
முதன் மழைத்துளியை
அண்ணாந்து வானம் பார்த்து
முகத்தில் வாங்கி
சரியாய் பதினோரு மாதங்கள் ஆயிற்று
உன்னை முத்தமிடும்போது நினைத்துக்கொண்டேன்
கடைசியாய் ஒரு பெண்ணை முத்தமிட்டது
ஆறு வருடங்களுக்கு முன்பென..
முதல் முத்தத்தின் பரவசங்களோடும்
பயங்களோடும்
நீ விழி மூடிக்கொண்ட இடைவெளியில்
விழித்துக்கொண்டது
முத்தம் பழகிய பசித்த நாவுகள்
எத்தனை முறை நனைந்தாலும் அலுப்பதே இல்லை
இந்த முத்த குளி(வி)யல் மட்டும்
5 comments:
Post a Comment