம் படிக்கலாம்.வலைப்பதிவில் நாம் பயன்படுத்தும் லிங்க் போன்ற யுக்தி இது. இந்த பாதிப்பில்தான் புனைவிலிருந்து புனைவு என நான் முயற்சித்துப் பார்த்தேன்.ஒரு சேவை நிறுவனத்தில் பணிபுரியும்போது சந்தித்த மனிதர்களை, சராசரி வாழ்வின் நெருடல்களை, புனிதங்களை, சந்தோஷங்களை, அபத்தங்களைப் பதிவித்திருப்பார். இது அவரது சொந்த அனுபவமாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். சொந்த அனுபவங்களாகத்தான் இருக்கும் என்கிற நம் சராசரி அல்லது மூன்றாந்தர மனோபாவங்கள் குறுநாவலை வேகமாய் படிக்க உதவியாய் இருக்கிறது என்னுடைய ஜிகினாஸ்ரீயை உண்மையாக நினைத்த தமிழச்சியை நினைத்துக் கொள்கிறேன். நல்லவேளை அவர் உனக்கு புலியின் வால்தானே இருக்கிறதென கேட்காமல் போனார்.


எனக்கு இன்னும் வேண்டும் என்றாள்.அவளது முந்தானையை விலக்கி மார்பகங்களை வருடிய வண்ணம் இருந்தேன்.. குறியில் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது.. "இட் ஈஸ் வெரி ஸீதிஙக்
சார்" என்றாள் எனக்கு உச்சகட்ட சிலிர்ப்பு வந்துவிடுமோ என பயமாக இருந்தது.சமாதானத்திடம் போதையினூடே சொன்னேன்
"நான் வரம்புகள் அற்றவன்.ஆனால்
நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணர வைக்க மாட்டேன்."
மெதுவாக மிக மிக மிருதுவாக நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் பிணைப்பிலிருந்து விலக்கிக் கொண்டோம்."இது தோழமை சமாதானம் பாலுறவு அல்ல" மேற்கில் he is my casual friend and occasional lover - erica jong ஒரு முக்கியமான படைப்பாளி என்றேன் அவளை வருடியவாறு "சமாதானம் நீங்கள் ஆதவனைப் படிக்க வேண்டும் உங்களுக்குப் பிடிக்கும் என்றேன் என வலது சுட்டுவிரலை அவளது அதரங்களின் நீள வாக்கில் வைத்தேன்.அவள் முத்தமிட்டாள். அன்று இரவு எனக்கு அற்புதமான கனவு ஒன்று வந்தது அது History of the world படத்தில் வந்த ஒன்று.அரசி இரவுக் கேளிக்கைக்காக ஒரு போர்வீரனைத் தேர்ந்தெடுக்க அனைத்து வீரர்களையும் நிர்வாணமாக அணிவகுக்கும்படிச் செய்து நீளமான குறிகொண்ட ஒரு வீரனைத் தேர்ந்தெடுப்பாள்.அரசியின் முகம் சமாதானத்தைப் போலவும் வீரனின் முகம் என்னை ஒத்ததாகவும் இருந்தது.

பதிப்பகம்:தமிழினி பக்கங்கள்:128

2.ஆத்மாநாம் படைப்புகள்

ஆத்மாநாமின் கவிதைகள் அறிமுகமான புதிதில் என்னை உலுக்கிப்போட்டது. இவரைப் படிப்பதற்கு முன்பே கேள்விப்பட்ட இவரது பெயரின் மீதிருந்த வசீகரமும் அத்தோடு இவரது தற்கொலையும் அற்பாயுளும் இவரின் மீது பிரியம் கொள்ள மிகவும் ஏதுவாய் இருந்தது. (தற்கொலை செய்து கொள்ளும் கவிஞர்கள் என்னை வசீகரிக்கிறார்கள் எனச் சொன்னால் எத்தனை குரூரமான மனம் என நினைத்துக்கொள்வீர்களா?).பிரம்மராஜன் தொகுத்து காலச்சுவடின் வெளியீடாக வந்திருக்கும் இத் தொகுப்பு ஆத்மாநாமின் கவிதைகள், மொழிபெயர்ப்புகள்,கட்டுரைகள்,கடிதங்கள் மற்றும் பிரம்மராஜனுடனான உரையாடல்களென முழுமையான தொகுப்பாய் வந்திருக்கிறது.(அநேகம் பேரிடம் இருக்குமென நம்புகிறேன்) .

