Monday, March 23, 2009

வ.வெ.தொ.அ.வெ.கு 5.கண்ணாமூச்சிக்காரியும் ஆம்பள ஜெமோவும்

எனக்கு எல்லாவற்றையும் அந்தந்த கணத்திலேயே சொல்லிவிட வேண்டும்.கோபம்,காதல், அழுகை,காமம்,வெறுப்பு,கசப்பு,வன்மம் எல்லாவற்றையும் அதே வேகத்துடன் அதே உக்கிரத்துடன் வெளித்துப்பி விடவேண்டும் இல்லையெனில் சிக்கல்தான்.மண்டைக்குள் எப்போதும் அந்த தவிப்பு அலைந்துகொண்டே இம்சிக்கும்.உரையாடலினி எனக்கு நேரெதிர் தலையில் இடி விழுந்தாலும் வாய்திறந்து கத்துவது கிடையாது.உள்ளுக்குள்ளேயே 'அம்மெ' என முனகுவாளாம்.அவளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கண்ணாமூச்சி.எங்காவது, எவராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளிந்து கொண்டு எல்லாரையும் தவிக்க விடுவது அவளுக்கு ரகசியமான ஒரு திருப்தியை தருமாம்.தான் ஒளிந்து கொண்டு அடுத்தவர் அலைவதை வேடிக்கைப் பார்ப்பது இன்னமும் அதிக மகிழ்வைத் தருவதாக ஒரு நாள் சொன்னாள்.”தேடுறவங்க சலிச்சி விளையாட்ட விட்டு போய்ட்டா என்ன பண்ணுவ?” என கேட்டேன் சத்தமாய் சிரித்துக் கொள்வாளாம்.எவராலும் தன்னை கண்டுபிடிக்க முடியாத ஒரு இறுமாப்பு படருமாம்.அந்த வெற்றியும் களிப்பும் அவளின் பால்யம் முழுக்க நிரம்பி இருந்ததாய் சொன்னாள்.என்னையும் இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தவிக்க விடுகிறாள்.நெருங்கவுமில்லாது,விலகியும் தொலையாது சதா என்னை அலைக்கழிப்பதை அவளொரு விளையாட்டைப் போல் ஆடித் தீர்க்கிறாள்.

ஒரு நாள் உச்சகட்ட கசப்பில் அவளின் அலுவலகத்திற்கு போய் ”ஏண்டி படுத்துர எரும்ம மாடு”என கத்தினேன் அவள் அலுவலகத்தில் தமிழ் தெரிந்தவர் எவருமில்லை.ஆனாலும் என் கத்தலுக்கு எல்லாரும் திடுக்கிட்டு இருக்கைகளிலிருந்து எழுந்துவிட்டனர்.இவள் வேகமாய் என்னை நெருங்கி வந்து என்னை இறுக்கமாய் கட்டிப்பிடித்தாள்.இரண்டு பிரான்சு தேசப் பெண்கள் விசிலடித்தனர்.'போ இப்ப சாயந்திரம் வரேன்' என்றாள் நான் முனியடித்தவன் மாதிரி திரும்பினேன்.சாயந்திரம் வந்து கெட்ட வார்த்தையில் திட்டினாள்.அவளின் வாசனையில் நான் காலையிலிருந்தே கரைந்து போயிருந்தேன்.மேலும் அவள் திட்டும்போது உதடுகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் என்ன திட்டினாள் என்பதும் சரியாய் உறைக்கவில்லை.இந்த குறிப்பில் நான் சொல்ல வந்தது எங்கள் காதல் லீலைகளை இல்லை இன்னொரு முக்கியமான விசயம்.முந்தா நாள் இரவு இவள் தொலைபேசி அனல் காற்றை படிக்க சொன்னாள்.நான் ஜெயமோகனைப் படிப்பதில்லை என்றேன். ”எனக்காக படி”என்று தொடர்பைத் துண்டித்தாள்.

