Tuesday, December 15, 2009

அழுகை

பெருமழையின் சப்தங்களைப்
போலிருந்ததாய் சொன்னாள்
விசும்பலில் துவங்கி
கேவல்களாய் நிறைவுற்ற
சின்னஞ் சிறு சிம்பொனி
என முறுவலித்தாள்
பாறைப் பிளவிலிருந்து கசிந்த நதி
எனச் சொல்லிச் சிரித்தாள்
….
எதுவும் நினைவிலில்லை
நான் உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை
அவளின் பெருங்கருணை முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தேன்.

14 comments:

குசும்பன் said...

//பாலருந்திக் கொண்டிருந்தேன்.//

காப்பி, கப்பசினோ எல்லாம் டிரைசெஞ்சு பாரேன்.

Ken said...

ம்ம்ம்ம் :)

chandru / RVC said...

கவிதையை உணரமுடியுது அய்ஸ். ரொம்ப நல்லாயிருக்கு.

இளவட்டம் said...

ஹா ஹா ஹா...அட்டகாசம்!

வால்பையன் said...

உங்க டச்சிங் வர்ற மாதிரி ஒரு டெம்ப்ளெட் கிரியேட் பண்ணிகிட்டு இருக்கிங்க!

ஆனா அது நல்லதா கெட்டதான்னு எனக்கு தெரியல!தெரியாது!தெரிஞ்சுகவும் வேண்டாம்!

குப்பன்.யாஹூ said...

கவிதை வழக்கம் போல மிக அருமை.

உங்கள் போட்டோ எல்லாம் வலைப்பக்கத்தில் போட்டு கலக்கறீங்க. நிஜமும் நிழலும் (இனியாய் வாழ்வும்) இணையும் நேரம் வந்து விட்டது ;போல.

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்...

Mohan said...

கவிதை படித்துவிட்டு நானும் 'குழந்தையானேன்'

சென்ஷி said...

////பாலருந்திக் கொண்டிருந்தேன்.//

காப்பி, கப்பசினோ எல்லாம் டிரைசெஞ்சு பாரேன்.//

இதுக்குத்தான் நான் எப்பவும் ப்ளாக் டீ சாப்பிடறது :)

உயிரோடை said...

ச‌ரி ச‌ரி ரொம்ப‌ அழாதீங்க‌ க‌விதை ந‌ல்லா தான் இருக்கு

☀நான் ஆதவன்☀ said...

”நச்” சுன்னு இருக்கு கவிதை :)

ரௌத்ரன் said...

//விசும்பலில் துவங்கி
கேவல்களாய் நிறைவுற்ற
சின்னஞ் சிறு சிம்பொனி//



நல்லாருக்கு அய்யனார்.

மணிபாரதி துறையூர் said...

விழாவிற்கு சென்று பார்த்த உணர்வை கொண்டுவரும் வல்லமை உங்கள் எழுத்தில் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

MSK / Saravana said...

குழந்தைக்கு அப்படிதான் தோணும் இல்ல..

நல்லா இருக்கு தல கவிதை. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

Featured Post

test

 test