Tuesday, July 24, 2007

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ -சில உரையாடல்கள் 1



டேய்! ஓஷோ ன்னு ஒருத்தர் புல் தானாகவே வளர்கிறது ன்ன்னு ஒரு புக் எழுதியிருக்கார் சிலது புரியல சிலது நல்லாருக்கு படிச்சி பாக்குறியா?

தினத்தந்தில அவர் செக்ஸ் சாமியார்னு போட்டிருந்தாங்களே!அடுத்த வாரம் பப்ளிக் எக்ஸாம் புல் வளருது பூ உதிர்துன்னு எதும் சொல்லிட்டிருக்காத ராஜேஷ் வா! படிக்கிற வேலய பாப்போம்..
0----------0----------------
மச்சான்! காமத்திலிருந்து கடவுளுக்குன்னு ஒரு புக் ஓஷோ சாமியார் எழுதியிருக்கார் என்னன்னவோ சொல்றார்டா செக்ஸ் தப்பில்லையாண்டா

மாமா! கண்ட புக்ஸ் லாம் படிச்சி கெட்டுப்போகாத பாலகுமாரன் படி.. சரி அத வுடு அகிலா இந்த பக்கம் வந்தாளா மோக முள் இன்னிக்கு எடுத்துட்டு வரேன்னா ஆளயே காணோம்…
0------------0---------------
அண்ணா! என்ன இது வீடு முழுக்க ஓஷோ போட்டோ? ஷெல்ப் ல அவ்ளோ புக்ஸ் இருக்கு ஏதோ 5000 ரூபாய்க்கு ஓஷோ புக்ஸ் வாங்கினிங்களாம்?
ஆமாண்டா நாளைக்கு காலைல 5 மணிக்கு எந்திரி டைனமிக் பண்ணலாம்
இந்த குளிர்ல 5 மணியா?:@ நீங்க பண்ணுங்க அடுத்த வாரம் வரும்போது பாக்கலாம்..
0------------0-----------------
ப்ளீஸ்! என்ன விட்டுட்டு போயிடாத ஹேமா! நீ இல்லன்னா நான் செத்திருவேன்
நான் உங்கூட வந்தா எங்க அப்பா அம்மா செத்திருவாங்க பரவாயில்லையா?
0-------------0---------------
உன் இழப்புகளை என்னால் தாங்க முடியவில்லை
உன் உள்ளங்க கையை விட மிருதுவான என் இதயத்திடம் கேட்டுப்பார்த்துவிட்டேன் அது சொல்லிற்று இறந்து போ என
0-------------0-------------
டேய் தம்பி! என்னடா இது ரூம் முழுக்க பேப்பர் எல்லாத்துலயும் ஏதோ கன்னாபின்னான்னு கிறுக்கியிருக்க?
உங்களுக்கு தெரியாதா நான் கவித எழுதுவேன்னு
நீ ஒரு கருமமும் எழுத வேணாம் இந்த வாரம் ரெண்டு நாள் லீவு போடு
திருச்சி போற நான் எல்லாம் புக் பண்ணிட்டேன்
என்னா திருச்சில?
ம்ம். ஓஷோ ஆசிரமம் போயிட்டு வா!
இல்ல முடியாது
ஒழுங்கா போ! கோவத்த கிளறாதே
0----------------0-------------------------
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் போகும் சாலையில் துவாக்குடி தாண்டி தனியாய் இயற்கை சூழலுடன் அமைந்திருக்கிறது ஓஷோ தர்மதீர்த்தா சன்னியாஸ் ஆசிரமம் ஸ்வாமி மோகன் பாரதி என்பவருக்கு சொந்தமானது.3 நாள் தியான முகாமும் ஒரு வார நோ மைண்ட் முகாமும் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.ஓரு வெள்ளிக்கிழமை மாலை அங்கே மூர்த்தியுடன் சென்றடைந்தேன்.தியான அறைக்கு போகும் வழியில் செருப்பு வைக்கும் இடத்தில் இவ்வாறு எழுதப்பட்ட ஒரு வாசகம்
Please leave your foot wear and mind here

முதலில் செயதது குண்டலினி தியானம்.தியானமென்றால் கண்ணை இருக்க மூடி உட்கார்ந்து சினிமா நடிகையை கனவு காண்பது என்கிற எண்ணத்திலிருந்து உடலை உலுக்கி அத்தோடு மனத்தையும் இணைக்கும் அற்புத சங்கிலி எனப் புரியவந்தது.

