அவள்
சாதாரணமாய்
நடக்கும்போதே
முலைகள் குலுங்கும்
தாழ்முடி போட்ட
ஈரக்கூந்தல்
காட்டன் புடவையணிந்த
பிருஷ்டங்களை
முற்பகல் வரை
நனைத்துக் கொண்டிருக்கும்
பிற்பகலில்
பூனைச் சோம்பலாய்
புடவை விலகித்
தளிர் தொப்பூழ் காட்டும்
மலர்ந்த மாலையில்
முதலில் தென்படும் நட்சத்திரமாய்
முகம் ஜ்வலிக்கும்
இரவு ஆடைக்குள்
மொத்த மென்னுடலும்
சதா தளும்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருப்பதுதான்
அந்த நாளின்
மிகப் பதட்டமான தருணமாகவிருக்கும்
நள்ளிரவிற்குச் சற்று முன்பு
சன்னல்கள் அடைபடும்
எனக்காய்
விழித்திருக்கும்
கால்களற்ற
இரவின் மேசையில்
எண்ணற்றப் பந்துகள்
அசையாமல் காத்திருக்கும்
நீரிழந்த மீனாய்
பந்துகளோடு சேர்ந்து கொண்டு
மெல்லத் துடிக்க ஆரம்பிப்பேன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
2 comments:
முதலே சாய்க்கிறது.
arumai
Post a Comment