Friday, January 9, 2015

வம்சி வெளியீடுகள் 2015





1. நிலம் - பவா செல்லதுரை

பவா வின் நிலம் தொகுப்பை கையெழுத்துப் பிரதியாகவும், கணினிப் பிரதியாகவும் சென்ற வருடமே வாசித்திருந்தேன். மேலும் சில மனிதர்களை இந்நூலில் சேர்த்தால் கச்சிதமாகவிருக்கும் என நானும் ஷைலஜாக்காவும் நம்பினோம். பவா நிதானமாக இன்னும் சில மனிதர்களை இந்நூலில் கொண்டு வந்திருக்கிறார்.

2. கவர்னரின் ஹெலிகாப்டர் - எஸ்.கே.பி. கருணா

கருணாவின் கட்டுரைகள் சுவாரசியமானவை. திருவண்ணாமலை நகரத்தின் இன்னொரு முகத்தை இவரின் சிறுகதைகளும் கட்டுரைகளும் காட்சிப்படுத்துகின்றன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்  அனைத்தும் நல்ல சிறுகதைக்கான எல்லாக் கூறுகளும் உடையவை. எங்கள் ஊரிலிருந்து இன்னொரு எழுத்தாளர் என மகிழ்ந்து கொள்ளும்படியான மொழியும் விவரணையும் கொண்டவரின் முதல் தொகுப்பு.



3. புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -பாரதிமணி

பல பரிமாணங்களையும் நெடிய அனுபவங்களையும் கொண்ட பாரதிமணி அவர்களின் குறிப்புகளாலான சுயசரிதையாக இந்நூல் வடிவம் பெற்றிருக்கிறது. பாரதி மணி அவர்களை நேரில் சந்தித்திராத சந்திக்க விருப்பம் கொண்டிருக்கும் பலருக்கும் இத் தொகுப்பு வடிகாலாக இருக்கும்.



4. யாதுமாகி - எம்.ஏ.சுசீலா

அசடனை மொழி பெயர்த்த எம்.ஏ.சுசீலா அவர்களின் முதல் நாவல்.


5. தெக்கத்தி ஆத்மாக்கள் - பா. ஜெயப்பிரகாசம்

6. எட்டு கதைகள் - இராஜேந்திர சோழன்

7. கவிஞர் சக்தி ஜோதியின் கவிதைத் தொகுப்புகள்

8. விரிசலுக்குப் பிறகு - பத்மநாபபுரம் அரவிந்தன்

9. 7.83 ஹெர்ட்ஸ் - க.சுதாகர்

புத்தகத் திருவிழாவில் வம்சி பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 582 மற்றும் 583



No comments:

Featured Post

test

 test