டுடுங் டுடுங்
டுடுங்க்..டுடுங் டுடுங்
டுடுங் டுடுங்க்..டுடுங் டுடுங் டுடுங்
டுடுங்க்..டுடுங். டுடுங் டுடுங் டுடுங்

மிகச்சீராய் ஆரம்பித்த ட்ரம்ஸ் இசை மெல்ல உச்சத்தை அடைகிறது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உதற வேண்டும் பின் இசையின் மாற்றத்திற்க்கேற்ப அசைந்து நடனமாடி இறுதியில் அமைதிப் பெருவெளியில் கலக்க வேண்டும்.உடலை உதறி மனத்தை உலுக்கிப்போடு பின் அமைதிப்படுத்தும் வழிமுறைகள் தான் பெரும்பாலான தியானங்கள்.முதல் தியானத்துக்குப் பின் சில பரவசங்களை,புத்துணர்வை மூளையும் உடலும் பெற்றது சூடான தேநீர்,சக நண்பர்களுடன் பந்தாட்டம், திறந்த வெளி பம்பு செட்டில் ஆனந்த குளியலுக்கிப்பின் சரியாய் 6 மணிக்கு white rope medidation வெள்ளை நிற அங்கி அல்லது வெள்ளை நிற ஆடையை பயன்படுத்த வேண்டும் அந்த ஆடையை வேறெந்த தியானத்திற்க்கும் பயன்படுத்தக்கூடாது ஓஷோவின் பிரசங்கங்கள் அந்த தியான இடைவெளியில் ஒளிபரப்பப்படும்.

அதற்க்குப் பின் ஜிப்ரிஷ் என்றொரு தியானம் நமக்கு தெரியாத மொழியைப் பேச வேண்டும் மனதில் என்னென்ன சொற்கள் மிகுந்து வருகிறதோ அதையெல்லாம் அதே வன்மத்தோடு வெளித்துப்ப வேண்டும் உரத்த குரலெடுத்து அழலாம்.. பைத்தியம் பிடித்தார்ப்போல் பெருங்குரலில் சிரிக்கலாம்.. சில பெண்கள் நீளமான குச்சியாலோ அல்லது தலையணை கொண்டோ சுவற்றை அடித்தபடி இருந்தனர்.சிறிது நடுங்கியபடி நானும் கண்ணை மூடிக்கொண்டு கத்தஆரம்பித்தேன்..
ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ,,
ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
கலப்கபக்க் ஜக்லச்ம்ன்ச்க்ட்க்ட்ம்ச்க்ச்க்
ட்டுடுடுடுடுடுடுட் டடுட்ம்ம்
டுடஜ்மச்ம்ச்க்ட்ம்ச்ட்
டனக்ட்க்டிக்க்ல்ல்ம்ச்ட்ல்ம்

கத்த கத்த தொண்டை வலித்தது உள்ளே ஏதோ கரைவது போலிருந்தது நெடுங்காலமாய் சேமித்து வைத்த துக்கம் பீறிட்டெழ பெருத்த குரலில் அழ ஆரம்பித்தேன் அரை மணி நேர கூச்சலுக்குப்பின் ஸ்டாப் என்கிற ஓசை சகலமும் அடங்கிப்போய் உள்வெளியின் மடிப்புகளில் நினைவு புதைந்து கொண்டது மீளவே வேண்டாத ஒரு இருப்பில் சகலமும் கரைந்து போனது தன் சொந்த இருப்பின் சுவையை ..நம் சொந்த இருப்பிடங்களை கண்டு கொள்ளமுடிந்தது.தியானம் முடிந்த பிறகு தொண்டையிலிருந்து பேச்சு வரவில்லை ஆனாலும் அடைப்புகள் திறந்து உள்ளிருந்த கழிவுகள் வெளியேறி சுத்தமாய் இருந்தது அகம்.இரவில் பத்து மணிக்கு மேல் அதிர வைக்கும் இசையை ஒலிக்கசெய்துவிட்டு உடலும் மனமும் பரவசத்தை எட்டும் வரை ஆடிக்கொண்டிருப்போம்.உடல் முழுக்க வியர்வையில் குளித்து அடுத்த அசைவை உடலின் பாகங்கள் எடுத்துவைக்கத் திராணியில்லாத் நிலையில் ஆட்டத்தை நிறுத்துவோம்.

