Monday, September 10, 2007

எழுதிச் செல்லும் விலங்கு



தலை வெடித்து விடும் போலிருக்கிறது.ஒரே சீராய் சென்று கொண்டிருக்கும் நாட்களிலிருந்து பிறழ்ந்து என்றாவதொரு நாள் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இல்லை.ஆனால் வாழ்கிழிய சொல்லிக்கொள்வேன் ஒரே மாதிரியாய் இருக்க விரும்புவதில்லையென. மாற்றங்களை விரும்புபவனாய் நானே புனைந்து கொண்டதெல்லாம் எத்தனை அபத்தம்!எதுவும் மாறாதிருப்பது மிகவும் ஆசுவாசமானது.நிம்மதியாய் உள்ளிழுத்து விடும் காற்றைப் போன்றது.இன்றைய என் உணவிலோ, பயணத்திலோ, உறக்கத்திலோ எந்த மாற்றங்களும் இல்லாதிருப்பதும் நாளை இதே போன்ற ஒன்றினை என்னால் செய்ய முடியுமென்ற நம்பிக்கையோடு தூங்க செல்வதும் லேசில் யாருக்கும் வாய்ப்பதில்லை.
----------***----------------
பொதுப்பரப்பில் உலவுவதுதான் எத்தனை அசெளகரியம்..எனக்கான தனித்தன்மை குலைந்து போகிறது..தனித் தன்மையென்பது முன்பிருந்ததா?இப்போதிருக்கிறதா என்பதெல்லாம் தனிக்கதை இருப்பினும் என் இருப்பு பொதுப்படுகிறது ..ஜிகினா துணிகளை சுற்றியபடி இந்த மேடையில் நான் ஆடிக்கொண்டிருப்பதில் எனக்கு முன்பிருந்த வசீகரம் இப்போதில்லை.எல்லாக் கருமத்தையும் தலைமுழுகி விட்டு எங்காவது ஓடிவிடலாமா?
----------***----------------
எந்த ஒரு நொடி எனக்கான எல்லாக் கிளைத்தல்களையும் துண்டித்துவிட தூண்டுகிறதென்பது இதுவரை தெரியவில்லை.அந்த ஒரு நொடியை அந்த கணத்தில் வெறுக்க நேரிட்டாலும் பிறகெப்பாவது யோசிக்கையில் கிளைத்தல்களை அவ்வப்போது துண்டிப்பது செழிப்பான வளர்ச்சிக்கு உதவுமென்பதில் சந்தேகமில்லை.ஆனால் இந்த செழிப்பான வளர்ச்சி மட்டும் உன்னை எங்கிட்டுச் செல்லப்போகிறது என்பதற்கு என்னிடம் பதில்கள் இல்லை.பொதுவாய் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் நின்று கொண்டிருப்பதை விட சென்றுகொண்டிருப்பது மேலென….இதை யார் சொன்னது கல்யாணியா?
----------***----------------
சரியாய் தூங்காமல போன அடுத்த நாள் மதியம்..அரைப்போதையும் முழுசாய் தெளிந்த நள்ளிரவு..விடுமுறை நாளில் விழித்துக்கொண்ட அதிகாலை..இந்த மூன்று பொழுதுகளிலேயும் எழுதப்படும் கவிதை எல்லாருக்கும் பிடித்து தொலையலாம்.
மனம்
அகம்
உள்
வெளி
லூசி
பைத்தியமாதல்
----------***----------------
இந்த மனம் தொலைந்த கிறுக்கல்களுக்கு கீழ்கண்டவைகளை காரணமாய் சொல்லலாம்
1.புத்தகங்கள்
2.திரைப்படங்கள்
3.குடிகார நண்பர்கள்
4.பெண்கள்
5.துரோகிகள் (பெண்களுக்கடுத்து ஏன் துரோகிகள் என எழுத தோன்றுகிறது?)
6.முதுகில் குத்துவோர்
7.காறி உமிழ்வோர்
8.தோழிகள்
9.காதலிகள்
10.பழைய காதலி
11.புதிய காதலி
12.என்றைன்றுக்குமான காதல்
13.பல்வேறு புரிதல்களுடனான அன்பு
14.பன்முகம் கொண்ட உண்மை
15.ஜார்ஜ் லூயி போர்ஹே
16.பெண்ணியம்
17.விளிம்பு
18.மய்யம்
19.கூர்முனை
20.முன் தீர்மானங்கள்
21.கட்டவிழ்ப்பு
22.அலைவு
23.பிறழ்வு
24.எதுவுமில்லாது போதல்

அத்தோடு

கொக்கிகள் தளர்த்தப்படும் ப்ரா
----------***----------------
இதிலிருந்து மீண்டு வருவதற்கான மீட்சிகள் இவையென இதைத் துய்த்து கொண்டிருப்பவர்களால் சொல்லப்படுகிறது.