ஆத்மார்த்தமான ஒன்றுதல்தான் கவிதையாக முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர்.பிரச்சார கவிதைகளுக்கும் வானம்பாடி கவிதைகளுக்குமான எதிர் குரல்களைத் தொடர்ச்சியாய் எழுப்பி வந்தவர்..'ழ' என்கிற கவிதை ஏட்டின் ஆசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, கட்டுரையாரளாக, விமர்சகராகவுமிருந்தவர். வாழ்ந்திருந்த சொற்ப காலகட்டத்தினுள் அசாத்தியங்களை எழுத்தில் நிறைவேற்றிக் காட்டியவர் எனக்கு மிகவும் பிடித்த கவிதைக்காரர் வேறென்ன சொல்ல?...

உதிரும் மலரின் கணிதத்தை
என்றாவது நீங்கள் யோசித்திருந்தால்
மட்டும்இது புரியும்
இல்லை என்னோடு எப்போதும்உறவாடும்
பாறையைக் கேளுங்கள்..

அவரவர் பாட்டுக்கு
எல்லோரும் அவரவர் பாட்டுக்கு
ஒன்றுக்கிருந்துகொண்டிருந்தார்கள்
நான் நுழைந்ததும் அவையிலே அமைதி
நான் கேட்டேன்
ஏன் நிறுத்தி விட்டீர்கள்
அவரவர் போதனைக்கேற்ப
திரும்பிப் பார்த்தேன்
எல்லாம் உன்னால்தான்
உற்றுப் பார்த்தேன்
கேட்டது ஒரு குரல்
ஒன்றும் விளங்கவில்லை
குப்புற விழுந்து பார்த்தேன்
எல்லாம்நின்ற நிலையிலேயே
அரங்கேறிக்கொண்டிருந்தது
தாவிக் குதித்தேன்
பாதாளச் சாக்கடை வறண்டிருந்தது
எங்கும் நில நடுக்கும்
மெல்ல எட்டிப் பார்த்தேன்
இரண்டு கையளவு
ஒற்றைச் சூர்யகாந்திப் பூ....

விடு
இந்த மரங்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை எரித்துவிடு
இந்த மலர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் புதைத்துவிடு
இம்மனிதர்களுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னை வாழ விடு
இச்சிட்டுக் குருவிகளுக்கென் மேல்
கருணை உண்டென்றால்
என்னைப் பறக்க விடு..

வாலியின் பொய்க்கால் குதிரை எனும் கவிதைத் தொகுப்பினை வேதம் என்பவர் மிகவும் சிலாகித்து ஹிந்து நாளேட்டினில் எழுதியிருந்ததற்கு எதிர்குரலாய் இக்கடிதத்தை அனுப்பியிருந்திருக்கிரார்.ஹிந்து இக்கடிதத்தை வெளியிடவில்லை வெளியிடாததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.அவர்கள் வெளியிட்டிருந்தால்தான் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும். உணமைக்கும் ஹிந்துவிற்கும் தான் வெகுதூரமாயிற்றே...

ATMANAM
390 M.T.H ROAD
AmbatturMadras -600 o53

letters to the editorThe HinduMadras - 600 002

Dear Sir,
Under books column vedham has reviewed poikkal kudhiraigal by vaali.None else break through chicken hearted masterpiece type of word abuses sprinkled throughout the comment culminating in eulogizing the film lyricist as the one who is at the top of the ladder among the pudhukkavithai history-of-free verse (verse libre)-in-Tamil.Not a good experience of poetry in Tamil.The coinage puthukkavithai is obsolete now.There is only contemporary Tamil poetry with its roots in traditional tamil poetry.Vaali and his poetry if one is confused so,is not merely an accident in Tamil poetry but a fatal accident.The bundle of words he uses as potry has been inspired by the so called poets vairamuthu,mu.Mehta etc..who are simply side walkers in free Tamil verse.Vaali's lines have no basis in the field of experience.At the most they are clever manipulation of words.The lines quotated by vedham are being written by the nth rate side trackers.When one looks at rich indian poetic heritage and also contemporary world poetry these word manipulators look like tiny,insignificant clowns.I wish The Hindu introduce positive tamil poetry to its discerning readers.There are positive poets in Tamil who have contributed the varied life of Tamils in indian and international milieu and enriched Tamil poetry to world standards.They include Bharathi,Ka.Na.Su. to Ra.Srinivasan.

