Sunday, March 10, 2013

பாரதிக்குப் பிறகு..


பாரதிக்குப் பிறகு மனுஷ்யபுத்ரன்தான் 
சாரு சொன்னார். இனியும் ஸொல்வாரா எனத் தெரியாது
பாரதிக்குப் பிறகு தேவதேவன்தான் 
ஜெமோ சொன்னார்.இனியும் ஸொல்வார்
பாரதிக்குப் பிறகு நீதான் மச்சி
நாக்குழறலாய் நண்பன் சொன்னது
அடுத்த குடியிலும் நிச்சயம் ஸொல்வான்
பாரதிக்குப் பிறகு நீதாண்டி 
நாக்குழறாமல் நானும் ஒரு 
கவிஞரிடம் ஸொன்ன நினைவு
அடுத்த முறையும் ஸொல்ல  தயார்தான்
அவள்தான் கேட்க விரும்பாமல் போய்விட்டாள்.                                                                                                                                      


·         இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு ஜாலி' யான மூடில் எழுதியது. சீரியசான மூடில் படித்தாலும் சரியாக இருப்பதுபோல் தோன்றியதால் இங்கே


1 comment:

உங்களில் ஒருவன் said...

எல்லோருக்குள்ளும் அச்சமில்லை என்று சொல்லி பாரதி ஆகா அசை தான் ஆனால் வாழ்வின் மனித இயல்பு அச்சுறுத்துவதால் அடுத்த பாரதிக்கான தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

Featured Post

test

 test