(தொடரும்)

18 comments:

குசும்பன் said...

ஆம் அய்யனார் மிகவும் தவறாக புரிந்து கொள்ள பட்ட மனிதர், எனக்கு இவரை பற்றி என் சித்தப்பாதான் அறிமுகம் கொடுத்தார் என் 14 ஆவது வயதில், காமத்திலிருந்து கடவுளுக்கு, தாந்திரா, வெற்று படகு, நான் உனக்கு சொல்கிறேன் என்று பலவற்றை படித்தாலும் அவரை பற்றி தாகம் எடுத்துக்கொண்டே தான் இருக்கிறது.

இவரின் தியாண கிளாஸ் அட்டன் செய்தது இல்லை, ஆனால் புரிந்துக்கொள்ள மிகவும் கடினமான அற்புதமான மனிதர்.

இவரை சாமியார் என்ற வட்டத்துகுள் எல்லாம் அடைக்க முடியாது. என் system டெஸ்க் டாப்பில் இருக்கும் இவரது படத்தை பார்க்கும் பல நண்பர்கள் ஏய் யாரு இவரு உன் தாத்தாவா என்பார்கள், சிலர் ஏய் ஏன் டா செக்ஸ் சாமியார் படத்தை வச்சு இருக்கிறாய் என்பார்கள். என் பதில் சிரிப்பு ஒன்றாக தான் இருக்கும்.

Balaji-Paari said...

:)
கடற்கரை
--------
அலைகள் எழுதும் வரிகள்
மீண்டும் மீண்டும் எழுதப்படுகின்றன
ஒவ்வொரு முறையும் புத்தம் புதிதாக.

(இப்பதிவிற்கு நன்றிகள்)

Osai Chella said...

"vaanga saamy", "saappittachi saamy" enRu ellooraiyum saamiyaakkum mohan bharathi paRRiyum ezuthungkaL!!

Sridhar V said...

ஐம்புலன்களும் அடக்கி ஆளப்பட வேண்டியவையே என்று போதிக்கப்பட்டு வளர்ந்த சமூகத்தில் பலவீனங்கள் பிரதானப்பட்டு, மனக்கிளர்ச்சியும், குற்ற உணர்ச்சிகளும், பிராயச்சித்தங்களும் வைத்து பிழைப்பு நடத்தும் சாமியார்களுக்கு நடுவே அவர் மிகவும் வித்தியாசமானவர்தான். இன்று அவரைத் தொடர்ந்து பலர். மன அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதின் முக்கியத்துவத்தை அவர்தான் முதலில் அறிமுகப்படுத்தினார்.

அவரை படிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, அவரை சரியாக புரிந்து கொண்டவர்கள் மிகவும் சொற்பமே.

இத்தனைக்கும் நான் அவரைப் படித்தது மிகவும் சொற்பம். படிக்க தொடங்கியவுடன் ஒரு நிறைவு வந்து விடும். இரண்டாவது காரணம் அவர் எழுத்தை சந்தைபடுத்தியதில் இன்று அவர் பெயரில் பலரும் தங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம்.

அபி அப்பா said...

அய்ஸ்! நல்ல கட்டுரைய்யா, அது போல அவர் பிறந்த கிராமம் வீடு அங்கு நீ போய் வந்த அனுபவம் எல்லாம் சொல்லுய்யா!குட்!

Anonymous said...

உண்மைதான். ஆரம்பத்தில் எனது நண்பர்கள் வட்டத்திலும் இவர் செக்ஸ் சாமியார் என்று மட்டுமே பார்க்கப் பட்டார்.

இந்த இடுகையின் நோக்கம் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யனார்.

வடுவூர் குமார் said...

எடுத்த உடனே குண்டலினியா?

Ayyanar Viswanath said...

சரவணா
அடுத்த முறை விடுமுறைக்கு ஊருக்குப்போனால் தவறாது ஒரு தியான முகாமிற்க்கு போய்விட்டு வா!

புத்தகத்தின் மூலமாய் எதையும் பெறமுடியாது விஷய ஞானங்களைத் தவிர

Ayyanar Viswanath said...