ஒவ்வொரு அத்தியாயமாகத் தேடி வேர்டில் காபி செய்து படிக்க ஆரம்பித்தேன்.முதல் அய்ம்பது பக்கம் ராஜேஷ் குமார் நாவலைப் படிக்கிறோமா? என்கிற சந்தேகங்கள் எழுந்தன.அவன் சுசியின் முலைகளை வெறிப்பதும் அதை அவள் ரசிப்பதுமான வரிகளை ஆரம்பத்தில் படித்தது நினைவுக்கு வரவே எழுதினது அண்ணாத்ததான் ரீதியிலான ஆசுவாசம் எழுந்தது.சந்திரா வந்ததும் கதையில் 'சூடு' பிடிக்கிறது.ஜெமோவின் காமத் தாண்டவங்கள் அறிந்ததுதான் என்றாலும் இந்த சந்திரா தாண்டவம்,கோரத் தாண்டவம். கூகுலில் போய் இன்செஸ்ட் என தமிழில் தேடினால் கொட்டும் எல்லா கதைகளும் அண்ணாத்தையின் கை வண்ணம்தானா? என்கிற சந்தேகம் வந்தது.கதையின் பிரதானம் ஆம்பளத்தனம்.அம்மாவின் தோழியுடனான ஆம்பளத்தனம்.பெண்ணை வெற்று உடலாய், சதைப்பிண்டமாய், சதைக்கோளமாய் மட்டுமே பார்க்க தெரிந்த ஜெமோவின் இன்னொரு சுயபுணர்ச்சி.பல இடங்களில் நன்றாய் விறைத்தது.ஜெயமோகன் இனிமேல் இன்செஸ்ட் கதைகளை தாராளமாய் எழுதலாம். கூகுலில் தேடி யூடியூபில் தேடி விறைப்பதை விட ஜெமோ பக்கத்தில் இலக்கியமாய் விறைக்கலாம்.

தமிழ்சூழலின் பெரும்பான்மைகளின் அசூசைகள் அந்த இரவை கசப்பாக்கத் துவங்கின ஒண்ணரை மணிக்கு அவளை எழுப்பித் திட்டினேன்.
“உனக்கு இந்த கத பிடிச்சிருக்குமே”
”எந்த கதடா?” என்றாள் தூக்க கலக்கத்தில்
”அனல் காற்று”
”யார் எழுதினது?”
”ஜெமோ”
”யார் ஜெமோ?'
”அடியேய் என்ன படிக்க சொன்னது நீதானடி”
”என்ன ஒருத்தங்க படிக்க சொன்னாங்க அத அப்படியே உன்கிட்ட சொன்னேன்.அதுக்காகலாம் படிப்பியாடா? அவ்ளோ நல்லவனா நீ?”என சத்தமாய் சிரித்தாள்.
எனக்கு பற்றிக்கொண்டு வந்தது ”பாவி” என்றேன்
”சரி டென்சனாவாதே என்ன கத அது?”
”மதர் ஃபக்கிங்”
”வாட்”
”இன்செஸ்ட் டி”
”ஓ..நல்லவேள நான் படிக்கல”
”கொல வெறியா இருக்கு”
”நான் இப்டி சொன்னா ஓகே..நீயெல்லாம் பெரிய பொரட்சி எழுத்தாளனாச்சே!? உனக்கு இப்படி எழுதினாலாம் பிடிக்குமே!”
”இல்லடி அப்பட்டமான மேல் சாவனிச எழுத்து படு மட்டமா இருந்தது”
”மேல் சாவனிசத்த பத்தி நீ பேசறியா?.. என்ன நடுராத்திரில சத்தம் போட்டு சிரிக்க வைக்காத..அதுவும் இல்லாம இன்செஸ்ட்லாம் தி.ஜ தொட்ட சப்ஜக்ட்தானடா உன்னோட கோபி எழுதாததா? ஏன் ஆதவன் கூட தொட்டதுதான..”
”நீ அவங்களலாம் இந்த ஆளோட கம்பேர் பண்ணாதே.இத எழுதலாம் இத எழுதக்கூடாது அப்படின்னுலாம் சொல்ர கலாச்சாரக் காவலன் இல்ல நான்..ஆனா பெண்ண வெறும் சதைப்பிண்டமா பாக்குறதலாம் என்னால தாங்கிக்கவே முடியல.. அதுலயும் அந்த எழுத்துத் தொணி.. யூஃப்ப்ப்ப்ப்... அவரோட கிளிக்கூட்டம் னு ஒரு சிறுகதை ரொம்ப வருசத்துக்கு முன்னால படிச்சது.பதின்ம வயசு பசங்களோட கத.. அதுல சில விவரணைகள் வரும்.அத்தைகள்,அக்காக்கள் இவங்களோட உடலை விவரிச்சிப்பார். ஒரு பதின்ம வயசு பையன் பார்வைல இருந்து சொல்லப்படுறதா இருக்கும்.ப்ரா பட்டை, பிதுங்கின முலை, அக்குள் ஈரம், வாசம் னு பயங்கர இன்செஸ்ட் டா இருக்கும் அந்த கத...அதுக்குப் பிறகு அண்ணாத்த சந்திரா மூலமா தன் அரிப்ப லாம் சொறிஞ்சிட்டிருக்கார்.”

