Friday, March 11, 2011

அத்தியாயம் நான்கு அ. ஜிகினா வதம்

கண் விழித்துப் பார்த்தபோது சன்னல் வழியாய் புல்வெளியில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. யாரையும் காணோம். குளிர் அவர்களுக்குப் பதிலாய் அறையில் படுத்திருந்தது. நான் மிக அழுக்காய் இருந்ததாய் உணர்ந்தேன். இந்த சுத்தமான அறையில் நான் நாற்றமடிப்பதாய் உணரத் துவங்கினேன். எழுந்து ஹாலிற்கு வந்தேன். புதிய உடைகள் பிரிக்கப்படாது சோபாவில் கிடந்தன. கதவைத் திறந்து கொண்டு வெளியில் போக கூசியது. குளியலறையில் நுழைந்து வெந்நீரை ஷவரில் வழியவிட்டு குளித்தேன். உடம்பிலுள்ள அத்தனை அழுக்கையும் சுரண்டி எடுத்து வீசும் வேகம் பிறந்தது. அதே போல் உடம்பிற்கு உள்ளேயும் இருக்கும் உறுப்புகளையும் சுத்தப் படுத்திக் கொள்ள முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்! என நினைத்துக் கொண்டேன். குளித்தபடியே. பற்களை அழுத்தி தேய்த்தேன். மது நாற்றத்தை நினைத்தாலே குடலைப் பிறட்டியது. மது நாற்றம், சிகரெட் நாற்றம் ச்சீ! தூ! என்றபடியே பற்களை சுத்தமாய் தேய்ந்தேன். நாக்கு தொண்டை எல்லாமும் சப்தமாய் சுத்தமானது. தலையிலிருந்து நீர் சொட்ட, நிர்வாணமாய் குளியலறைக் கண்ணாடி முன் நின்றேன். அப்பழுக்கில்லாத சுத்தமான உடலாய் ஆனாற் போலிருந்தது. பசி பயங்கரமாய் நடனமிட்டது. லேசாய் குளிரில் உடல் நடுங்கியது. ஹாலிற்கு வந்து பிரிக்கப்படாத ஆடைக் குவியல்களில் சிவப்பு நிற நெக் பனியனையும் நீல நிற அரைக்கால் டவுசரையும் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டேன். ப்ளாஸ்கில் டீ ஆறாமல் இருந்து. கோப்பையில் சரித்துக் கொண்டு, முன் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். புல்வெளி பெஞ்சில் தாமஸ் அமர்ந்து கொண்டிருந்தான். குணா காட்டேஜின் பின்புறம் மரங்களைப் பார்த்தபடி புகைத்துக் கொண்டிருந்தான். சீராளனைக் காணவில்லை. நான் தாமஸ் அருகில் போய் அமர்ந்தேன்.

“சாரி பா கொஞ்சம் தடுமாறிட்டேன்”
தாமஸ் புன்னகைத்தான். “ஒண்ணும் நடந்திடலயே” என்றான்

பனிப்புகை மரங்களின் மீது கவிழ்ந்திருந்தது. குளிர் உடலை ஊடுருவிக் கொண்டிருந்தது. எழுந்து நடக்க ஆரம்பித்தேன். புல்வெளியைத் தாண்டி ஹோட்டலின் ரிசப்ஷனுக்காய் நடந்தேன். மனதிற்குள் திடீரெனப் பெண் துணை இருந்தால் இந்தக் குளிருக்கு நன்றாக இருக்குமெனத் தோன்றியது. ஹோட்டல் காபி ஷாப்பில் போய் அமர்ந்தேன். தூரத்தில் சீராளன் பேரரிடம் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் புன்னகைத்தான். அருகில் வருமாறு கை அசைத்தான். அவன் இருக்கைக்குப் போனேன்.

“இங்க நிலவரம் எப்படின்னு விசாரிச்சிட்டு இருக்கேன். எல்லாமே கிடைக்குதாம். கேரளா ஸ்பெசலாம், என்ன சொல்ற நைட் புக் பண்ணிடலாமா? என இளித்தான்.
“பண்ணிடு சீராளா ரொம்ப நாளாச்சி”
“நைட் நாம ரெண்டு பேரும் பப்புக்கு வந்திடலாம். இங்கயே செலக்ட் பண்ணிட்டு இங்கயே தங்கிடலாம். நம்ம காட்டேஜிக்கு வேணாம், ரெண்டு யோக்கியசிகாமணிங்க இருக்காங்க” என்றான்
சரி எனப் புன்னகைத்தேன்.

