tag:blogger.com,1999:blog-5681835363020384666.post5943811886605244769..comments2023-10-24T12:28:28.330+04:00Comments on அய்யனார் விஸ்வநாத்: கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்குAyyanar Viswanathhttp://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5681835363020384666.post-27372958897986324822007-09-19T11:33:00.000+04:002007-09-19T11:33:00.000+04:00பிரசன்னா விரிவாய் எழுத முயற்சிக்கிறேன் நன்றி..பிரசன்னா விரிவாய் எழுத முயற்சிக்கிறேன் நன்றி..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-15401311749400450252007-09-19T11:32:00.000+04:002007-09-19T11:32:00.000+04:00ஆடுமாடு பெருமாள் முருகனின் கூளமாதாரியும் ஏறுவெயிலு...ஆடுமாடு <BR/>பெருமாள் முருகனின் கூளமாதாரியும் ஏறுவெயிலும் வாசித்திருக்கிறேன்.குறிப்பாய் ஏறுவெயிலில் ஏரி உடைப்பெடுக்கும் அத்தியாயத்தை அடிக்கடி படிப்பதுண்டு..தமிழ்செல்வியை இன்னும் படிக்கவில்லை நிச்சயம் தேடிப்பிடித்து படிக்கிறேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-13298897853876772892007-09-17T22:26:00.000+04:002007-09-17T22:26:00.000+04:00ஏதோ அவசரத்தில் சட்டென்று முடித்துவிட்டது போல இருக்...ஏதோ அவசரத்தில் சட்டென்று முடித்துவிட்டது போல இருக்கிறது பதிவு. இன்னும் எழுதியிருக்கலாம். புத்தகங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதவும்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-75340696878121455362007-09-16T16:18:00.000+04:002007-09-16T16:18:00.000+04:00மண்ணை வண்ணங்களாக குழைத்து எழுதப்படும் எழுத்துக்களி...மண்ணை வண்ணங்களாக குழைத்து எழுதப்படும் எழுத்துக்களில் மட்டுமே உயிர் இருப்பதாக நினைக்கிறேன். கண்மணி குணசேகரனின் கதைகளில் இருக்கிற ஆழமும், அழுத்தமும வெறும் மண்ணின் மனம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதில் ஆண்டாண்டுகளாக முங்கி கிடக்கும் மனிதர்களின் அடையாளம் பதிந்து கிடக்கிறது. முடிந்தால் இதையும் படியுங்கள். பெருமாள் முருகனின் கூள மாதாரி, தமிழ்செல்வியின் கீதாரி, அளம்...இன்னும் பட்டியல் இருக்கிறது. அடுத்து வருகிறேன்.<BR/>ஆடுமாடுஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-18766544101653465532007-09-15T13:47:00.000+04:002007-09-15T13:47:00.000+04:00வீரமணிஇமயத்தின் கோவேறு கழுதைகள் படித்திருக்கிறேன்....வீரமணி<BR/><BR/>இமயத்தின் கோவேறு கழுதைகள் படித்திருக்கிறேன்..எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்று..தமிழ்செல்வி இன்னும் படித்ததில்லை..கிட்டத்தட்ட உங்கள் பகுதியிலதான் நானும் வருவேன்..:)Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-59927992568188298702007-09-15T13:41:00.000+04:002007-09-15T13:41:00.000+04:00ஆழியூரான்ஆதண்டார் கோயில் குதிரை படித்ததில்லை..இனித...ஆழியூரான்<BR/>ஆதண்டார் கோயில் குதிரை படித்ததில்லை..இனிதான் தேட வேண்டும் படித்து முடித்ததும் மடலிடுகிறேன்Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-66864664042137412192007-09-15T13:17:00.000+04:002007-09-15T13:17:00.000+04:00வாசிஇந்தகால கட்டத்தில் எழுதப்படும் பிரதிகளை வாசகன்...வாசி<BR/>இந்தகால கட்டத்தில் எழுதப்படும் பிரதிகளை வாசகன் மட்டுமே தீர்மானிக்கிறான்.