Yours Sincerely,Atmanam


3.Message in a Bottle -Nicholas Sparks



என்னுடைய ஆங்கில வாசிப்பொன்றும் அத்தனைப் பிரமானமானதில்லை சித்தார்த் அறிமுகமாவதற்கு முன்பு வரை sidney shelton ம் chase ம் jefrey archar ம் ஒரு சில ரஷ்யப் புதினங்களும்தான் பழக்கமாயிருந்தன. Jumbha lahari ம் இந்த புத்தகமும் Umbertho Eco வும் ஆங்கில வடிவ மார்க்வெஸ்ம் அவன் தந்ததே. மென்மையான காதல் கதைகளை சுவாரஸ்யத்தோடு எழுதுவது ரசிக்க அலாதியான ஒன்று. பயணங்களில், மிகுந்த சலிப்பாய் இருக்கும் தருணங்களில் படிக்க உகந்ததும் கூட. ஏற்கனவே மனைவியை இழந்த garrett தன் மனைவிக்கு எழுதும் காதல் கடிதங்களை ஒரு குடுவையினுள் வைத்துப் பூட்டி கடலில் கலக்கிறான் அப்படி மிதந்து வந்த ஒரு கடிதம் பத்திரிக்கையில் பத்தி எழுதும் theresa வை வந்தடைகிறது.விவாகரத்தாகி தன் மகனுடன் வசித்து வரும் theresa அக்கடிதத்தினால் ஈர்க்கப் படுகிறாள். தன்னுடைய பத்தியிலும் அக்கடிதத்தை பிரசுரிக்கிறாள்.அக்கடிதம் பெரும்பாலான வாசகர்களை ஈர்க்கிறது மற்ற இரண்டு கடிதங்களையும் தேடிப்பிடிக்கும் theresa, garrett ன் மீது காதல் வயப்படும் மிகச் சாதாரண கதை.நுட்பமான விவரணைகள் புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்க ஏதுவாய் இருக்கிறது.இந்தக் கடிதங்களை மொழிபெயர்க்கும் ஆசையும் இருந்தது சந்தர்ப்பம் வாய்க்கும்போது நிறைவேற்றப்பட வேண்டியவைகளில் ஒன்று என என் சோம்பல் சமூகத்திடம் இப்போதே சொல்லி வைக்கிறேன்.இந்த நாவல் இதே பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது Kevin costner நடிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் *நான் தேடிக்கொண்டிருக்கும் பட்டியல்களில் ஒன்று*.இவரது இன்னொரு நாவலான The Note book ம் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.கராமாவில் ஒரு கடையில் Note book ஐப் பார்த்தேன் அடுத்த முறை போகும்போது வாங்கிவிடவேண்டும்.

Life passes by now is the scenery outside a car window.I breathe and eat and sleep as i always did,but there seems to be no great purpose in my life that requires active participation on my part.I simply drift along like the messages i write you.I do not know where i am going or when i will get there.Even work does not take the pain away.I may be diving for my own pleasure or showing others how to do so,but when i return to the shop it seems empty without you,I stock and order as i always did,but even now I sometimes glance over my shoulder without thinking and call for you.....

Without you in my arms i feel an emptiness in my soul I find myself searching the crowds for your face-I know it is an imposibility but i cannot help myself.My search for you is a never ending quest that is doomed to fail.You and i had talked about what would happen if we were forced apart by circumstance,but i cannot keep the promise i made to you that night.i am sorry my darling but there will never be another to replace you The words i wishpered to you were folly and i should have realaised it then.You and you alone have always been the only thing i wanted,and now that you are gone,I have no desire to found another.Till death do us part,we whishpered in the church and i've come to belive that the words will ring true with the day finaly comes when i,too,am taken from these world.


என் வாசக/கி ஒருவர்/ள் என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க
முயற்சித்தாலென்ன எனக் கேட்டிருந்தார் மறு வாசிப்புக்கே சாத்தியமா? என்கிற சஞ்சலம்தான் என் கவிதைகளின் மீதான மதிப்பீடுகளாக என்னிடம் இருக்கிறது.அதனால்தானோ என்னமோ புத்தகத்திற்கான ஆர்வங்கள் எதுவும் இல்லாமலிருக்கிறது.மேலும் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் பதியப்படும் கவிதைப் புத்தகங்களோடு இன்னுமொன்று என்பதான சலிப்புகளும் எட்டிப்பார்க்கின்றன.எனினும் ஆங்கில மொழிபெயர்ப்பை முயற்சித்துப்
பார்த்து என் பக்கத்தை படிக்கும் மிக சொற்பமானவர்களையும் கொல்லாமல்
விடப்போவதில்லை.
*இன்று மாலை Deira city center - Carrefour ல் இந்த படம் கிடைத்தது உடன் ஐந்து படங்களையும் வாங்கினேன்.துபாய் வாழ் திரைப்பட விரும்பிகள் இங்கு செல்லலாம் மிகச் சிறந்த படங்கள் பலவற்றைப் பார்த்தேன்.