இருவருமாய் திரும்ப காட்டேஜிற்கு வந்தோம். அனைவரும் ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தோம். சரியாய் பத்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. எழுந்து போய் கதவைத் திறந்தேன். கருப்பு பர்தா அணிந்த பெண்ணுருவம் சடாரென உள்ளே நுழைந்து கதவை அவசரமாய் தாழிட்டது. பின் எனக்காய் திரும்பி முகத்திரையை விலக்கியது.
ஜிகினா!
நான் சற்று திடுக்கிட்டேன். ஜிகினா என்றேன்.
”ஹாய் குட்டிபையா எப்படி இருக்க?” என நெருங்கி வந்து லேசாய் அணைத்துக் கொண்டாள்.
“நல்லாருக்கேன்” என்றபடியே விலக்கினேன்.
பர்தாவை முழுவதுமாய் கழற்றி அருகிலிருந்த சோபாவில் போட்டாள். சிவப்பு நிற ஷிபான் புடவை அணிந்திருந்தாள். கையில்லாத ஜாக்கெட். சந்தன நிறம். சரிந்த பெரு முலைகள். திமிர்ந்த பின் புறம். ஐம்பது வயதென்றால் எவனும் நம்ப மாட்டான். ஆனால் ஐம்பது வயதுதான். மீண்டும் வந்து கட்டிக் கொண்டாள்.
“மூணு வருஷம் ஆச்சில்ல” என்றாள்.
நண்பர்கள் என அறிமுகப்படுத்தினேன். கைக்குலுக்கினாள்.
“எப்படி நான் இங்க இருக்கிறது தெரியும்?” என்றேன்
”காபி ஷாப்ல பாத்தேன். சட்னு நினைவுக்கு வரல. கொஞ்ச நேரம் யோசிச்சதும், நீ நினைவுக்கு வந்த. மி த பாலோபையிங்” என சத்தமாய் சிரித்தாள். ஏற்கனவே அவள் உற்சாக மிகுதியில் சப்தமாய்த்தான் பேசிக்கொண்டிருந்தாள்.
“நீ குண்டடிச்சிட்ட” என்றபடியே வயிறில் செல்லமாய் தட்டினாள்.
“என்னை நினைவு வச்சிருக்கிறது ஆச்சரியமா இருக்கு ஜிகினா” என்றேன்
“அடப்பாவி என்ன இப்படி சொல்லிட்ட, நீ மட்டும் வந்து என்ன காப்பாத்தலனா செத்தே போயிருப்பேன். அதுக்கு பிறகு உனக்கு நன்றி சொல்லனும்னு, உன் துப்பறியும் கம்பெனில கேட்டேன். உன்ன பத்தின எந்த தகவலையும் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. நீ இந்திய இராணுவத்துக்கு கூட வேலை செய்யுறியாமே! அப்புடியா? என்றாள்
எனக்கு அவளின் மீது பரிதாபமும் அன்பும் ஒரே சமயத்தில் எழுந்தது.
மையமாய் புன்னகைத்தேன்.