உங்களுக்கு எப்படி புரிகிறதோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்...எழுதப்படும் பிரதிகளுக்கும் எழுதுபவனுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை..நான் எனக்குறிப்பிட்டு எழுதப்படுபவை எல்லாம் அய்யனார் இல்லை..சொல்லப்போனால் எனக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தமே இல்லை..நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்..<BR/><BR/>தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-48150886867051432482007-09-15T13:11:00.000+04:002007-09-15T13:11:00.000+04:00தமிழ்நதிபகிர்தல்களுக்கு நன்றிதமிழ்நதி<BR/><BR/>பகிர்தல்களுக்கு நன்றிAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-28321718501638556672007-09-15T13:03:00.000+04:002007-09-15T13:03:00.000+04:00சுரேஷ்உங்கள் அறிமுகம் படித்தேன்..கண்மணி குணசேகரனின...சுரேஷ்<BR/>உங்கள் அறிமுகம் படித்தேன்..கண்மணி குணசேகரனின் எழுத்துக்களை முதன் முறையாய் வாசிக்கிறேன்..மிகவும் இணக்கமான மொழி நடை மிகவும் பிடித்திருக்கிறது<BR/><BR/>/ஒரு மத்திய அரசில் பணிபுரியும் கடைநிலைத் தொழிலாளிக்கு கிடைக்கும் பொருளாதார பாதுகாப்பும், நிம்மதியும் கூட ஒரு சிறு விவசாயிக்குக் கிடைக்காதது துரதிர்ஷடமே./<BR/><BR/>உண்மை..Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-85240038377110792572007-09-15T06:57:00.000+04:002007-09-15T06:57:00.000+04:00அய்யனார் அவர்களுக்கு வணக்கம்..கண்மணியின் அனை...அய்யனார் அவர்களுக்கு வணக்கம்..கண்மணியின் அனைத்துபடைப்புகளையும் உங்கள் பார்வையில்தான் நானும் பார்க்கிறேன்...அதேபோல் சு.தமிழ்செல்வியின் அனைத்து நாவல்களும் மிக நன்றாக இருக்கிறது....இமயத்தின் "செடல்" இதே பட்டியலில் வருகிறது ....எங்கள் பகுதியின் அனைத்து எழுத்தாளார்களும் மண்னை கவுச்சியோடு எடுத்து வந்து சேர்க்கிறார்கள் என்கிற பெருமை எங்களுக்கு இருக்கிறது அதை மேலும் உங்கள் பதிவு உறுதி செய்கிறது.நன்றி அய்யானார்....<BR/><BR/>வீரமணிவீரமணிhttps://www.blogger.com/profile/01388211558824474953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-87444293602084645892007-09-15T06:42:00.000+04:002007-09-15T06:42:00.000+04:00எனக்கு மிகப்பிடித்த சிறுகதை கண்மணி குணசேகரனுடையது....எனக்கு மிகப்பிடித்த சிறுகதை கண்மணி குணசேகரனுடையது. இயல்பான மொழி நடையும், சென்னையையொத்த வட்டார மொழியும் அவரது கதைகளில் எங்கெங்கும் காணக்கிடைக்கும். கண்மணியின் 'ஆதண்டாங்கோயில் குதிரை'(இந்த தலைப்புக் குறித்து சின்ன சந்தேகம் இருக்கிறது..) வாசித்திருக்கிறீர்களா..?பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-24341012243108766102007-09-15T01:59:00.000+04:002007-09-15T01:59:00.000+04:00நல்ல தகவல் அய்யனார் புத்தகம் கிடைத்தால் பார்ப்போம்...நல்ல தகவல் அய்யனார் <BR/>புத்தகம் கிடைத்தால் பார்ப்போம்.<BR/>அதெல்லாம் சரி இதற்கு முந்தைய சில பதிவுகளில் என்ன கூற்று என்பதே சரிவர புரியவில்லை பின் வருபவைகளை விளக்குங்கள் ??<BR/><BR/>தனிமையின் இசையா இம்சையா?<BR/>பிறழ்வு- அப்படின்னா என்ன?<BR/>கருத்தொற்றுமை இல்லையெனில் நட்பென்பதில்லை இருப்பினும் அது ஒரு மண் பூச்சு. ஒன்று விரியும் அல்லது கரையும்.