Tuesday, May 25, 2010

வதை


நான் சகலத்தையும் வெறுக்கிறேன்
போலவே சகலமும்
பிறரை நம்ப வைத்துக்
கழுத்தறுக்கிறேன்
போலவே பிறரும்
எவருடனும் பேசப் பிடிப்பதில்லை
போலவே எவரும்

அருவியிலிருந்து குதித்து விடலாம்
விலங்கின் இரையாகிவிடலாம்
நீரில் அல்லது தீயில் பாயலாம்
மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்

திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது

14 comments:

வால்பையன் said...

//மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்//


இதை மட்டும் நான் பண்ணிகிறேன்!
மத்ததையெல்லாம் நீங்களே பண்ணிகோங்க!

ராம்ஜி_யாஹூ said...

wow excellent, can feel your touch.

Unknown said...

ஏன் இவ்வளவு சோகம்/கோபம் அய்யனார்?

பத்மா said...

வதை தான் .மூலத்தை கண்டு பிடித்தால் சரியாகிவிடும் :)) no pun intended

தமிழன்-கறுப்பி... said...

எவருக்கும்...என்றிருக்கலாமோ.



கவிதைக்கான மனோநிலையோடு இருப்பதே ஒருவிதமான வதைதானே அய்யனார், ஆனால் நீங்க அதை கட்டாயமா அனுபவிச்சே ஆகணும்.

:)

VELU.G said...

போலவே கவிதையும் நன்றாய் இருக்கிறது

Ashok D said...

:)

Unknown said...

இப்படி உன்னால்தான் எழுத முடியும்..திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்' கிம் கி டுக் திரைப்படத்தை பார்த்த உணர்வு இக்கவிதை தருகிறது. குறிப்பாக ‘தி ஐல்' படம் ஏனோ நினைவுக்கு வருகிறது. .ஏதோ ஒரு மன அவசத்திற்குள்ளாகுகிறது இக்கவிதை..வதைபட்டதால்தான் வதைக்க முடிகிறது, அப்படித்தானே அய்யனார்?

ஹேமா said...

வதை வதைதான்.வார்தைகள் கொண்டு வதை சொல்வது
மிகக் கஸ்டம்.
என்றாலும் சொல்லியிருக்கிறீர்கள்.

நேசமித்ரன் said...

//மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்

திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது//

செதுக்கப் படும் வதை

சிவாஜி சங்கர் said...

Nalla irukkunga.. :)

சுப. முத்துக்குமார் said...

எல்லோருக்கும் இருக்கும் வதை, மிகச்சிலரே உணர்ந்த வதை. நன்றாயிருக்கிறது.

//திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது//

வார்த்தை துண்டானதின் காரணம்... புரியவில்லை. சொல்றீங்களா?

Ayyanar Viswanath said...

முத்துக் குமார்

இது கொஞ்சம் பழைய யுக்திதான்
இரு துண்டாவதை எழுத்தில் காட்சிப்படுத்துவது
துண்
டாகிறது
:)

சுப. முத்துக்குமார் said...

நகுலனின்

//உலகத்தில் சும்மா இருப்பது
தான் குதூகலமாக
இருக்கிறது//

-போல் தானே?

விளக்கத்திற்கும் தங்கள் நேரத்திற்கும் நன்றி அய்யனார்.

Featured Post

test

 test