Thursday, January 6, 2011

தீவு




ஒருபோதும் திரும்பமுடியாத
இடத்திற்கு வந்துவிட்டோம்
நம் பாலுறுப்புகளையும் ஏற்கனவே
அறுந்தெறிந்துவிட்டாயிற்று
உடலின் ஒத்ததிர்வோ
தனியதிர்வோ
இனி நரம்புகளை
மலர்விக்கப் போவதில்லை
பனி வாரியலின்
கூர் அகல முனையாலும்
சாம்பல் மேடுகளின்
கடின மெளனங்களைப்
பிளக்க முடியவில்லை
உலகின் கடைசி
எச்சங்களாவதையாவது
தவிர்த்திருக்கலாம்
உபயோகப்படாத
வாரியலின் கூர்மையையும்
உன் கோணல் தலையையும்
பார்த்தபடி
தீவாவது குறித்து
யோசிக்கத் துவங்குகிறேன்.



ஓவியம் : வான்கோ

2 comments:

கோநா said...

மிகவும் நீண்ட பாலை இடைவெளிக்குப் பிறகான ஒரு கவிதைத் தீவு. தங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்த நீண்ட மின்னஞ்சல் ஒன்று தயங்கியபடியே தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது, முயற்சிக்கிறேன், அய்யனார் நீங்கள் ஒரு சமவெளி மான்.

ஸ்டாலின் குரு said...

அழகு

Featured Post

test

 test