கருத்தொற்றுமை உள்ள நண்பர்கள் அனைவரிடமும் நாம் ஒரே மாதரி பழகுவதில்லை.<BR/>\\உன்னிடம் பேசும்போது நான் சொற்களைத் தேர்ந்தெடுப்பதில்லை என்னை அப்படியே விட்டுவிடுகிறேன்\\ <BR/> இது மிகைப்பட்டுவிட்டதோ எனவெண்ணுகிறது என் மனம் ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் நாம் சுட்டிக்காட்டும்பொழுது அதன் வீச்சு நம் புலனுக்கு எட்டுமுன்னரே வார்த்தை வெளிவந்துவிடுகிறது. ‘ யாகாவாராயினும்...’ <BR/>\\ஒரு உண்மையான உள்மனத்தை மிகச் சரியாய் புரிந்துகொள்வது எத்தனை அற்புதமானதென்பது அவளுக்குப் புரியவில்லை.\\<BR/>உள் மனதை புரிந்து கொள்வது எளிதல்ல. மற்றும் புரிந்த சிலரோடு மட்டும் கலாய்து மடிவதில்லை இவ்வுடல். வாழ் நெடுங்காலமும் வினைகள் எத்தனையோ செய்வதிருக்க, முகங்கள் எத்தனையோ காணவிருக்க, பழகவிருக்க, புரிந்த சிலரை மட்டும் கண்டு கலாய்து மடிவதில்லென்ன பயன்<BR/>\\ பெருங்கதையாடல்களால் மூடப்பட்டிருக்கும் இந்த தமிழ்பரப்பை ஏன் ஒட்டு மொத்தமாய் தீக்கிரையாக்க கூடாது?வெறும் சிறுகதையாடல்களை கொண்டு மட்டும் இந்த இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தைய சரித்திரப் பொய்களை கட்டவிழ்த்துவிட முடியுமென்பதில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது.\\<BR/>இது அனாவசியமானதெனெண்கிறேன் உண்மையல்லாதது என்றும் வரலாறாகாது, அது வெறும் கதையே இதில் சிறிது பெரிதென்பதேன்? ஒரு சிறு பொய் வரலாற்றையே தலைகீழாக புரட்டிய சம்பவங்களுள்ளன. பொய் இன்றல்லவெனில் என்றாவது ஒரு நாள் வெளிவரவேண்டும், வரும்.<BR/>\\ நானே என் கைப்பட 'அரசியல் பேசாதீர்' என எழுதியும் வைத்ததாய் நினைவு\\<BR/>அது கடைக்குத்தான் பொருந்தும் மேலும் வியாபாரம் நடக்குமிடத்தில் அரசியல் பேசினால் வியாபாரம்தான் பாதிக்கும் உம் தந்தை சரியாகத்தான் செய்திருக்கிறார் அதன் அர்த்தம் அரசியலே பேசாதே என்பதல்ல.<BR/>\\அரசியல் ஒரு சாக்கடை கல்லெறிந்தால் மேலே தெறிக்கும் என எவனோ ஒரு புனிதன் சொன்னதுதான் என் சிறு பிராயங்களில் வேத வாக்காய் இருந்து வந்தது.அந்தப்புனிதன் யாரென்று தெரியவில்லை இப்போது மட்டும் அவனை அடையாளம் கண்டு கொண்டால் எத்தனை வயதாகியிருப்பினும் அவனை செருப்பாலடிப்பேன்\\<BR/>தாங்கள் அரசியல் என்பதை உங்கள் கண்ணோட்டத்திலிருந்தே பாருங்கள் நிகழ் கால அரசியல் சாக்கடையில்லையா? எங்கும் அப்படித்தான். சுத்தம் செய்வது தனி மனித காரியமா? பண்டைய காலங்களில் கல்வியறிவில்லாதவர்கள் அதிகமாய் இருந்த அரசியலிலும் தற்பொழுது கல்வியறிவுள்ளவர் அதிகமாய் உள்ளனர். இருப்பினும் நாறுவதேன்? மக்களாட்சி என்றால் என்னவன்பதை நாம் சரியாக புரிந்து கொண்டோமா என்னும் அய்யம் எனக்குள்ளது. <BR/>\\அன்பென்பதின் சரியான பெயர் சுயநலமாய் மட்டும்தான் இருக்கமுடியும்\\<BR/>விளக்கமுடியுமா அய்யனார்? மிருகங்களிடம் அன்பு செலுத்திப்பாருங்கள். கண்ணை மூடி வாலாட்டும். மானிட குலம் எங்கிருந்து வாலை கொண்டு வரும். நம்மிடம் உள்ள பேச்சாற்றலை ஏன் உபயோகப்படுத்தக்கூடாது என எண்ணுகிறீர்கள். தூய அன்பு என்னவென்பதை இன்னுமா கண்டுகொள்ள இயலவில்லை? அகத்தின் அழகு... மிகவும் சரியானதே அய்யனார்.