பின்னிரவில்
சத்தம் இல்லாது
பெய்துவிட்டுப் போன
மழைக்கு
காலையில்
வெள்ளையாய் மென்மையாய்
பூத்திருக்கிறது
பச்சரிசிக் காளான்கள்..
யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
இன்னுமொரு
சிதைவிற்கான
ஆயத்தங்களெனினும்
பூத்திருப்பதும்
உறைந்து போவதும்
இருத்தலியத்தின்ஆதார விதிகள்.
Sunday, March 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதை...
5 comments:
பச்சரிசிக் காளான்கள்..
நல்லா இருக்கு.
மென்மையா இருக்கு கவிதை.
நிறைய எழுதுங்க!
கவிதையை வாசித்ததும் தெரிந்துவிடுகிறது நல்ல கவிதை என்று. ஆனால், 'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்? தரமாக இருக்கிறது உங்கள் எழுத்து.
நன்றி மஞ்சூர் ராசா மற்றும் தம்பி
'நல்ல கவிதை'என்று சொல்லி விட்டுக் கடந்துபோய்விடுவதைத் தவிர கவிதை தரும் அனுபவத்தைப் பற்றி மேலதிகமாகச் சொல்ல ஒன்றுமேயில்லாது போவதேன்?
காட்சிப் படிமங்களை நான் நம்பாதது கூட ஒரு காரணமாய் இருக்கலாம்
மிகவும் நன்றி உங்கள் கருத்துகளுக்கு
//யாருமற்ற
எனதறைக்குள்
திடுமென நிகழ்ந்த
உன் ப்ரவேசத்தில்
உறைந்து போனது
எனது பகலும் அதன்
தொடர்ச்சியாய் இரவும்..
//
!!!
Post a Comment