”ம்ம்..படிக்க கிக் ஆ இருக்கா என்ன?”
”ஆமா காமம்.. காமம்.. வார்த்தைகள்ள பற்றும் காமம்”
”செக்ஸ் புக் படிக்கிரா மாதிரி இருக்கா?”
”ஏன் நீ படிக்கனுமா?”
”இல்ல கேட்டேன்”
”நீ படிக்கனும்னா ழார் பத்தாய் அனுப்பினனே அத படி”
”அதும் செக்ஸ்தானடா”
”ஆமா ஆனா அதுவும் இதுவும் வேற வேற”
”என்ன வேற வேற எல்லாம் ஒண்ணுதான்”
”ஒண்ணு மாதிரிதான் தெரியும் ஆனா வேற வேற.கலைக்கும் அரிப்புக்கும் நெறய வித்தியாசம் இருக்கு”
”பாக்க எல்லாம் ஒண்ணுமாதிரிதான இருக்கு”
”ம்ம்..மெதுவா புரியும்”
”புரிய என்ன பண்ணனும்?”
”நெறய படிக்கனும்.சொந்தமா யோசிக்கனும்.சக மனுசன் மீதும்,சமூகம் மீதும் கொஞ்சமே கொஞ்சம் அக்கற வேணும்”
”அதுலாம் போர் டா”
”அப்ப சுலபமா ஒண்ணு பண்ணு”
”என்ன?”
”என்ன காதலி”
”இதுக்கு நான் அதயே கஷ்டப்பட்டு பண்ணிடுவேன்”
”தமிழ்சூழல்ல விமர்சகர்கள் லாம் காணாம போய்ட்டாங்கடி.அப்படியே வர்ர விமர்சனங்களும் ஒரு தலைப் பட்சமா,முதுகு சொறிதலாத்தான் இருக்கு.இல்லனா அரைகுறை புரிதலா அபத்தமா இருக்கு.”
”ஏன் இன்னிக்கு இப்படி காது வெடைக்க கத்திட்டிருக்க நீ?”
”பயங்கர கசப்பா இருக்குடி.எங்க பாத்தாலும் போலி.இலக்கியம்,அரசியல்,கலை,வாழ்வு ன்னு நம்ம சமூகம் வெறும் போலித்தனங்களால மட்டும்தான் நிறைஞ்சிருக்கான்னு கத்தனும் போல இருக்கு.”
”நீதான் உண்மை வெளம்பியாச்சே.போய் எல்லாரையும் திட்டு.எல்லாரையும் விமர்சி அப்புரமா ரத்தம் ஒழுக ஒழுக கடிபட்டு வா..யூ ஸ்டார்டட் அகெய்ன் ஐ கெஸ்”
”எல்லாம் உன்னால தாண்டி இவனுங்களலாம் படிக்காம நான் நிம்மதியா இருந்தேன்.”
”ரொம்ப பண்ணிக்காதே உனக்கு பிடிச்சமாதிரிதான் இலக்கிய சூழல் இருக்கனும்னு மொத்தம் மூணு பேர்தான் எழுதனும்”
”மூணு பேரா?”
”ஆமா.கோபி,சன்னாசி அப்புறம் நீ.. அதுல கோபியும் போய் சேர்ந்தாச்சு.நீயும் சன்னாசியும் மாறி மாறி எழுதி நீங்களே மாறி மாறி படிச்சுக்கங்க.தயவு செய்ஞ்சு வேற எதையும் படிச்சி தொலயாதே.”
”ம்ம்”
”இந்த சாரு சாரு ன்னு ஒரு மானஸ்தர்ர்ர்ர் இருந்தார்ர்ர்டி.இப்ப கவர்ச்சி நடிகை கணக்கா ஆயிட்டார்ர்ர்ர்ர்ர்”
”அய்யா சாமி போதும்.போன வை.எனக்கு தூக்கம் வருது.பை.