<BR/> \\எனக்கொரு அறிவு சீவி தோழியிருந்தாள்\\<BR/> \\பேசிய இரண்டாம் மணி நேரத்திற்குள் இருவரும் தத்தம் ஆடைகளை களைந்தெறிந்து விட்டோம்\\<BR/>அறிவு ஜீவி என்றால் மட்டுமா ஆடை களைந்திருக்க முடியும்? மிருகங்களிடமிருந்து வேறு பட்டு காணத்தான் மானிடன் உடையணிந்திருப்பானோ என்ற ஒரு கேள்வி என்னுள் எழுந்ததுண்டு இல்லையென்றுதான் எண்ணுகிறேன். மனிதனைத்தவிற மற்ற எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையாகவே ஆடை (தோல் அமைப்பு) உள்ளதால் தேவையற்றதாகிறது.<BR/><BR/>\\ஒரு நாள் எல்லாம் சலித்துபோனது மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு அவள் எங்கேயோ போய்விட்டாள்\\<BR/>(இது கற்பனையா அல்லது உள் மனதின் பிதற்றலா என என் புலன்களுக்கு எட்டவில்லை) ஏன் எங்கேயோ போய்விட்டாள்? ஆடையணிந்த எத்தனையோ உறவுகள் இன்னும் நீடிக்கவில்லையா? எதுவும் மிகையானால் கசப்புதானே?<BR/><BR/>\\ நிர்வாணத்தில், கனவின் கைப்பிடியை நெகிழ விட்ட வெட்டவெளியில், தனக்கான பயங்களின் பிறழ்வில் உண்மை மிகுந்த வெறுமைகளோடு சலிப்புகளை பதிவிக்கிறது. இருப்பினும் உண்மையை நேசிக்க ஆரம்பி.உண்மை மட்டுமே உண்மையானது.\\<BR/>உண்மையே நிர்வாணம்தான் எல்லா பொய்களும் கலைந்த நிலை, அதற்கென ஆடை களைய வேண்டுமென்பதில்லை.<BR/>\\ மறைமுகமாய் நிர்வாணத்தின் மீது வெறுப்பை அல்லது ஈடுபாடின்மையை புனைந்து கொள்ள உள்மனதிற்கு ஊக்கிகளாக இருந்தது தமிழ்சினிமாவும் புனிதர்களும் மட்டும்தான்\\<BR/> நிஜ வாழ்கையையும் மாயா தோற்றத்தையும் பிரித்தறியா மனதின் பிதற்றலிது.சிவாhttps://www.blogger.com/profile/17666152865061349387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-47893459051779378002007-09-14T10:13:00.000+04:002007-09-14T10:13:00.000+04:00இந்தப் பதிவின் முதல் பந்தி என்னைப் பாதித்தது. பிறந...இந்தப் பதிவின் முதல் பந்தி என்னைப் பாதித்தது. பிறந்த மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து எங்கெங்கோ பரவியிருக்கும் ஈழத்தமிழர்கள் வாழ்நிலங்களின் மொழியையும் பேச்சுவழக்கையும் கற்றுக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது. நாளடைவில் சொந்த மொழியும், பேச்சு அடையாளமும் இழந்துபோவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இப்போதெல்லாம் 'கதைப்பது'என்பது தேய்ந்து 'பேசுவது'என்றாகிவிட்ட நிலை மாறல் மிரட்சியைத் தருகிறது. ஏதோ ஒரு பத்தி எதையோ எழுதத் தூண்டியது எழுதினேன் அவ்வளவே.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-85314267783486826352007-09-13T16:35:00.000+04:002007-09-13T16:35:00.000+04:00அய்யனார், பதிவிற்கு நன்றி. இப்போதுதான் இந்தப் புத்...அய்யனார், <BR/><BR/>பதிவிற்கு நன்றி. இப்போதுதான் இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>முதல் சிறுகதையே (கொடி பாதை) சிறப்பாக இருக்கிறது. அரை மணி நேரத்திற்குள் பக்கத்து நகரத்திற்கு சென்றடைய முடிகிற அதே நாகரிக உலகில்தான், இன்னொரு மூலையில் பிரசவத்திற்கு மருத்துவமைன செல்லக்கூடிய அவசர நிலையிலும் குண்டும் குழியுமான சாலையில் நெரிசலான பேருந்தில் செல்கிற கிராமத்து மக்களின் உலகம் முகத்தில் அறைகிறது. <BR/><BR/>இவரின் 'கோரை' என்கிற நாவலைப் பற்றிய என்னுடைய பார்வையை வாசிக்க:<BR/><BR/>http://www.maraththadi.com/article.asp?id=1341பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681835363020384666.post-37341357351206364252007-09-13T15:04:00.000+04:002007-09-13T15:04:00.000+04:00testtestAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com