11 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

போன மாதம் நண்பர்கள் வாங்கி வந்திருந்த புத்தகங்களை மேயும் வாய்ப்புக்கிடைத்தது. [அவர்களின் புண்ணியத்தில் சில நல்ல வங்காளப் படங்களும் இந்திப்படங்களும் பார்க்கக்கிடைத்தன. :) ] கோபி கிருஷ்ணனின் இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அடுத்த முறை போகும்போது படிக்க வேண்டும்.

ஆத்மாநாம் கவிதைகள் எனக்கும் பிடித்தவை.

நிக்கலஸ் ஸ்பார்க்ஸின் மெசேஜ் இன் எ பாட்டில் ஒரு ஜேர்மன் தோழியினூடாக அறிமுகமானது. அவ்வப்போது அர்த்தம் கேட்டவரிடம் இரவல் வாங்கிப் படித்தது. பிறகு படமும் பார்த்தோம். கெவின் காஸ்ட்னர் தவிர பால் நியூமனும் கலக்கியிருப்பார். இந்தப் புத்தகத்தில் வரும் கடிதங்களைப் படித்து உருகிய பல நண்பர்கள் உண்டு. தமிழில் இப்படியொரு கதை எழுதும் யோசனை இருக்கா? ;) நோட்புக், வந்தபோது பார்க்கலாம் என்று போயிருந்தோம். ரையன் கோஸ்லிங் பிடிக்கும் என்பதால். ஆனால், ரொம்பவும் குறையக் காட்சிகளில்தான் வருகிறார் என்றதும் வேறேதோவொரு படத்திற்குப் போய்விட்டோம். இன்னமும் பார்க்கச் சந்தர்ப்பம் வரவில்லை. பார்க்கணும்.

carrefourஇல் கிடைத்த மற்றப் படங்கள் என்னென்ன? :)

-மதி

Ayyanar Viswanath said...

மதி

நானும் ஆசிப்பும் தான் போனோம்..வாய்யா வாய்யா நை நை ன்னுட்டே இருந்தார்.. நிறைய்ய டிவிடிக்களிருக்கும் இடத்த விட்டு வர மனசே இல்ல :) ..என்ன கொடுமன்னா பெரும்பாலான படங்கள் நான் ஏற்கனவே பாத்தது :) (இன்னா பில்ட் அப்!!) அதுல நெறய படங்கள் எங்கிட்ட ஏற்கனவே இருக்கு இப்படி அவர டென்சன் படுத்திட்டே 6 படம் எடுத்தேன்..
1.One Flew Over the Cuckoo's Nest
2.Nell
3.The Road to Wellville
4.Message in a Bottle
5.Desperado
6.El.Marichi

Message in a bottle பாத்திட்டிருக்கேன் மதி ..டிசே மாதிரி ஒரு பதிவில சில சில குறிப்புகளா எழுதிடவும் எண்ணமிருக்கு :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யனார்,

//வாய்யா வாய்யா நை நை ன்னுட்டே இருந்தார்..//

:)) அவரே உங்ககூட சேர்ந்து சுத்துறதுக்குப் பயப்படுறாருன்னு கேள்வி. ;)



அப்ப ஒரு ராபர்ட் ரோட்ரிகெஸ் ஸ்பெ்ஷல் வருமா? எனக்கும் எழுதணும்னு ஒரு யோசனை இருந்தது. கிரைண்ட் ஹௌஸ்ல இவரோட ப்ளானட் டெர்ரர் பார்த்திட்டு. உதயம், வளர்ச்சி வீழ்ச்சின்னு ஆரம்ப காலப் படங்கள், டாரண்டீனோவோட சேர்ந்த படங்கள், நடுநடுவில ஸ்பைகிட்ஸ்னு போனது சொதப்பினதுன்னு எழுதுவமான்னு.. அப்படியே விட்டுருச்சு. நீங்க எழுதினா எப்படி எழுதுறீங்கன்னு பாக்க விருப்பம்.
சின் சிட்டி நல்லாயிருந்தது. அடுத்தடுத்த 2,3ன்னு செய்யப்போறாராம். எப்படியிருக்குமோ.

