
சொற்களால் உருவாக்கிய உலகின்
கடைசிச் சொல்லையும்
தீர்த்துவிட்டிருந்தோம்
மெளனத்துடனான உரையாடல்
சாத்தியப்படவேயில்லை
இசைத்தட்டிலிருந்து
வழியும் ஆன்மாவின் இசையை
இரக்கமற்று
நிறுத்திவிட்டு
விலகி நடந்தோம்
மலைகள் நகரும் என்பதை
அந்தக் கணம் வரை
நம்பியிருக்கவில்லை
3 comments:
Post a Comment