அவள் உடனே மற்ற மூவரையும் பார்த்து நாக்கை லேசாய் கடித்துக் கொண்டாள். “சாரி, சாரி நீ சீக்ரெட் ஏஜெண்ட்னு இவங்களுக்கு தெரியாதோ?” என நெருங்கி வந்து காதில் கிசுகிசுத்தாள்.
“நான் அந்த வேலைய விட்டுட்டேன் ஜிகினா. இப்ப இவங்கதான் என் பார்ட்னர்ஸ். பிசினெஸ் ஆரம்பிச்சிருக்கோம்.”
“ஓ! நல்ல விஷயம் குட்டிப்பையா. எவ்ளோ நாள்தான் ரிஸ்கான வேலைல இருக்கிறது.”
“சரி உட்கார்” என்றேன்.
“யெஸ்” என்றபடியே அமர்ந்தாள்
“என்ன இருக்கு சாப்ட ?எனக்கு நல்ல பசி”
“ரெமி மார்டின்”
“ஓ நோ, அது அப்புறம்”
“என்ன வேணும் சொல்”
“ஏதாச்சும் ஸ்நாக்ஸ்”
ரிசப்சனை அழைத்து மெனு சொன்னேன்.
”நீ எப்படி திடீர்னு இங்க?” என்றேன்
”துணிகடை கெழடுக்கு இங்க வந்தாதான் மூடு வருதாம். அதான். நாளைக்குதான் ப்ளான். சென்னைல இப்ப கூட யாரும் இல்ல. ரொம்ப போர் அடிக்கவே ஒரு நாள் முன்ன கிளம்பி வந்தேன்”
”அக்கா எங்க?”
”அவ யுஎஸ்ல செட்டிலாகிட்டா. ஆக்சுவலி ரூம் நாளைல இருந்துதான். அந்த ஆள்க்கு போன் பண்ணி இன்னிக்கு மாத்துன்னு சொல்லலாம்னு காபி ஷாப்ல உட்கார்ந்து இருந்தேன். அப்பதான் உன்ன பாத்தேன். நல்லவேள போன் பண்ணல. நான் இன்னிக்கு உன் கூடதான் தங்க போறேன்” என கண்ணடித்தாள்.
”அப்ப நீ இங்க வந்தது அந்த ஆள்க்கு தெரியாதா?”
”தெரியாது” என்றாள்
சீராளனை அழைத்து ”இவன் உன் தீவிர இரசிகன்” என்றேன்
”அப்ப அவங்கலாம் இல்லையா?” என்றாள். தாமஸ் புன்னகைத்தான். குணா இறுக்கமாகவே இருந்தான்
சீராளன் அருகில் வந்து நின்று புன்னகைத்தான்
ஜிகினா அவனை தனக்காய் அழைத்து காதில் கிசுகிசுத்தாள்.
சீராளன் சிரித்துக் கொண்டே ”என்ன இப்படி கேட்டுடீங்க போன மாசம் கூட ஒரு முறை.. உங்கள நெனச்சித்தான் ஹிஹி” என்றான்
”அடப்பாவி” எனப் பொய்யாய் வாய் பொத்திக் கொண்டாள்
”இன்னுமா தமிழ்நாடு என்ன நினைக்குது?” என என்னைப் பார்த்துக் கேட்டாள்
”அது நினைக்கும் நீ செத்தபின்னாலும்” எனச் சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
ம்ஹிம் என்றாள்
சீராளன் சற்றுத் தைரியமாகி அவளின் பின்புறத்தை தொட்டுப் பார்த்தான்.
“இதுக்கே சொத்த எழுதி தரலாம்” என்றான்.
ஜிகினா திரும்பி அவன் சட்டையை பிடித்து ”ஒழுங்கா எழுதிக் கொடுத்திடு” என்றாள். சீராளன் ஜிகினாவை சோபாவில் தள்ளி அவள் மீது பாய்ந்தான்.
“ஓ நோ நோ” என சிணுங்கினாள்
குணா எழுந்து படுக்கையறைக்குப் போனான்.
ஜிகினா சீராளனை தள்ளி விட்டு எழுந்து முந்தானையை தேடிப் பிடித்து இடுப்பில் சொருகியபடி எனக்காய் வந்தாள்.

பேரர் கதவைத் தட்டினான். ஜிகினாவை உள்ளே போகச் சொன்னேன். சோபாவில் கிடந்த பர்தாவை எடுத்துக் கொண்டு ஜிகினா என் படுக்கையறைக்குப் போய் தாழிட்டுக் கொண்டாள். ஒரு பெரிய ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தான் அதில் எல்லா வகையான மதுவும் இருந்தது. ஹாட் பாக்சில் இறைச்சி துண்டாய் நறுக்கப்பட்டு, காரமாய் பொரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு ஆவி பறந்து கொண்டிருந்தது. நாங்கள் பரிமாறிக் கொள்வதாய் சொல்லிவிட்டு பேரரை அனுப்பிவிட்டு கதவைச் சாத்தினேன். ஜிகினாவையும் குணாவையும் அழைத்தேன்.



