
எனது பிரதிகளின் துண்டொன்று உன் சுயத்தை அசைத்த சிறுபொழுதின் சலனத்தில் உன்னிடமிருந்து வெளிப்பட்ட சொற்கள் பிரயாணித்து என் இருப்பை வந்தடைந்தது.கதவு தட்டி உட்புகுந்த உன் சொற்கள் யுகங்களின் மீட்பாக,நம் ஆதி உறவின் உயிர்த்தெழலாக,சபிக்கப்பட்ட என் நிகழை மீள்பதிவித்தது.முடிவற்ற ஒன்றின் துவக்கங்கள் ஆச்சர்யங்களாய் மட்டுமே இருக்க முடியும் என்கிற விதிகளின் படி ஆச்சர்யங்களின் மொத்த உருவமாய் நீ என்னை ஆக்ரமித்தாய்.புதிதாய் என்னை மீட்டெடுத்த உன் சொற்களின் தடம் பற்றி உன்னிலிருந்து மேலும் சொற்களைப் பெற புதிதாய் நீவிரும்பும்படி என் பிரதிகளைக் கட்டமைத்தேன்.ஆதியின் வாசனைகளோடும் இருண்ட கனவுகளின் வெளித்தோன்றலாகவும் நீ என்னை ஆக்ரமித்தாய் முழுமையாய்.
குழப்பமாய் நீளும் என் கனவுகளின் நீட்சி இறுதியில் உன்னுருவம் கண்டதிர்ந்தது. அடர் கானகத்தில் நாம் புலிகளாய் அலைந்திருந்ததின் எச்சத்தை உன் கண்களில் தேக்கி வைத்திருந்தாய்.ஒரு மழையிரவில் இருள்குகையில் நம் கடைசிப் புணர்வில் உறைந்த நொடிகளை நீ உதடுகளில்தேக்கி வைத்திருந்தாய்.சாபங்கள் நிறமழியும்காலமென்பதை வெகு விரைவாய் உணரச் செய்தது உன் வாசனை.தேம்பியிருந்த என் தனிமையின் வலிகள் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது. அழுகையின் உச்சத்தில் கரையத்தொடங்கிய சுயம் உன்னை மூழ்கடித்தது.
கர்வம் கரைந்தழிந்த வெளியில் என் பேச்சுக்கான ஏக்கங்களின் வெளிப்பாடாய் உள்புதைந்திருந்த சொற்கள் வார்த்தைகளாய் பெருகி இக்காற்றினை நிரப்பத் தொடங்கியது.இடைவிடாத பேச்சுக்களில் உறைவித்தோம் காலத்தை.நீ பல யுகங்கள் பெண்ணாகவே இருந்திருக்கிறாய். வாழ்தலின் துயரமனைத்தையும் கர்வத்தோடு சுமந்தலைந்திருக்கிறாய்.குருதி கசிந்தஉள்ளாடைகளை யாருக்கும் தெரியாமல் உன் தனியறையில் மறைத்து வைத்திருக்கிறாய்.சாபத்தின் நீட்சியாய் நானும் ஆணாகவே உயிர்த்திருந்தேன்.தனிமையின் பரிகசிப்பைத்தவிர வேறெந்த வலிகளும் என்னிடமில்லை.இதுவரை என் குறிகளை யாரும் வன்புணர்ந்ததில்லை.விறைத்து நீண்ட எந்த ஒன்றும் என் குதத்தை தீண்டியிருக்கவேயில்லை.மாற்றாய் நீ எனக்கும் சேர்த்து இழ்ந்திருக்கிறாய். உன் குருதியின் கடைசி துளிவரை உறிஞ்சப்பட்டிருக்கிறாய்.சிறுமலையென உன் அறையில் குவிந்திருந்த,ரத்தம் தோய்ந்து வெளிறிய உள்ளாடைகளை கண்டுக் கூசியதென் குதம்.
சாபங்கள் நிறமழிந்த இக்கணங்களில் நீ வந்தடைந்துவிட்டாய்.இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நம் தனிமைகளை தீயிலிடுவதே.முதலில் நம் ஞாபகக்குப்பைகளனைத்தையும் தீக்கு தின்னக் கொடுப்போம். வெப்பத்தில் உருக ஆரம்பிக்கும் நம் வலிகளின் தழும்புகளை குறுநகையோடு கண்டின்புறுவோம். பற்றி எரிய தொடங்கும் நம் சாபங்களின் பிரதிகளின் மேல் எச்சில் உமிழுவோம் வன்மத்துடன்.