23 comments:

ICANAVENUE said...

மிக நல பதிவு. ஆனால் தெரிந்தே வெடி குண்டு வீசிஇருக்கிறீர்கள்!

☀நான் ஆதவன்☀ said...

நல்ல விளாசல் அய்யனாரே..

தமிழன்-கறுப்பி... said...

தலைவா இன்னைக்கெல்லாம் நான் தமிழ் மணம் பக்கமே போகல என்னண்ணே தெரியல...?

ஒரே ஒரு பின்னூட்டம் மாதவராஜ் அண்ணனுக்கு இப்பத்தான் எழுதினேன்.

பதிவின் முதல் வரிகள் எனக்கும் உங்களுக்குமிடையில் நெருக்கத்தை அதிகமாக்கியிருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

இந்த, கலைக்கும் அரிப்புக்கும் இடையிலான அளவீடு என்பது அவரவருக்கு வேறுபடுகிறதே... முன்பொரு முறை இளவஞ்சி கூட உங்களோட பேசியிருந்தார்...

நிறைய வாசிச்சாலும் சிக்கல்தான் போல அண்ணன்.. ;)

Anonymous said...

அய்யனார்,

இந்த கண்ணாமூச்சிக்காரி உங்கள ரொம்ப படுத்தறா மாதிரி இருக்கே.

ஜெமோ மட்டுமில்லை, நெறய எழுத்துகள படிச்சுதான் வந்திருக்கேன். இப்படி ஆங்காரமா அவர திட்டற அளவுக்கு அனல்காற்று மோசமா என்ன? சாரு கல்லூரிப்பெண்களப் பத்தி அதீத கற்பனையை பறக்க விடும்போது இவ்ளோ கோவப்பட்ட மாதிரி தெரியலயே. சன்னாசி கூர்மையாத்தான் எழுதறார். ஆனா எதுக்கு இப்ப ஜெமோ, சன்னாசி, கோபி (கூட உங்களயும்) எல்லாம் ஒரு கோட்டில வச்சிப் பேசனும்னு புரியல. ஜெமோவோட வீச்சு மிகப் பெரியது. உங்களுக்கு பிடிக்கலங்கிற ஒரே காரணத்த வச்சி இப்படி ‘தட்டையா’ எழுதறது உங்க மேல வச்சிருக்கிற அபிப்ராயத்தை நிறயவே பாதிக்குது.

கோபிநாத் said...

வந்துட்டாங்களா அம்மணி ;))

குப்பன்.யாஹூ said...

மிக நல்ல பதிவு, எழுத்து நடை. கற்பனை உரையாடல் கலந்த கருத்து சொல்லும் பாங்கு.

ஒருவேளை அனல் காற்று, இன்செஸ்ட் கதைகள் படிக்கும் வயதை நாம் (நானும் நிங்களும்) கடந்து விட்டோமோ என்னவோ.

காதல், காமம் கலந்த கதைகள் ஒரு குறிப்பிஇட்ட வயதினருக்கு, அதே போலவே ஆன்மீக கதைகள் ஒரு குரிப்பிஇட்ட வயதினர்க்கு. விஞான ,துப்பறியும், திகில் கதைகள் ஒரு குறிப்பிட்ட வயதினர்க்கு.

முப்பது வயதில் இருக்கும் திருமணமான எனக்கு படிக்காதவன், வில்லு போன்ற படங்கள் பிடிக்க வில்லை, ஆனால் பதினம் வயதில் இருக்கும் என் அக்கா பய்யனுக்கு அந்த படங்கள் மிகவும் பிடிக்கின்றன.

எனக்கு வாரமலர் , அந்துமணி படிக்க முடியவில்லை, ஆனால் அக்கா பய்யன் விரும்பி படிக்கிறான்.

நான் சொல்ல வருவது நம் ரசனைகள், படிக்கும் ஆர்வம் மாறிக் கொண்டே வருகிறது, அதே மாற்றம் எழுத்தாளர்களுக்கு வரலாம், வராமல் போகலாம், அல்லது எழுத்தாளர்கள் அந்த பதின்மர் வயதினரை குறி வைத்தே எழுதி இருக்கலாம்.