ஹாலில் வட்டமாய் அமர்ந்தோம். குணா ஜிகினாவைப் பார்த்து புன்னகைத்தான். குணாவிடம் சொன்னேன்
”தமிழ்நாடே இருபது வருடங்களுக்கு முன்பு இவள் காலடியில் கிடந்தது” என்றேன். ஜிகினா சிரித்தாள்.
“என்ன குடிக்கலாம்”.
“குளிருக்கு ரம் என்றாள்.
“இல்ல குளிருக்கு நீ” என அவளை முத்தமிட்டேன். தாமஸ் கண்ணாடித் தம்ளர்களில் கருப்புநிற ரம்மை வார்த்தான். ரம்மும் எங்களைக் குடித்தது. ஜிகினா தன் ஷிபான் புடவையை கழற்றி எறிந்தாள்
”ரம் உள்ள போன உடனே சூடாகிடுச்சி கசகசன்னு இருக்கு” என்றாள். அவளின் பெரு முலைகள் சிறிய ஜாக்கெட்டினுள் திமிறிக் கொண்டிருந்தன. சிவப்புக் காட்டன் பாவாடையும் முட்டி வரை ஏறியிருந்தது. நான் அவளை அள்ளிக் கொண்டு படுக்கையறையின் கதவை சாத்தினேன். ஜிகினாவுடன் எனக்கிது முதல் முறை இல்லைதான் என்றாலும் நான் முழுமையாய் அவளினுள் இயங்கினேன். திரவம் வெளியானுதும், புதைக் குழி இது என்கிற சுளிப்புகள் ஓரமாய் துளிர்த்தன. ஜட்டியுடன் வெளியில் வந்தேன். சற்று நேரத்தில் ஜிகினா என் சிவப்பு பனியனை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.

மீண்டும் குடிக்க ஆரம்பித்தோம். குணா டிவியை உயிர்ப்பித்தான். அதில் ஏதோ ஒரு குத்துப் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. ஜிகினா எழுந்தாள் ”அவ என் சுண்டு விரலுக்கு கூட ஈடாகமாட்டா, இந்த பாட்டுக்கு நான் ஆடுரம் பார்” என டிவியின் முன்னால் போய் காலகற்றி நின்றாள். பாட்டின் இரண்டாவது பாதியிலிருந்து ஆடத் துவங்கினாள். வளைந்து நெளித்து சுழித்து பாட்டின் இசைக்கு பிசகாமல் ஆடிக் கொண்டிருந்தாள். சீராளன் எழுந்து போய் அவள் அணிந்திருந்த பனியனை கத்தியால் கிழித்து அவளின் உடலிலிருந்து தூக்கி எறிந்தான் அறையின் மஞ்சள் வெளிச்சத்தில் போதை எல்லாரையும் நனைத்திருக்க, ஜிகினாவின் தொள தொள உடல் ஆடைகளற்று குதித்துக் கொண்டிருந்தது பாட்டு முடிந்ததும் அவள் நின்றாள். சீராளன் அடக்க மாட்டாமல் ஜிகினாவை அள்ளியெடுத்து சோபாவில் கிடத்தினான்.

“நான் உள்ள போ” என்றதற்கு இருவருமே ஒரே நேரத்தில் ”மாட்டோம்” எனச் சொல்லி சிரித்தார்கள். சீராளன் ஜிகினாவை மிக மென்மையாயும் ஆழமாயும் புணர்ந்தான். நாங்கள் குடித்த படியே பார்த்துக் கொண்டிருந்தோம். சீராளனின் வேகம் சீராய் அதிகரித்து உச்சத்தில் குறியை வெளியிலெடுத்து ஜிகினாவின் சதை குலுங்கும் தொப்பையில் பீய்ச்சினாள். ஏய் ச்சீஈ என சிணுங்கியபடியே துடைத்தாள். சீராளன் மீண்டும் வந்து குடிக்க ஆரம்பித்தான். ஜிகினா கால்களையகற்றியபடி சோபாவில் படுத்த வாக்கில் மதுவை தொண்டைக்குள் சரித்துக் கொண்டாள். குணாவைப் பார்த்து நடுவிரலால் அழைத்தாள்.
“ஏய் பாடிகாட் இங்க வா. காட்டான் மாதிரி இருக்க வந்து விடு வா” என சீண்டினாள்.

குணா எழுந்து அவளுக்காய் சென்றான். நாங்கள் ஆவலாய் அவன் புணரப் போவதை பார்க்க விரும்பினோம். குணா சோபாவின் பக்க வாட்டிலிருந்த ரம் புட்டியை எடுத்தான். யாரும் எதிர்பார்க்க வண்ணம் ஜிகினாவின் தலையில் அப்புட்டியை உடைத்தான். அனைவரும் பதறினோம். அய்யோஓ எனக் கத்தின அவளின் வாயை ஒரு கையினால் அடைத்து, உடைந்த பாட்டிலை அவளின் அடிவயிற்றில் ஆழமாய் சொருகினான், நாங்கள் அதிர்ந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டது. ஜிகினா வாய் பிளந்து சோபாவிலிருந்து மடங்கி கீழே சரிந்தாள். குணா எச்சிலைக் காறி அவளின் முகத்தில் துப்பி ”தெவுடியா” என்றான்.