1.யாரையவது நேசி
2.அன்பு நிஜமானது
3.வாழ்வு நிஜமானது
4.காதலி / காதலிக்கப்படு
5.கல்யாணம் செய்து கொள்
6.பிள்ளை பெற்றுக்கொள்
7.சம்பாதிப்பதை சேமி
8.லோன் போடு
9.வீடு கட்டு
10.ஆபிசுல எவளாவது மாட்னா செட்டப் ஒண்ணு வச்சிக்கோ
11.என்ஜாய் லைஃப் மாமா!
----------***----------------
எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருக்கிறது என் விலங்கு
----------***----------------

13 comments:

பாரதி தம்பி said...

என்ன ஆச்சு..? பனாரமா க்ளப் லீவா..?

Unknown said...

//ஒரே சீராய் சென்று கொண்டிருக்கும் நாட்களிலிருந்து பிறழ்ந்து என்றாவதொரு நாள் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இல்லை//
நான் தயாராயிருக்கிறேன். நாளைக்காவது உங்கள் எழுத்து முழுதும் புரிந்து இரசிக்க வேண்டும். :))

கதிர் said...

டேய் கதிரு என்னடா ஊரு இது எல்லா தெருவும் ஒரே மாதிரி இருக்குது. என்ன எழவு ஊருடா இது. கருமாந்திரம் புடிச்ச ஊருடா, நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியலடா. நான் தொலைஞ்சிட்டனு நினைக்கிறேன். என்னை எனக்கே பிடிக்கலடா. என்னை எப்படியாவது ரூமுக்கு கூட்டிகிட்டு போ. வெய்யில் வேற மண்டைய பொளக்குது. சரி சரி வேணாம் நீ வர வேணாம் நான் இப்படியே எதையாச்சும் பிடிச்சி என் ரூமுக்கு போயிடறேன். என்னை யாரும் தேடாதிங்க. நீ வர வேணாம்.
நான் போறேன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//தலை வெடித்து விடும் போலிருக்கிறது./

ஆமா! இவரு எஸ்.ஜே.சூர்யா!
அய்யனாரு,இப்படியே எழுதிக்கிட்டே இரு ஒருநாளைக்கு கண்டிப்பா தலை வெடிக்கத்தான் போகுது!:)

//நாளைக்காவது உங்கள் எழுத்து முழுதும் புரிந்து இரசிக்க வேண்டும். :))
//

சுல்தான்! நீங்க இந்த ஆள் கவிதைனு எழுதுற இந்தப் பக்கங்களுக்குப் புதுசா! அதான் நம்பிக்கையோட இருக்கீங்க!

நாங்க ஒரு குரூப் அய்யனார் எழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து காத்துக்கிட்டுத் தான் இருக்கோம்:)ஆனா புரியத்தான் மாட்டேங்குது! ரெம்ப கேள்வி கேட்டா காட்டுகுள்ள கூட்டிட்டுப் போய் புலிகளின் பிளிரல் கேக்க வச்சே பயமுறுத்துவாரு!


அன்புடன்...
சரவணன்.

சிவா said...

\\நிம்மதியாய் உள்ளிழுத்து விடும் காற்றைப் போன்றது\\
அந்த காற்றுக்கும் ஒரு வாசமுண்டு அது மாறும்.
\\எனக்கான தனித்தன்மை குலைந்து போகிறது\\
ரூம பூட்டிக்கிட்டு 2 நாள் தூங்காமல் இருக்க முயற்சிக்கவும்
\\ஜிகினா துணிகளை\\ எந்த ஜிகினா துணி?
\\கிளைத்தல்களை அவ்வப்போது துண்டிப்பது\\
துண்டிப்பதா தூண்டுவதா?

என்னப்பா திடீர்னு விரக்தி? ஆழியூரான். said...\????

கோபிநாத் said...