காமம் திகில், ஆன்மிகம், நகைச்சுவை சார்ந்த கதைகள் எழுதுவது எழுத்தாளரின் உரிமை, படிப்பதும் படிக்காததும் நமது விருப்பம்.

குப்பன்_யாஹூ

Karthikeyan G said...

சாரு & ஜெமோ இடையே வித்யாசம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எதுக்கு இவ்வளவு பெரிய பதிவு?

போய்ச் சேர்ந்தான் கோபிகிருஷ்ணன்
வந்து நிற்கிறான் அய்யனார்

ரெண்டே வரி :)

வால்பையன் said...

அய்யனார்!
உரையாடலின் வீச்சில் என்னால் எதையுமே பகுத்தாராய முடியவில்லை! அதனால் இது அனல் காற்றின் விமர்சனாக பார்க்கமுடியவில்லை!
சாதாரண வாசகனின் பார்வையில் இருக்கும் எதிர்பார்ப்புகளின் தோல்வியே இந்த கணத்தில் நினைக்க வைக்கிறது!

புரியிற மாதிரி எழுதுறதுக்கு ரொம்ப நன்றி!

Unknown said...

அய்யனார், ஆரம்பிச்சாச்சா? அனல் காற்று என்னைப் பொறுத்தவரை நன்றாக எழுதப்பட்ட கதை. மேல் ஷாவனிஸம் எல்லாம் அதை அந்தக் கண்ணோட்டத்தில் படிக்கும் போது மீள்வாசிப்பு செய்யும் போது தென்படலாம். ஆனால் அதுதானே உண்மை? மனதை தொட்டு சொல்லுங்கள் உங்கள் ஆணாதிக்க மனோபாவத்தை உங்களால் மறைக்க முடியுமா? சதவீதங்கள் வேண்டுமானாலும் மாறுபடலாம், எல்லா ஆண்களும் மேல் ஷாவனிஸ்ட்தான். எனக்கு அக்கதையில் பிடிக்காத ஒரே விதயம் கொஞ்சம் ட்ராமிட்டாகான முடிவு, ஆனால் வேறு எப்படியும் அக்கதையை முடிக்க முடியாது. அய்யனார் முன்முடிவுகளுடன் தீவிரமான ஜெமோ எதிர்ப்புடன் அனக்காற்றை அணுகியுள்ளீர்கள், அதனால்தான் சுட்டுவிட்டது. ஜெமோ நல்ல எழுத்தாளர், இது தமிழ் கூறும் நல்லுலகம் மறுக்க முடியாது. உரையாடிலினியை கேட்டதாகச் சொல்லவும் ;))

Anonymous said...

அய்யனாரே நாடு தாங்காதுய்யா. இவ்ளோவ் கொலை வெறி எதுக்கு. சாந்தமா போயிடு ராசா.

குப்பன்.யாஹூ said...

சபாஷ் ஜ்யோவ்ராம் சுந்தர்.

திருவள்ளுவர் தோத்தார் போங்க.

இரண்டே வரில அற்புதமா சொல்லிட்டிங்க. நாங்க இருபது பக்கத்துல தடுமாறுவதை.

MSK / Saravana said...

அப்போ.. உரையாடலினி மறுபடியும் பேசறாங்களா.. இப்போத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு..

MSK / Saravana said...

//தமிழ்சூழல்ல விமர்சகர்கள் லாம் காணாம போய்ட்டாங்கடி.அப்படியே வர்ர விமர்சனங்களும் ஒரு தலைப் பட்சமா,முதுகு சொறிதலாத்தான் இருக்கு.இல்லனா அரைகுறை புரிதலா அபத்தமா இருக்கு//

அய்யோ சாமி.. எல்லா எலக்கியவாதிங்களும் இப்படிதான் சொல்றீங்க.. படிக்கற எங்களுக்குத்தான் மண்டை காயுது..

ஜெயமோகனையும், சாருவையும் சிலர் திட்டி தீர்க்கிறார்கள்.. சிலர் கொண்டாடுகிறார்கள்..

ஜெமோவின் ஒரு எழுத்துக்கூட நான் படிச்சதில்லை.. so... no comments..