-மதி

Ayyanar Viswanath said...

மதி sin city பாத்து எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை :)
எப்படி இந்த மாதிரி எடுக்க முடியும் னு ரொம்ப புலம்பினேன்..படம் பயங்கர வன்முறை அது இது ன்னு பொலம்பிட்டிருந்தேன்..அப்புறம் அது
குவாண்டினோ படம்னு வேற நெனச்சிட்டிருந்தேன்..

இவரோட இந்த ரெண்டு படத்தையும் பார்த்திட்டு நீங்க எழுத நெனச்ச தலைப்பையே பயன்படுத்திக்கிறேன் வீழ்ச்சின்னு நீங்க நெனச்ச spy kids(அனுமானம் சரியா?) நான் பார்க்கல..அதையும் பார்த்துட்டு எழுதறேன்..

நேத்து Penelope cruz கலெக்சன் ஒண்ணு வாங்கினேன்..திருட்டு டிவிடி :) ஆனா அந்த கவர்குள்ள இருந்தது இந்த படம் Cercle rouge, Le (1970)..படம் பார்த்து அசந்திட்டேன் என்னா! திரைக்கதை மதி! செம படம் கெடச்சா பாருங்க

kar-wai-wong படம் ஏதாவது பாத்திங்களா?உங்க பக்கம் எதும் open ஆகலியே...

கிருத்திகா ஸ்ரீதர் said...

அய்யனார், புத்தகம் பத்தி எழுதினிங்க சரி.. ஆனா கூடவே உலக சினிமாக்கள் பத்தியும் எழுதினா என்ன அர்த்தம்.. இது கடுப்பேத்தர வேலைதானே.. நான் அந்த பகுதிய படிக்கல.. படிக்கல..திரும்பவும் சொல்ரேன் படிக்கல....

Ayyanar Viswanath said...

கிருத்திகா

நம்பிட்டேன் :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கோபிகிருஷ்ணனின் இடாகினிப் பேய்கள் படித்திருக்கிறேன். ஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். மீட்சி வெளியீடாக வந்தது, காலச்சுவடு வெளியீடாக வந்தது இரண்டும் இருக்கிறது...

ஆத்மாநாம் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் (அம்பத்தூர்). என்னுடைய மாமாவிற்கு நண்பர். அவரது மூத்த சகோதரர் என்னுடைய தாத்தாவின் மாணவராயிருந்தார் சில காலம். அவரது சகோதரி (அவரும் மன நிலை சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டவர் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்) என் அம்மாவின் நண்பர். உங்கள் பதிவைப் படிக்கையில் இதெல்லாம் என் நினைவில் மோதுகின்றன (யாருடனும் பகிர்ந்து கொண்டதில்லை).

ஆத்மாநாமை அங்கீகரிக்காத ஒரு சமூகம் ராஜ ராகங்களையும் சோகச் சுற்றுலாக்களையும் தலை மேல் வைத்துக் கொண்டாடுவது கொடுமை.

Boston Bala said...

பகிர்வுகளுக்கு நன்றி!

ஆத்மாநாம் கடிதம் எப்பொழுது எழுதப்பட்டது?

கிருத்திகா ஸ்ரீதர் said...

இடாகினிப்பேய்களும்.......
டேபிள் டென்னிசும் இப்போது என் கைகளில்...கோபி கிருஷ்ணணின் இந்த இரண்டும் தான் இந்த புத்தத்திருவிழாவில் கிடைத்தது..
பொங்கல் வாழ்த்துக்கள்

Ayyanar Viswanath said...

சுந்தர் பகிவுகளுக்கு நன்றி

பாபா:1980 லிருந்து 82 ஆ இருக்கலாம் தேதி எதுவும் இல்லை

கிருத்திகா பொங்கல் நல்வாழ்த்துக்கள் டேபிள் டென்னிஸ் கோபியின் மாஸ்டர்பீஸ்னு சொல்றாங்க படிச்சிட்டு எழுதுங்க

Anonymous said...

Did you [url=http://www.onlinecasinos.gd]casino games[/url] identify that you can contend with Alter Mansion without put from your mobile? We be in exact a superiority expressive casino at tantamount's disposal after iPhone, iPad, Android, Blackberry, Windows 7 and Smartphone users. Experience effects of your gaming with you and be a conqueror [url=http://www.adultsrus.us]adult toys[/url] wherever you go.

Featured Post

test

 test