\\ தம்பி said...
டேய் கதிரு என்னடா ஊரு இது எல்லா தெருவும் ஒரே மாதிரி இருக்குது. என்ன எழவு ஊருடா இது. கருமாந்திரம் புடிச்ச ஊருடா, நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியலடா. நான் தொலைஞ்சிட்டனு நினைக்கிறேன். என்னை எனக்கே பிடிக்கலடா. என்னை எப்படியாவது ரூமுக்கு கூட்டிகிட்டு போ. வெய்யில் வேற மண்டைய பொளக்குது. சரி சரி வேணாம் நீ வர வேணாம் நான் இப்படியே எதையாச்சும் பிடிச்சி என் ரூமுக்கு போயிடறேன். என்னை யாரும் தேடாதிங்க. நீ வர வேணாம்.
நான் போறேன். \\

நான் அப்போவே சொன்னோன் அங்கையே விட்டுட்டு வந்துடுன்னு...இப்ப பார்த்தியா

கோபிநாத் said...

\\நாங்க ஒரு குரூப் அய்யனார் எழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து காத்துக்கிட்டுத் தான் இருக்கோம்:)ஆனா புரியத்தான் மாட்டேங்குது! ரெம்ப கேள்வி கேட்டா காட்டுகுள்ள கூட்டிட்டுப் போய் புலிகளின் பிளிரல் கேக்க வச்சே பயமுறுத்துவாரு!\\

:-)))))))))

Unknown said...

// (பெண்களுக்கடுத்து ஏன் துரோகிகள் என எழுத தோன்றுகிறது?) //

நீங்கள் ஆணாக இருப்பதால் அல்லது ஆண் என்ற Thought sphere க்குள் மட்டுமே இருப்பதால்.

//கொக்கிகள் தளர்த்தப்படும் ப்ரா//

:-))
அதென்ன கொக்கிகள் தளர்த்தப்படும் ப்ரா-வில் அவ்வளவு காதல் ? இன்னொரு பதிவிலும் நீங்கள் இதை சொன்னதாக நினைவு .
நிர்வாணம் அலுத்துவிட்டதா அய்யனார்? :-))

Ayyanar Viswanath said...

/நீங்கள் ஆணாக இருப்பதால் அல்லது ஆண் என்ற Thought sphere க்குள் மட்டுமே இருப்பதால்./

உண்மைதான் பலூன் மாமா..பெண்ணூரிமை,பெண்ணியம் என்பதெல்லாம் பேச்சுக்காக மட்டும்தான் எனத் தோன்றுகிறது.ஆழ்மனதில் எப்போதும் விட்டு நீங்கிவிடாது ஆணெனும் நினைப்பு...

அது ஒரு குறியீடு.. தமிழ் ஆண் மனங்களை கிளர்த்த நமது வெகுசன ஊடகங்கள் கண்டெடுத்த வடிவம் தான் ப்ரா..அதுவும் தமிழ் சினிமாக்களில் கொக்கிகள் தளர்த்துவதை மட்டும் காண்பிப்பது என்பது அக உலகின் மீது வீசப்படும் அமிலம் ..இங்கு சிதைவுறும் காரனிகளை பற்றி பேசும்போது இக்குறியீட்டை என்னால் தவிர்க்க இயலவில்லை..

Unknown said...

// அது ஒரு குறியீடு.. தமிழ் ஆண் மனங்களை கிளர்த்த நமது வெகுசன ஊடகங்கள் கண்டெடுத்த வடிவம் தான் ப்ரா..அதுவும் தமிழ் சினிமாக்களில் கொக்கிகள் தளர்த்துவதை மட்டும் காண்பிப்பது என்பது அக உலகின் மீது வீசப்படும் அமிலம் ..//

தமிழ் சினிமாவின் (பெரும்பாலான இந்திய படங்கள் அப்படித்தான் என்று எண்ணம்) வக்கிரம் உலகம் அறிந்தது.


"இந்தியப் படங்களில் வரும் (குத்தாட்ட) "மூவ்" கள் மிகச்சிறந்த "புணர்வு" முறைகள், அவைகள் ஆகச் சிறந்த மேற்கத்திய போர்னோகிராபியை தூக்கிச்சாப்பிடக் கூடியவை."---- இது எனது அமெரிக்க நண்பரின் வார்த்தை.

இதற்காகவே இந்தி/தமிழ் படங்களின் பாட்டு வீடியோக்களை நிறைய வாங்கி வைத்து இருக்கிறார்.

"உங்களின் சினிமா ஏன் உங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை? மனைவியை பொதுவில் முத்தமிடக்கூட தயங்கும் உங்களின் சினிமா ஏன் வேறு ஒரு துருவத்தில் உழல்கிறது ? " ---என்பது அவரின் கேள்வி.

