பின்னிரவில்
சத்தம் இல்லாது
பெய்துவிட்டுப் போன
மழைக்கு
காலையில்
வெள்ளையாய் மென்மையாய்
பூத்திருக்கிறது
பச்சரிசிக் காளான்கள்..
யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
இன்னுமொரு
சிதைவிற்கான
ஆயத்தங்களெனினும்
பூத்திருப்பதும்
உறைந்து போவதும்
இருத்தலியத்தின்ஆதார விதிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
- 
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
- 
மக்கா இந்த அய்யனார்ங்கிற பேர் எப்பவுமே எனக்கு ஆவுறது இல்ல நாலு பேர் இருக்கச்ச சொல்ல முடியுதான்னு எனக்கு பேர் வச்ச பாட்டிய திட்டிட்டு இருப்பே...
- 
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
 
 
 
 
5 comments:
பச்சரிசிக் காளான்கள்..
நல்லா இருக்கு.
மென்மையா இருக்கு கவிதை.
நிறைய எழுதுங்க!
கவிதையை வாசித்ததும் தெரிந்துவிடுகிறது நல்ல கவிதை என்று. ஆனால், 'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்? தரமாக இருக்கிறது உங்கள் எழுத்து.
நன்றி மஞ்சூர் ராசா மற்றும் தம்பி
'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்?
காட்சிப் படிமங்களை நான் நம்பாதது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்
மிகவும் நன்றி உங்கள் கருத்துகளுக்கு
//யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
//
!!!
Post a Comment