பாரி சிறப்பான கவிதைக்கு நன்றி

தல!

போனா போவுது விடுங்க பாவம் ஏதோ கூப்பிடுட்டு போறார் :)
ரொம்ப நல்ல மனுசன்யா

Ayyanar Viswanath said...

/அவர் பெயரில் பலரும் தங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம். /

சரியா சொன்னீங்க வெங்கட் ஆங்கில புத்தகங்கள் சிறப்பாக இருக்கும்.தமிழ் மொழிபெயர்ப்பில் அத்தனை செறிவில்லை.ஓஷோவின் பிரசங்க ஒலி நாடாக்களை கேளுங்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளுதலே சிறந்தது.

Ayyanar Viswanath said...

அபி அப்பா

அந்த அனுபவங்களை எளிதா சொல்லிட முடியுது.எழுதத்தான் முடியல.விரைவில் எழுதுறேன்..நன்றி :)

Ayyanar Viswanath said...

மிக்க நன்றி நந்தா

குமார்

ஆமாம் குமார் ஆனால் அந்த குண்டலினிக்கும் இந்த குண்டலினிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

Anonymous said...

சிந்தனையாளர்களை ஒற்றை மேற்கோளுக்குள் அடக்குவது, நெடிந்துயர்ந்த விருட்சத்தை விதைக்கும் அடைக்க நினைப்பதை போல

- ஜெயமோகன்.

அய்யனார், நல்ல கட்டுரைய்யா. புரிதல் இல்லாம உருவாகற அபிப்பிராயம் ரொம்ப அபாயகரமானது. நம்ம சமூகம் முழுக்க அது தான் பரவி இருக்கு, பல விஷயங்கள குறித்து. ஓஷோவும் அதுல ஒன்னு... எளிதா சொல்லிட்டு போயிடறாங்க, செக்ஸ் சாமியார்னு.

கட்டுரையோட வடிவமும் நல்லா இருந்துது அய்யனார். நேத்து கைவசம் எதுவும் இல்லைன்ன, இவ்வளவு மேட்டர கைல வெச்சிக்கிட்டு?

குலவுசனப்பிரியன் said...

/sridhar venkat said...
அவர் பெயரில் பலரும் தங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம்.
/
தங்கள் பெயரில் அவருடைய கதைகளை சொல்லிக் கொண்டிருப்பதுதான் அதிகம். தமிழ் படங்களில் நகைச்சுவைக் காட்சிகளிலிருந்து (படையப்பா : அந்த உடை என்னோடது), "வாழும் கலை" வகுப்புகள் வரை பல விடயங்கள் ஒஷொவிடம் சுட்டதுதான்.

Ayyanar Viswanath said...

சித்
நேத்து உட்கார்ந்து எழுதிட்டம்ல :)

குலவுசனபிரியன் (புதுசா இருக்கு பேர்)

ம்ம்..இப்போ அதிகமா சம்பாதிக்கும் ஆசாமி களெல்லாம் ஓஷோ விடம் சுட்ட ஆளுங்கதான்.நித்யானந்தர் மட்டும்தான் வெளிப்படையா சொல்றார் மத்த கில்லிங்களெல்லாம் அவிங்களோடதுன்னுதில்ல சொல்லிக்கிறாங்க

தருமி said...

அவருடைய விஷய ஞானம் பிரமிப்பூட்டுவதாக இருக்கும். எப்படி இவ்வளவு கோர்வையாக இத்தனை விஷயங்களைச் சொல்ல முடிகிறது என்பதை நினைத்தும் பார்க்க முடியவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரது நகைச்சுவையுணர்வு மிகவும் பிடிக்கும்.

Ayyanar Viswanath said...

தருமி ஐயா

தாமதமான பதிலுக்கு மாப்பு ..உங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி மதுரையில் நான் இருந்த சொற்ப காலத்தில் நிறைய ஓஷோ நண்பர்கள் கிடைத்தார்கள்.தெப்பக்குளத்திற்க்கு எதிர்த்தார்ப்போல் இன்றும் காலையில் டைனமிக் செய்துகொண்டிருப்பவர்களை பார்க்கலாம்.ஓஷோவை புத்தக ரீதியாக அணுகாமல் தியான ரீதியில் அணுகினால் பிரயோசனம் உண்டு என்னளவில் :)

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Featured Post

test

 test