சாரு - இப்போ கொஞ்சம் சரியாப்படல.. சமீபத்ய அவரின் பதிவுகள் கொஞ்சம் அவ்வளவா சரியில்லை.. [இல்லை.. ஒரு வேளை சமீபத்தில் ரமேஷ்-பிரேமின் பேச்சும் மறுபேச்சும் படித்த பின் இப்படி தோன்றுகிறதா என்றும் தெரியவில்லை..]

MSK / Saravana said...

//பயங்கர கசப்பா இருக்கு.எங்க பாத்தாலும் போலி.இலக்கியம்,அரசியல்,கலை,வாழ்வு ன்னு நம்ம சமூகம் வெறும் போலித்தனங்களால மட்டும்தான் நிறைஞ்சிருக்கான்னு கத்தனும் போல இருக்கு//

அதுதான் தல எனக்கும் வேணும்..

கூடவே.
Anonymous + வால்பையன் + உமாஷக்தி => எதுக்கும் இவங்க சொல்றதையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கோங்களேன்..

நீங்க தட்டையா எதுவும் சொல்லி, சாதாரணவங்க மாதிரி ஆகிடக்கூடாது என்று எனது பெரும்விருப்பம்.. தமிழில் நல்ல விமர்சகர்கள் வேணும்..

anujanya said...

'அனல் காற்று' இன்னும் படிக்கவில்லை. பதிவு மற்றும் பின்னூட்டங்களிலிருந்து அது என் போன்ற இளைஞர்களுக்கான கதை என்று புரிகிறது.

உமா சொல்வது சரின்னு படுது. நீங்க ஜெமொவ முன்முடிவோட தாக்குகிறீர்கள் என்பதே என் எண்ணமும். ஒரு வேளை எனக்கு ஜெமோவை மிகப் பிடித்திருப்பதால் அந்த எண்ணமோ என்னவோ. நேற்றும் வளருடன் இதே விவாதம். என்னை நாராகக் கிழித்தெடுக்கும் முன் ஆபிஸ் வேலை என்று சொல்லி 'சாட்' இல் இருந்து வெளியேறி விட்டேன் :).

சுந்தரின் வரிகள் அட்டகாசம். நீங்க எழுதுங்க. ஆனா உங்களைத் திட்டுவதற்கும் யாரையாவது கண்டுபிடிக்கணும் :)

அனுஜன்யா

ரௌத்ரன் said...

ம்ஹீம்..ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..மேல் சாவனிசம்,கீழ் சாவனிசம்,ஃபெமினிசம் ங்கற வார்த்தையெல்லாம் அலர்ஜியாயிடுச்சு..பேசாம Ma Mere படத்த பாருங்க..

அப்படியும் ஒன்னும் வேலைக்காகலனா என்னைய திட்டாதீங்க :)

தமிழ்நதி said...

"சுந்தரின் வரிகள் அட்டகாசம். நீங்க எழுதுங்க. ஆனா உங்களைத் திட்டுவதற்கும் யாரையாவது கண்டுபிடிக்கணும் :)"

என்ன அனுஜன்யா,

யாரிடமும் திட்டு வாங்க முடியாத அளவுக்குப் பெரிய ஆளா அய்யனார்:) எனக்கு நேரமில்லை. இல்லையானால் நானே திட்டுவேன்:) யார் அந்த உரையாடிலினி அய்யனார்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயோ, நான் எழுதுனது அப்ப திட்டு இல்லையா :)

நந்தா said...

யோவ் அய்யனாரு இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா?

நானே திட்டிட்டேன். இதுக்கு எதுக்கு தனியா ஆளு தேடறீங்க.

சென்ஷி said...

திட்டுறதுக்கெல்லாம் தனியா ஆளு தேடுற வேலை அய்யனாருக்கு தேவை கிடையாது.யாருக்கு எப்ப என்ன தோணுதோ அப்ப இஷ்டம் போல அய்சை திட்டிட்டு போகலாம்.

:-))

சுந்தரின் வரிகள் நச்சு.. (விசம்ன்னு சொல்லலைப்பா!)

சென்ஷி said...

எனக்கென்னமோ உமா ஷக்திதான் உங்களை நல்லா திட்டுறாங்கன்னு தோணுது. நானும் அவங்ககிட்ட ப்ராக் டீஸ் எடுத்துக்கப்போறேன்!

Featured Post

test

 test