சீராளன் குளியலறைக்கு சென்று வாளியில் தண்ணீர் கொண்டு வந்தான். என் கந்தலான சிவப்பு பனியனைக் கொண்டு சோபாவில், தரையில் தேங்கியிருந்த இரத்தத்தை துடைக்க ஆரம்பித்தான். நான் ஹாலில் இரைந்திருந்த மது புட்டிகளை, தம்ளர்களை, உணவை ஒழுங்க படுத்த ஆரம்பித்தேன். தாமஸ் உள்ளே இருந்து ஒரு போர்வையைக் கொண்டு வந்து ஜிகினா உடலை முழுவதுமாய் மூடி தலைப்பக்கமும் கால்பக்கமும் நைலான் கயிறைக் கொண்டு கட்டினான். இரத்த வாடை குப்பென அறை நிறைத்தது. உடலை கூடத்தில் கிடத்திவிட்டு, டைனிங்க் டேபிளில் அமர்ந்து மெளனமாய் சாப்பிட்டோம். மேலும் குடித்தோம். குணா தன் இரத்த ஆடைகளை கழற்றிப் போட்டான் ஒரு பாலிதீன் பையில் அவளின் ஆடைகளையும் சேர்த்துத் திணித்தோம்.

பாலீதீன் பையை சமயலறைக்கு எடுத்துப் போனான் சீராளன். சற்று நேரத்தில் துணி கருகும் வாடை அறையை நிறைத்தது. நானும் குணாவும் உடலை தூக்கிக் கொண்டு போய் வீட்டின் பின் புறம் கிடத்தினோம். குணா ஒரு வாளி நிறையத் தண்ணீரை ஹாலில் ஊற்றினான். சன்னல் கதவு எல்லாவற்றையும் திறந்து வைத்தேன். அவரவர் நிலைகளில் சற்று நேரம் அமர்ந்திருந்தோம்.
”குணா வண்டிய திருப்பி ரிவர்ஸ்ல வை” என்றேன்..

நானும் தாமசும் கொண்டு வந்திருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் பக்கம் போனோம். சீராளன் இன்னொரு அகலமான பெட்ஷீட்டை கோணிப்பையாக்கினான். உடலை முதலில் நான்கு துண்டாக்கினோம். பிறகு எட்டாய் பதினாறாய் வெட்டினோம், குடலும் சதையும் உடல் துண்டுகளும் அந்த போதையிலும் வயிற்றைப் பிரட்டியது. குணா துண்டிக்கப்பட்ட தலையின் முகத்தை தரையில் தேய்த்து சிதைத்தான். எல்லாவற்றையும் சீராளன் வீடியோ எடுத்தான். பெட்ஷீட்டினால் பை போல செய்து உடல் துண்டுகளை போட்டுக் கட்டினோம். நானும் தாமசுமாய் தூக்கி வந்து டிக்கியில் கிடத்தினோம். சீராளனை வீட்டிலிருக்க சொன்னோம். வீட்டை இன்னும் ஒரு முறை கழுவச் சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினோம்.

பதட்டம் பயம் எதுவும் இல்லாமல் இருந்தது. தாமஸ் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். வண்டி சீராக சென்று கொண்டிருந்தது. மிகக் குறுகலான வளைவுகளை குணா நேர்த்தியாய் கடந்தான். ஒரு வளைவில் நிறுத்தினான். ”இது அகல பாதாளம். ஒரு துண்ட இங்க போடு” என்றான். பையை திறந்து ஒரு துண்டை தூக்கி பள்ளத்தில் எறிந்தேன். வண்டி நகர்ந்தது.


ஓவியம்: salvador dali

மேலும்

3 comments:

சிவக்குமரன் said...

ம்ம்ம்ம்.........

Nithi said...

உங்கள் கதை அருமை வாழ்த்துக்கள்.......

trjprakash said...

ok...........sollunka.

Featured Post

test

 test