
வெட்ட வெட்ட தளிர்களாய்த் துளிர்க்கிறது
கொல்லைப்புற புங்கை
வன்மத்தில் எட்டி உதைத்தாலும்
வால் குழைந்தபடி காலைச் சுற்றுகிறது ராமு
தொல்லைகள் பொறுக்காது அறையப்பட்ட
குறும்புக்காரச் சிறுமி
கதவின் பின் ஒளிந்தபடி
கண்கள் பனிக்க
எட்டிப்பார்க்கிறாள்
நீலம் மறைத்தபடி சூழ்ந்திருந்த கரு மேகங்கள்
மெல்ல இளகத் துவங்கி
மழையின் ஈரக் கைகளின் வடிவம் கொண்டு
பூமியணைக்க விரைகிறது
தகித்திருந்த நிலம்
தணிவு கொள்கிறது
21 comments:
Post a Comment