Friday, January 16, 2009

முலையுதிர்சிறகு



புறாவின் இறக்கைகளைப்போன்று
அவளுக்கு
இரண்டு முலைகள்
இருந்தன
அத்தனை மிருது
அத்தனை இதம்
அத்தனைக் குளிர்ச்சி
இடைவெளியில்லா
இடைவெளியில்
முகம் புதைத்துச் சொன்னேன்
”முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
முகம் விலக்கி
சொற்களைச் சேகரித்துக் கொண்டு
வந்த வழி மறைந்தாள்
விழிக்கையில்
காணக்கிடைத்தது
பால்கனியில்
ஓர் ஒற்றைச் சிறகு

18 comments:

பாண்டித்துரை said...

//ஓர் ஒற்றைச் சிறகு//

தனித்தலையும் ஏதோ ஒன்றை விட்டுச்செல்கிறது

தமிழன்-கறுப்பி... said...

நான் தான் முதலில் வந்திருக்கிறேன்..

தமிழன்-கறுப்பி... said...

எப்படி தல இப்படியெல்லாம் தோணுது உங்களுக்கு..!

தமிழன்-கறுப்பி... said...

\\
”முலைகளில் முகம் புதைப்பதென்பது உன்னதமானது”
\\

அதே அதே...:)

இராம்/Raam said...

arumai :)

Anonymous said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல :)

anujanya said...

அருமை அய்ஸ்.

@ சுந்தர்
//அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல :)//
பாம்பின் கால்....:)

அனுஜன்யா

மாதவராஜ் said...

பறவையின் இறகிலிருந்து பிரிந்த சிறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் எழுதி செல்கிறது என்று பிரமிள் கவிதை எழுதியிருந்தார். அந்த ஒற்றை சிறகு இது அல்ல.

வால்பையன் said...

//ஓர் ஒற்றைச் சிறகு//

ஒண்ண விட்டுட்டு போயிட்டாங்களா?
ஒண்ணும் மட்டும் வச்சிகிட்டு எப்படி அசிங்கமா இருக்காது!

ரௌத்ரன் said...

கவிதை மென்மையா இருக்குங்க :)

மாதவராஜ் said...

வால்பையன்!

ஒப்புக்கொள்கிறேன்....
உங்களுக்கு வால் இருப்பதை.

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே...

MSK / Saravana said...

தெய்வமே.. எங்கயோ போயிட்டீங்க..

Sanjai Gandhi said...

:))

Maniz said...

Its so poetic and erotic as well :)

மதன் said...

கவிதை அழகு தல..! ஆனா அது ஏன் பால்கனில..? கொஞ்சம் வீட்டுக்குள்ள இருந்துருக்கலாமோ..?:)

ஆதவா said...

ஹா...... கவிதை மிக அழகு அய்யனார்.

தேர்ந்த கவிதை நடை... தொடருங்கள்...

Vg said...

nice

Featured Post

test

 test