"பாலியல் வறட்சி.... அதை கனவாக வியாபாரம் செய்கிறர்கள்...கனவுகளுடனே செத்தும் போகிறோம்...நாங்கள்" ...என்பதுதான் எனது பதில். :-((

**

சேலையைக் கட்டிக் கொண்டு (கலாச்சாரமாம் ??) குத்தாட்டம் ஆடுவதில் உள்ள வக்கிரம் , நீச்சல் குளத்தில் என்னுடன் இருக்கும் சக மேற்கத்திய பெண்ணின் ஒரு சான் உடையில் இல்லை. இயல்பாக இருக்கும் அவளிடம் நான் கண்ணோக்கிப் பேச முடிகிறது. சேலையுடன் "ஊறுகாய் இருக்கு, தயிர் வேண்டும்" என்று கேட்கும் சினிமா பெண்ணின் வக்கிரம் கூசுகிறது. கொடுமையிலும் கொடுமையாக குழந்தைகள் அந்த பாட்டிற்கு கூத்துக் கட்டி ஆடுவது ... :-(((

**
ஆதிகாலம் தொட்டு இந்த சிலேடை இருக்கிறது இல்லை என்று சொல்லவில்லை. "கயா கனியா கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா" என்பது குத்தாட்டத்துடன் வரவில்லை.அதானால் அதை இரசிக்க முடிந்தது.

**
பிரா-கொக்கிகளை அவிழ்த்து விட்டு ஆடும் வக்கிரமும் , (சுஜாதா வசனத்தில்) "ஜிப்பை" அவிழ்த்து விட்டுக் கொண்டும் தெருவில் போவதும்தான் கவர்ச்சி என்று ஆகி விட்டதோ?

அனைவரிடமும் காமம் இருக்கிறது. அதற்காக கூடிவாழும் உலகில் ஊடகங்களுக்கு சில பொறுப்புகள் உண்டு.

**
எனக்கு வயதாகி விட்டதோ ?

Ayyanar Viswanath said...

/எனக்கு வயதாகி விட்டதோ ? /

நிச்சயமாக இல்லை பலூன் மாமா..மறைமுகமாய் ஒவ்வொரு இந்திய ஆணும் ஊடகங்களின் மூலம் காயடிக்கபடுவதினை யாரும் ஒத்துக்கொள்வதில்லை கலாச்சாரம் புனிதம் எனும் வெவ்வேறு பெயர்களில் தனக்குத்தானே குரூர தனிமை முகத்தினோடு பொதுவெளியில் புத்தனாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

இலக்கியப் பரப்பைப் பொறுத்தவரை நெற்றி சுருங்காது அப்பட்டமான உடல்மொழியை அதன் உண்மைகளோடு ஒத்துக்கொண்டு படிக்கும்போது நம்மை மறைமுகமாய் பிடித்த சனி தொலைய நேரிடலாம்.

பகிர்தல்களுக்கு மிக்க நன்றி பலுன் மாமா

Jazeela said...

தலை வெடித்து விடுமென்று நீங்க ஆரம்பிக்கிறீங்க. படிச்சு முடித்ததும் அதை எங்களுக்கு தந்துடுறீங்க :-) //.பெண்கள்
5.துரோகிகள் (பெண்களுக்கடுத்து ஏன் துரோகிகள் என எழுத தோன்றுகிறது?)// ஏன்னா பெண்கள் பக்கத்தில் ஆண்களை பற்றிதானே நினைவுக்கு வரும் அதனால.

thiru said...

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
"உங்களின் சினிமா ஏன் உங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை? மனைவியை பொதுவில் முத்தமிடக்கூட தயங்கும் உங்களின் சினிமா ஏன் வேறு ஒரு துருவத்தில் உழல்கிறது ? " ---என்பது அவரின் கேள்வி.//

உங்கள் நாட்டில் காதலிக்கும் ஒவ்வொருவரும் ஆடல், பாடலில் தான் வெளிப்படுத்துவார்களா என இந்திய சினிமா பார்த்த அயல்நாட்டு நண்பர் கேட்டார்.

வாழ்க்கையை பிரதிபலிக்காத 'கொ'கலை இங்கு காசு பார்க்க மட்டுமே பயன்படுகிறது. பொழுதுபோக்கு என இருக்கும் ஊடகத்தை ஏன் சீரியசாக பார்க்கிறீர்கள் இது ஒரு 'வாதம்'. பொழுதே இல்லாதவனுக்கு எதை போக்குவதாம்?

Featured Post

test

 test