கார்னிவல் தெருவின் முகப்பு வீட்டில்
மஞ்சணாத்தி கொத்தாய் பூத்திருக்கிறது
செயிண்ட் த்ரேஸ் தெருவிலிருக்கும் கடைசி வீட்டில்
காம்பவுண்டைத் தாண்டி ஆவாரம்பூ
மஞ்சளை உதிர்த்திருந்தது
அம்பேத்கார் தெரு குடிசை ஒன்றினுள் ஒரு சிறுமி
தலையில் கேரம் பலகையை சுமந்தபடி நுழைகிறாள்
பிள்ளையார் கோவில் தெரு ஓட்டு வீட்டிலிருந்து
ப்ராவிற்குள் மேசைப்பந்தை அடைத்துக் கொண்டு
அடர் சிவப்பு லிப்ஸ்டிக் சகிதமாய் வெளியேறுகிறேன்
ரூடூமாஸ் வீட்டின் இரண்டாம் தளத்தில்
அதே டேபிள் டென்னிஸ் மேசையில்
யாரையாவது கிடத்தி
யாராவது புணர்ந்து கொண்டிருக்கலாம்
Wednesday, May 25, 2011
டேபிள் டென்னிஸ் கவிதைகள் 0-1
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்தில...
-
திரும்பிவர இயலா ஒற்றையுலகத்தில் நம்மைத் தொலைத்தது அந்த இசை வீணையின் அதிர்வுகளில் நினைவு முடிவிலியின் சுவர்களில் மோதி இரத்தமிழந்தது இப்போது உ...
1 comment:
இதுல நிறைய அர்த்தம் இருக்கோ?
Post a Comment