வா! மனிதர்கள் அண்டியிராத நம் சொந்த அடர் கானகத்தின் குகைகளுக்கு சென்றுவிடலாம் கடைசியாய் நாம் புணர்ந்த இரவின் மீதங்கள் இன்னமும் நம்மைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம். வைகறையில் மொட்டவிழும் புதிய மலரொன்றின் வாசம் நம் குகைகளில் படர கற்களின் இடுக்குகளில் செடிகளை நடுவோம். வண்ணத்துப்பூச்சிகளை தேன்குடிக்க அனுமதித்து மகரந்த சேர்க்கையை புணர்வின் நீட்சியென இருண்ட குகைகளெங்கிலும் மலர்களைத் தோற்றுவிக்கலாம்.மொத்தமாய் மொட்டவிழத் தொடங்கும் ஒரு விடியலில் யுகங்களை வென்ற களிப்பில் நாம் முத்தமிட்டுக் கொள்ளலாம் புலியின் வாசனைகளோடு.
குழப்பமாய் நீளும் என் கனவுகளின் நீட்சி இறுதியில் உன்னுருவம் கண்டதிர்ந்தது. அடர் கானகத்தில் நாம் புலிகளாய் அலைந்திருந்ததின் எச்சத்தை உன் கண்களில் தேக்கி வைத்திருந்தாய்.ஒரு மழையிரவில் இருள்குகையில் நம் கடைசிப் புணர்வில் உறைந்த நொடிகளை நீ உதடுகளில்தேக்கி வைத்திருந்தாய்.சாபங்கள் நிறமழியும்காலமென்பதை வெகு விரைவாய் உணரச் செய்தது உன் வாசனை.தேம்பியிருந்த என் தனிமையின் வலிகள் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது. அழுகையின் உச்சத்தில் கரையத்தொடங்கிய சுயம் உன்னை மூழ்கடித்தது.
கர்வம் கரைந்தழிந்த வெளியில் என் பேச்சுக்கான ஏக்கங்களின் வெளிப்பாடாய் உள்புதைந்திருந்த சொற்கள் வார்த்தைகளாய் பெருகி இக்காற்றினை நிரப்பத் தொடங்கியது.இடைவிடாத பேச்சுக்களில் உறைவித்தோம் காலத்தை.நீ பல யுகங்கள் பெண்ணாகவே இருந்திருக்கிறாய். வாழ்தலின் துயரமனைத்தையும் கர்வத்தோடு சுமந்தலைந்திருக்கிறாய்.குருதி கசிந்தஉள்ளாடைகளை யாருக்கும் தெரியாமல் உன் தனியறையில் மறைத்து வைத்திருக்கிறாய்.சாபத்தின் நீட்சியாய் நானும் ஆணாகவே உயிர்த்திருந்தேன்.தனிமையின் பரிகசிப்பைத்தவிர வேறெந்த வலிகளும் என்னிடமில்லை.இதுவரை என் குறிகளை யாரும் வன்புணர்ந்ததில்லை.விறைத்து நீண்ட எந்த ஒன்றும் என் குதத்தை தீண்டியிருக்கவேயில்லை.மாற்றாய் நீ எனக்கும் சேர்த்து இழ்ந்திருக்கிறாய். உன் குருதியின் கடைசி துளிவரை உறிஞ்சப்பட்டிருக்கிறாய்.சிறுமலையென உன் அறையில் குவிந்திருந்த,ரத்தம் தோய்ந்து வெளிறிய உள்ளாடைகளை கண்டுக் கூசியதென் குதம்.
சாபங்கள் நிறமழிந்த இக்கணங்களில் நீ வந்தடைந்துவிட்டாய்.இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நம் தனிமைகளை தீயிலிடுவதே.முதலில் நம் ஞாபகக்குப்பைகளனைத்தையும் தீக்கு தின்னக் கொடுப்போம். வெப்பத்தில் உருக ஆரம்பிக்கும் நம் வலிகளின் தழும்புகளை குறுநகையோடு கண்டின்புறுவோம். பற்றி எரிய தொடங்கும் நம் சாபங்களின் பிரதிகளின் மேல் எச்சில் உமிழுவோம் வன்மத்துடன்.
வா! மனிதர்கள் அண்டியிராத நம் சொந்த அடர் கானகத்தின் குகைகளுக்கு சென்றுவிடலாம் கடைசியாய் நாம் புணர்ந்த இரவின் மீதங்கள் இன்னமும் நம்மைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம். வைகறையில் மொட்டவிழும் புதிய மலரொன்றின் வாசம் நம் குகைகளில் படர கற்களின் இடுக்குகளில் செடிகளை நடுவோம். வண்ணத்துப்பூச்சிகளை தேன்குடிக்க அனுமதித்து மகரந்த சேர்க்கையை புணர்வின் நீட்சியென இருண்ட குகைகளெங்கிலும் மலர்களைத் தோற்றுவிக்கலாம்.மொத்தமாய் மொட்டவிழத் தொடங்கும் ஒரு விடியலில் யுகங்களை வென்ற களிப்பில் நாம் முத்தமிட்டுக் கொள்ளலாம் புலியின் வாசனைகளோடு.